முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நஞ்சப்பம் (அ) டாய்லட் ஏக் ப்ரேம் கதா


நாட்டின் வளர்ச்சிக்கு மகுடமாய் திகழும் ஒவ்வொரு பெரு நகரிலும், தினம் காலையில் ஒரு கூட்டம் எழுந்ததும் விரைந்து கட்டிட காடுகளின் விளிம்பில் இருக்கும் புதர்களின் / மரங்களின் பின் சென்று மறையும்.

கடனை கழித்தபின் மீண்டு கூடு அடையும். அக்கம்பக்கம் வீடுகள் உள்ளனவே, மாடிகளில், ஜன்னல்களில் யார் எட்டிப்பார்த்தாலும் நம் பணி அவர் கண்ணில் பட்டு சங்கடப்படுத்துமே, சுற்றுச்சூழல் நாற்றமெடுக்குமே என்ற கவலையெல்லாம் துளியும் இன்றி.

கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தால் போதுமா?

பெரு நகரத்தூண்களை கட்டியெழுப்ப உழைப்பவர்களுக்கு சுகாதாரமான தங்குமிடம் யார் பொறுப்பு?

என் மலம் என் பொறுப்பு என்ற உணர்வை எப்படி இவர்களுக்குள் விதைப்பது?

நகரங்களில் விளிம்பு நிலை மனிதர்களின் இன்னல் இப்படியென்றால் கிராமங்களில் வேறு மாதிரி...

கிராமம் முழுதும் நம் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகள், பயன்பாட்டிலில்லாமல் பூட்டிக்கிடக்கின்றன. பெண்களும் சாலை ஓரங்களில்தான் இன்றளவும் ஒதுங்குகிறார்கள்...

'ஏங்க, கழிப்பறைதான் வீட்டுக்கு ஒண்ணு இருக்குல்ல, போங்களேன்!' என்றால் 'எப்புடிங்க, திங்கிற இடத்துக்கு பக்கத்தில...' என்று பொது பதில்; இவர்கள் ஒதுங்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நிலங்களில் உணவே உற்பத்தி செய்யப்படுவதில்லையாம், நீர் நிலைகள் குடி நீரே தருவதில்லையாம்; இவையெல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் அண்ணாச்சி கடைகளிலும் மட்டுமே உற்பத்தியாகின்றனவாம், டி.வி யில் அப்படித்தான் காமிக்கிறாங்களாம்!

நஞ்சப்பம் ஓட்டைச்சுட்ட நாட்டில் தன் மலம் தன்னைச்சுடும்.

பின் குறிப்பு: மலம் மூலம் நீர்நிலைகளிலும் குடிநீரிலும் பரவும் ஈ-கோலி என்ற துன்பமிகு பேக்டீரியா உங்கள் வீட்டுத்தண்ணீரிலும் Fours ம் Sixer's ம் அடித்துக்கொண்டே இருக்கிறது! க்ரிக்கெட் ரசிகராய் விசில் அடித்து மகிழ்வதும், நீர் பரிசோதனை செய்து சூதானமாய் இருப்பதும்... அவரவர் விருப்பம் :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்