முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிர்ச்சூடு

 


பூமி தொடா பிள்ளைப்பாதம்

பூமி தொடாமல் வளர முடியாது.


பூமி தொட்டு விரல் விரித்து பாதம் பதித்து பாதம் புதைத்து பாதம் நனைத்து பாதம் கொதித்து பாதம் குளிர்ந்து என உணர்வின் வழி உடலில் ஏறும் பூமியின் ஆதி அன்பு.


பிள்ளை தவழ்ந்து கைகளூடாகவும் புவியன்பு சேர்த்து பின்பு நின்று நடந்து ஓடி தாவி பறந்து... பூமியில் மட்டுமே இயல்பாய் எளிதாய் எவர் உதவியுமின்றி கால் பதிக்க முடியும், வேறெந்த கோள்களிலும் இன்றுவரை வாய்ப்பில்லை.


கனவுகளை விற்கும் தொழில்நுட்ப மேகங்களில் முகம் புதைத்து நனவு மறந்து  இறகு முளைத்ததாய் கற்பிதம் செய்து ஓரிடத்தில் நில்லாது ஆனால் பூமி தொடாது காலணிகளால் பாதங்களை காத்து கையுறை அணிந்து உணவருந்தி முக கவசமனிந்து சுவாசித்து முகமூடி அணிந்து வாழ்ந்து என இயல்பை தொலைத்து பூமியுடனான அத்தனை தொடுபுள்ளிகளையும் நிராகரித்து மதி மயங்கி... விழுந்து கண்விழித்து பார்த்தால்...   சுற்றிலும் முக கவசமணிந்த கையுறைகள் தரித்த முகங்களும் ஆடைகளற்ற இயந்திரங்களும் மட்டுமே சூழ்ந்திருக்கும்.


கவசங்களற்ற முகங்கள், அதன் நீட்சியாய் கையுறையற்ற விரல்கள், அதனுள்ளே பொதிந்திருக்கும் வெதுவெதுப்பான உயிர்ச்சூடு, அது ஆற்றும் வாழ்வின் ரணங்கள், தரும் வாழ்நாள் நம்பிக்கைகள்... மறந்துபோன முதல் தலைமுறை நமதாக இருக்கும்...

இந்த ஒரு நொடி ஸ்பரிசம் இன்று நம் உலகின் அரிதினும் அரிதான ஒன்றாகிப்போனது மனித குல வளர்ச்சியின் உச்ச சாதனை.

புறக்கணிப்பின் நிச்சயத்தன்மையால் கல்போல இறுகிப்போன எத்தனையோ உயிர்க்குடுவைகள் இந்த ஸ்பரிசத்திற்காய் காத்திருப்பது அவற்றை கடந்து செல்லும் மானிட இறையின் உறையணிந்த விரல்களுக்கு தெரிந்துதான் இருக்கிறது. 


வாழ்வதற்கு நேரமின்றி விரையும் கூட்டம் அறியுமா அது எதைத்தேடி விரைகிறதென்று?? எத்தைத்தின்று தெளியும் இந்த பித்தம்?


கையுறைகளையும் கவசங்களையும் முக-மூடிகளையும் தொலைப்பதற்கு நாம் காசிக்கெல்லாம் கூட செல்லவேண்டியது இல்லை. சக உயிர்களை உயிரன்போடு கனிந்து நோக்கி புன்னகைத்தாலே போதும். இந்த சிறு குறிப்புக்காய் காத்திருக்கும் பேராற்றலொன்று மற்றதை பார்த்துக்கொள்ளும்.  

மனிதம் தவிர மற்ற அனைத்தும் வணிகமான உலகை மீட்க இது ஒன்று மட்டுமே உதவும்.


பேரன்புடன்,

பாபுஜி



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்