முப்பத்தைந்து வயது இருக்கும் அந்த பெண்ணுக்கு. கைத்தாங்கலாய் ஆட்டோவில் இருந்து தன் பதின் வயது மகனை சிரமப்பட்டு இறக்கி, கால்கள் துவளத்துவள அவனை நடக்க வைத்து நம்பிக்கை பிடித்து அழைத்து வருகிறார் வாரத்தில் மூன்று நாட்கள், ஒவ்வொரு வாரமும். மன, உடல் வளர்ச்சி இரண்டுமே குறைபாடாம். பதின் வயது மகனுக்கு பேச்சு வராதாம். அமானுஷ்யமான ஓசையில் தனது சகல உணர்வுகளையும் அந்த சிறுவன் வெளிப்படுத்துகிறான். மீசை அரும்பத்தொடங்கியிருக்கிறது அவனுக்கு. பத்து பதினைந்து ஆண்டுகளாக தவமாய் சுமந்து அலைகிறார் அவனை எப்படியாவது குணப்படுத்தலாம் என. ஒரு holistic healing centre இல் இப்போது சிகிச்சை அவனுக்கு, வாரத்தில் மூன்று நாட்கள். பகல் பொழுதில் வேலைக்கு சென்றுவிட்டு மாலைகளில் அழைத்து வருகிறார். ஒரு முறை கூட ஆண்கள் யாரும் துணைக்கு வந்ததில்லை. ஔவை எழுதிய அரிதரிது மானிடர் ஆதல் அரிது மா னிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது என்கிற பாடலை மனம் வெம்பி இப்படி முடிக்கத்தோன்றியது இவ
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!