முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மஞ்சப்பை!



கல்லூரியில் சேர சிற்றூரிலிருந்து பெருநகரத்திற்கு வந்த அன்று என் கையில் பெட்டி படுக்கையுடன் ஒரு மஞ்சப்பை.

சர்டிபிகேட் அனைத்தும் அதில் அடக்கம்.

நகரவாசி கசின் இதைப்பார்த்ததும் சிரித்தான்; 'காலேஜ் வந்தாச்சுப்பா! இன்னும் மஞ்சப்பை??? ராகிங் பண்ணியே கொன்னுடுவானுங்க!'.

உடனே டாகுமென்ட்சை இடம் மாற்றி, மஞ்சள் பைக்கு ஓய்வு கொடுத்தேன். அப்போதுதான் புழக்கத்தில் வந்திருந்த ப்ளாஸ்டிக் பையொன்று கைவசமானதும், பயணங்களில் வழித்துணையானது் ஸ்கைபேக் ஒரு கையில், ப்ளாஸ்டிக் பை ஒரு கையில்.

அதன் பின்னர் அசந்து தூங்கிவிட்டேன். எத்தனை ஆண்டுகள் நகர்ந்தன என தெரியவில்லை. எழுந்து பார்த்தால்... மஞ்சப்பை, பச்சைப்பை, ஊதாப்பை, பழுப்பு பை என எங்கெங்கு காணினும் துணிப்பை பயன்படுத்தச்சொல்லி விளம்பரம்!

எனக்கு முன்னாடியே எழுந்த ரிப் வான் விங்க்கிள் அங்க்கிள்கிட்ட (Rip Van Winkle) 'என்ன ஆச்சு?!' என்றேன்.

கடகடவென சிரித்துவிட்டு அவர் சொன்னது இது:

'
காகித்த்திலயும் இலைகள்லயும் கிட்டத்தட்ட எல்லாத்தையும் பொட்டலம்போடத்தெரிஞ்ச நமக்கு 'வெய்ட்' தாங்குறது, மழைல கிழியிறது மட்டும்தான ப்ரச்னைன்னு துணிப்பைக்கு மாறுனோம். அப்பறம் வண்டி வாகனம் அதிகமாச்சி, எடை தூக்குறது சுலபமாச்சு ஆனா மழைய சமாளிக்கமுடியாம ப்ளாஸ்டிக்குக்கு மாறுனோம். ஏகபோக வரவேற்புன்னாலும் மஞ்சப்பையும் சுமந்தோம். அப்புறம் நானும் சில பல வருஷம் தூங்கிட்டேன். எழுந்து பாத்தா அம்புட்டு பயலும் ப்ளாஸ்டிக் பைய 'வீசி'கிட்டு திறியிறான். "ஏண்டா இப்படி?" ன்னு கேட்டா... 'மழைய சுத்தமா நிறுத்தச்சொல்லு! நானும் மசஞ்சப்பைக்கு மாறிடுறேன்!!'கிறான். 

உலகமே சேந்து மழைய நிறுத்த என்னென்னவோ செஞ்சு இப்பதான் ஜெயிச்சிருக்கானுங்களாம். அதனால மறுபடியும் மஞ்ச, பச்ச, ஊதான்னு... ஆனாலும் இதுல ட்விஸ்ட்டு என்னன்னா, வாங்குறவன்தான் துணிப்பை பயன்படுத்தணுமாம். தயாரிக்கிறவன், பேக் பண்றவனெல்லாம் ப்ளாஸ்டிக்தானாம். அவய்ங்களுக்கு கத்தி சொன்னாலும் காது கேக்காதாம்!'

ஏங்க, மஞ்சப்பை சகா, நம்பலாமா இவரை?

(படத்துக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காதீங்க பாஸ்! அதான் பேர்லயே இருக்கே!!)

கருத்துகள்

  1. மஞ்சப்பைல சாமிபடம் போட்டதுனால பணமும் பத்திரமும் சூதானமா இருக்குமுன்னு அந்த காலத்தில் உபயோகிச்சு இருக்காங்க... அப்போ பருத்தி காசு கம்மி... இயற்கை சுத்தம்லாம் அல்ல... ஊர்ல இப்போ பிளாஸ்டிக் சீப் அவ்ளோதான்... படிச்சவங்கள்ளயே நாலு பேரு மட்டும் தான் கவலபடுராங்க... விளிப்புனர்வ பள்ளிகாலத்துலயே விதைக்கணும்... ஆனால் பசங்க தெளிய ரொம்ப நாள் ஆகும்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்