முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் என்ன Fair & Lovely ன்னு நினைச்சியாடா?!


காலாடா! காலாவேதாண்டா !

காலா படம் பார்த்தபின் பூமியின் மேல் அரை அடி உயர மிதப்பில் நடை போடும் நட்புகளே, இன்னும் டிக்கெட் கிடைக்காத வெறுப்பில் / சோகத்தில் கூடுதலாய் கட்டிங் போட ப்ளான் பண்ணும் சகாக்களே, இதெல்லாம் எத்தன பாத்திருப்பம், நெட்டில பாத்துக்கலாம் என்று ஈஸி கோயிங் கோவிந்துகளே! (Just rhyming க்காக மட்டுமே; உள் குத்து இல்லிங்கோ!), சில நிமிடம் ஒதுக்கி இதைப்படியுங்கள்:

ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளம் கருப்பு, அவர்கள் பொங்கினால் சிவப்பு என உருவகப்படுத்தி பிழைப்பை நடத்தும் அனைவரும் ஏனையா வெளுத்த விளம்பரங்களை மட்டும் நம்பி ஏமாறிக்கொண்டே இருக்கிறீர்?

நம் ஊடக விளம்பரங்களில் இதுவரையில் நம் மண்ணின் மக்களாகிய ஒரு கருப்பனையோ, கருப்பியையோ எந்த ஒரு விளம்பரத்திலாவது பாசிடிவ் போர்ட்ரேயல் கண்டிருக்கிறோமா?

கோக், பெப்சியை இளநீர், நொங்கு கொண்டு நொங்கி நான் தமிழன்டா என்று மார் தட்டிய கூட்டம் வெளுத்த தேவதைப்பெண்களும், வெளுத்த புஷ்டியான குழந்தைகளும், வெளுத்த முதிர் கண்ணன்கள், கன்னிகளும் கேவிக்கூவி நம் இயலாமையை மீறிய ஆசைகளை தூண்டி நம் கருப்பின மக்களுக்காக விற்கும் Fair and Lovely, கண்ணாடி மேனி சோப்பு, மொபைல், வியர்வை நாற்றம் போக்கும் வாசனாதி திரவியம் என  கண்கவர் வண்ண / வெளிச்ச இல்லங்களையும் , வாகன இத்யாதி வகையறாக்களையும் கண்டு போதையேறி க்ரெடிட் கார்டு தேய்த்து அல்லது திருடி (really!) நுகரும் கொடுமைக்கு என்ன வண்ணம் சூட்டலாம்?

டைரக்டர் திரு ஷங்கர், நம் காலாவை கமலாய் வெளுத்து 'காட்டிய' ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட்டும் இந்த வண்ணத்தில்தான் அடங்கும் :-(

கேள்வி 1:கருப்பு தோலை சில வார கெமிகல் தடவலில் உரித்து வெள்ளையாக்குவது நம் வாழ்வை / தன்னம்பிக்கையை உயர்த்தும் என நம்புகிறோமே, இந்தக்கொடுமைக்கு நீங்கள் என்ன வண்ணம் தர விரும்புவீர்?

கே.2: நம் ஊர் ஊடக விளம்பரங்களில் ஒரு ஏழை கருப்பின குடும்பம் (நம்ம மக்கதேன்!) மகிழ்வாக போத்தீசில் / சரவணாசில் ஷாப்பிங் செய்த ஆடைகளை அணிந்து ஸ்லோ மோஷனில் 'அவரோடு' நடனமாடுவது நம் வாழ்நாளில் சாத்தியமா?

கருத்துகள்

  1. பாஸ் காலா அரசியல் சமூக விரோதின்னு பல மேட்டர் ஓடிக்கிட்டுருக்கு நீங்க என்னடான்னா இன்னும் சன்லைட் காலத்த கிளரிட்டு இருக்கீங்க... தமிழ்நாட்டுல இன்னக்கி நிலவரத்துல ....நின்னு அறிவா யோசித்து செயல்பட்டா பொழைக்க தெரியாத கோயிந்தாவாக மட்டுமே ஆகமுடியும்...தான் பாதிப்படஞ்சாலும் எதிர்த்து கேக்க குணமும் கணமும் இல்லாம ஓடிக்கொண்டிருக்கும் இருக்கிரார்கள்.. ம்ம்ம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்