முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆதி அமைதி - இத்தாலியன் ஸ்டைல்!

  "அமைதியில் பல ரகம். அதில் ஆக டீப்பான அமைதின்னா அது மசான அமைதிதான்.சாதாரண அமைதிக்கும் இருக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. இதையும் தாண்டிய அமைதி ஒன்று உண்டு. அது கொஞ்சம் ஸ்பெஷல்.  அதை நமக்கு உணரவைப்பதற்கு ரெண்டே ரெண்டு இத்தாலியர்கள் போதும்!" இது நானும் என் நண்பர் அனந்துவும் பேசிக்கொண்டதில் ஒரு பகுதி. இடம்: சுவிஸ் தேசத்தில் அதிமெல்ல நகரும் ட்ராம் ஒன்றில் அலுவலகம் செல்லும் ஒரு சாதாரண நாளில். (அதிமெல்ல is the opposite of அதிவிரைவு. அதாவது மணிக்கு 15 கி.மீ ஸ்பீஈஈடு!) பெரும்பாலான ஐரோப்பிய தேசங்களில் சாதாரணமாகவே புன்சிரிக்க மறந்து சதா சீரியசான முகங்களாகவே பயணங்களில் தென்படும். உறைபனி கூடிய, சாம்பல் மேகங்கள் மூடிய குளிர்காலங்களில் எதிர்ப்படும் முகங்களில் கடுமையும் கூடியிருக்கும். இவர்கள் மத்தியில் 15-20 நிமிட பயணம் கூட ஒரு மணி நேர பயணம் போல தோன்றும் (இதனால inspire ஆகிதான் Swiss Patent Office ல கிளார்க்கா பெஞ்ச்ச தேய்ச்சிகிட்டிருந்த ஒருத்தர், Theory of Relativity எழுதினாரு போல 1906 இல, Annus Mirabilis என்கிற 'அறிவியலின் அற்புத ஆண்டில்'. ஆக்சுவலி, அவரு அந்த வருசம் எழுதின மூன்று

ழ!

  நேற்று தமிழ்ப்புத்தாண்டு. கொண்டாட்டங்களை முடித்திருப்பீர்கள்தானே. இன்று நம் தமிழ்மொழி பற்றி பேசுவோமா?  உலகின் பெரும்பான்மையான மொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு. இந்த மொழி போல ஒரு சமூகத்தின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கும் மொழியைக்காண்பது அரிது.  நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் உருவ மயக்கங்களோ? வெறும் காட்சிப்பிழைதானோ? என பாடிய பாரதியையே தேனுண்ட மயக்கத்தில் ஆழ்த்தியது தமிழ் மொழி.  மொழிகளுக்கு உயிர் உண்டு. உயிருள்ள அனைத்தையும் போல மொழிக்கும் பிறப்பு, வளரச்சி, முதிர்ச்சி உண்டு. மரணமும் உண்டு. அது, அந்த மொழியைப்பேசிய கடைசி மனிதனும் மறையும்போது மட்டுமே நிகழ்வது. நம் தமிழ், செம்மொழி. இன்றுவரை வழக்கிலுள்ள ஒரு தொன்மையான மொழி. ஆனால் நம் தமிழ்த்தாய் வாழ்த்து இதன் "சீரிளமையை செயல்மறந்து வாழ்த்தச்"சொல்கிறது. இது இளைய மொழியா? இளையோரும் எளிதாய் பயன்படுத்தும் மொழியா? ஒரு மொழியின் எழுத்து தொகுப்புகளில் (உதாரணம்: ஆங்கிலம் - A to Z) பயன்பாட்டில் இல்லாத எந்த ஒரு எழுத்துக்கும் இடமில்லை. ஆனால் நம் தமிழில்? ஙகர வரிசை மற்றும் ஞகர வரிசையில் பயன்பாட்டில் இல்லாத எழுத்துக்கள

துருவங்கள்தோறும் திருவிழா!

  துருவம் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்! இரான் நிலப்பகுதியை சேர்ந்த பலோச் (Baloch) இந்துக்கள், தமிழர்கள், பஞ்சாபிகள், நேபாளிகள், ஹிமாச்சல வாசிகள், அஸ்ஸாமியர்கள், பெங்காலிகள், ஒடிசர்கள் (அதாவது, ஒடிசா மக்கள்), மணிபுரிகள், சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், துளு, குடகு கன்னடர்கள் மற்றும் தென்கிழக்காசியாவின் பெரும்பாலான நாடுகளிலும் இன்று புத்தாண்டு திருவிழாவாம். நிலநடுக்கோட்டை ஒட்டி உள்ள ஏனைய நாடுகளிலும் தை முதல் பங்குனி வரை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தினங்களில் புத்தாண்டு திருவிழாவாம். ஒப்பிலாத பழையநகரம் பாபிலோனிலும் (இன்றைய இரான், இராக்) இன்னும் பல பழைழைழைய நாகரீகங்களிலும் புத்தாண்டு விழாக்கள் மார்ச்-ஏப்ரல் காலத்தில் கொண்டாடப்பட்டிருக்கின்றன. மத்திய ஆப்பிரிக்காவிலும் சில தென்னமெரிக்க நாடுகளிலும்கூட! மார்ச் வரை தெற்கு திசையில் அண்டார்டிகா பயணித்த சூரியபகவான், அலுப்பு தட்டி, 'திருப்படா வண்டிய போலாருக்கு' என வடக்கு திரும்ப, வழியெங்கும் வசந்த உற்சவங்களாம்!  நிலநடுக்கோட்டு மக்களெல்லாம் அந்த ஆண்டுக்கான உணவு உற்பத்தியை திட்டமிட, வேலை தொடங்க, வட அரைக்கோள மக்கள் தாம் பதுங்கியிருந்த

அனுபவி ராஜா அனுபவி!

