எச்சரிக்கை 1: இந்த தேசத்தின் இறையாண்மையை நேசிப்பவர்கள் மட்டும் படிக்கவும். எச்சரிக்கை 2 : இது ஒரு குறுந்தொடர். எச்சரிக்கை 3: உங்கள் ஆன்மாவை இத்தொடர் உறுதியாய் புரட்டிப்போடும்! ############ 1800களில் கிழக்கிந்திய கம்பெனி தேயிலை வளர்க்க நம் காடுகளை வெட்டி வீழ்த்தத்தொடங்கியபோது தொடங்கிய யுத்தம் ஒன்று இன்றளவும் தொடர்கிறது... காடு, தொல்குடியினரின் வீடு. காடு, இவர்களது வாழ்வாதாரம். கோண்டு, குஜ்ஜர், என வடக்கில் தொடங்கி இருளர், தோடர் என தெற்குவரை, இவர்களின் வீடுகள் ஏராளம். ஐம்பது ஆண்டுகளில் இவர்கள் அனைவரது வீடுகளிருந்த காடுகளும் தேயிலை தோட்டங்களாக மாறிப்போக, கலவரங்கள் வெடித்து, பரவி, அடங்கி, பரவி... வீடிழந்த தொல்குடியில், காடு தாண்டி வேறு ஒன்றும் அறியாதவர், பலர் தேயிலை தோட்ட கூலி / அடிமை / கொத்தடிமைகளாக மாற, இன்னும் பலர் காட்டுக்கும் நாட்டுக்கும் இடையிலான வரையப்படாத எல்லைகளில் வழிப்பறிக்கொள்ளை முதல் மூலிகை, தேன், சுள்ளி விற்று வயிறு வளர்க்க, கம்பெனி பறித்த தேயிலைகள் பத்திரமாய் சந்தைக்கு போவது கடினமாச்சி (இவர்கள் வழியே தேயிலை கள்ள சந்தைக்குப்போகிறதாம்).
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!