India's unique struggle with Inflation through myopia. இதுவரை பொருளாதார பணவீக்கம் நம்மை அதிகமாக பாதிக்காமல் இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? அரசுகளோ அவர்கள் தீட்டும் திட்டங்களோ அல்ல. அவசியமான பொருட்களின் விலை அதிகமானால்... தேவைகளை சுருக்கிக்கொண்டு வாழும் மக்களின் 'இதுவும் கடந்துபோகும்' என்கிற அனுபவ அறிவு பொதிந்த வாழ்வியல்தான் காரணம். இதனால்தான் 1998இல் அணுகுண்டு வெடிப்பின் பின் நம் மீது உலக நாடுகள் விதித்த பொருளாதார கட்டுப்பாடுகள் நம்மை பாதிக்கவில்லை. கோவிட் போன்ற பெருந்தொற்று காலங்களும் இப்படித்தான் இதுவரை கடந்து போயிருக்கின்றன. ஆனால் கடந்த சில வருடங்களில் இந்த வாழ்வியலை உடைத்துப்போடும் விதமாக சில நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஐ.டி துறையில் நல்ல வேலையிலுள்ள இருவர் கடந்த மாதம் 'செயின் அறுப்பு' முயற்சியில் கைதாகி உள்ளனர். இன்று விடியல் காலையில் புது தில்லியில் நடை பயிற்சி செய்துகொண்டிருந்தவர்களை சிலர் வழிமறி்த்து பணம் மற்றும் பொருட்களை பிடுங்கிச்சென்றுள்ளனர். நாடு முழுவதும் இதுபோல பல கொள்ளை, வழிப்பறி சம்பவங்களும் முயற்சிகளும், (சிக்குவது பெண்களென்றால் பாலியல் தாக்க
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!