பாலகுமாரனின் அகல்யா, சிவசுவின் அகல்யா, மரண வேதனையில் சிவசுவை கண்களால் விளித்து ஒரு பாடல் படிக்கச்சொல்கிறாள். சிவசு படிக்கிறான்: ஈலோக கோளத்தில் ஒரு சிரா சந்த்யயில் இன்னும் ஒலிக்க நாம் கண்டு முட்டி, தெரியாமல் முட்டிக்கொண்டது மாதிரிதானே  சந்தித்தோம். தெரியாமல் முட்டிக்கொண்டு, சிதறினது மாதிரிதானே பிரிந்தோம். மறுபடி அவ்விதமே நிகழட்டும். போய்வா அகல்யா, ஆல் த பெஸ்ட்.  வே றெங்கேனும் எப்போதாவது சந்திக்க முடிகிறதா என்று பார்ப்போம். இந்தக்கோளத்திலோ அல்லது வேறு எங்கானுமா பார்க்கமுடிகிறதா என்று தவிப்போம்.  பார்த்தால் புரிந்துகொள்வோம்!' முதல்முதலாய் உங்களது கனவுப்பிரதேசத்துக்கு பயணம் செல்கிறீர்கள். அந்த இடம் வரை பஸ்ஸோ ரயிலோ செல்லும் என்பதை தவிற வேறொன்றும் தெரியாது உங்களுக்கு . அந்த ஊர் போனதும் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும்? அதற்கெல்லாம் என்னென்ன தகவல்கள் வேண்டியிருக்கும்? சுச்சூ, கக்கா போவதற்கான இடம் முதல், என்னென்ன காணலாம்? எங்கெங்கு காணலாம்? எந்த வாகனத்தில் போகமுடியும்? எப்போ? நல்ல உணவு எங்கு கிடைக்கும்? நல்ல தேநீர் / சிற்றுண்டி எங்கு கிடைக்கும்? நல்ல விடுதி எங்குள்ளது? நினைவுப்பரிசுகள் எ

டைம் ட்ராவல்!

டைம் மெஷின். டைம் ட்ராவல் சாத்தியமா? சத்தியமாய் சாத்தியமே! டைம் ட்ராவல் செய்கையில் எனக்கு கடந்த காலத்தினூடே பயணிப்பது மட்டுமே பிடிக்கும். ஏனெனில் கடந்த நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் இன்றைய என் இருப்பு ஒரு தைரியம் தருகிறது...past must have been good or else I would not be here! எதிர்காலத்தைப்பற்றி இப்படி உறுதியாய் சொல்ல இயலாதல்லவா, எனவே அந்தப்பக்கம் பயணிக்க மனம் விரும்புவதில்லை. கமிங் டு த பாயிண்ட், டெக்னாலஜி அதிகம் வளராத காலத்திலேயே நான் மாதம் ஒரு முறை டைம் ட்ராவல் செய்வதுண்டு! பல நேரங்களில் என் தாத்தாவின் காலம் வரை போகமுடியும். இப்போதெல்லாம் மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய காலம் வரை சென்று வர முடிகிறது. என்னுடைய டைம் மெஷின் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு வட்டமடிக்கும் உயர் நாற்காலி, நன்கு குஷன் வைத்து தைத்து ரெக்சின் தோல் பூசிய இருக்கை. அதில் சில பல லீவர்கள் (levers) இருக்கும், உயர்த்த, தாழ்த்த, சாய்க்க, நிமிர்த்த. நான் பயணம் செய்யப்போகும் கடந்தகாலம் என் கண்ணெதிரே பிரம்மாண்ட கண்ணாடி திரையில். ஆனால் அது நான் சீட்டில் அமர்ந்தவுடனே இயங்காது. பல நிமிடங்கள் ஆகும். அதற்குள் தலைமுடியில் ஒரு கர

தோல்பாவைக்கூத்து

India's unique struggle with Inflation through myopia. இதுவரை பொருளாதார பணவீக்கம் நம்மை அதிகமாக பாதிக்காமல் இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? அரசுகளோ அவர்கள் தீட்டும் திட்டங்களோ அல்ல. அவசியமான பொருட்களின் விலை அதிகமானால்... தேவைகளை சுருக்கிக்கொண்டு வாழும் மக்களின் 'இதுவும் கடந்துபோகும்' என்கிற அனுபவ அறிவு பொதிந்த வாழ்வியல்தான் காரணம். இதனால்தான் 1998இல் அணுகுண்டு வெடிப்பின் பின் நம் மீது உலக நாடுகள் விதித்த பொருளாதார கட்டுப்பாடுகள் நம்மை பாதிக்கவில்லை. கோவிட் போன்ற பெருந்தொற்று காலங்களும் இப்படித்தான் இதுவரை கடந்து போயிருக்கின்றன. ஆனால் கடந்த சில வருடங்களில் இந்த வாழ்வியலை உடைத்துப்போடும் விதமாக சில நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஐ.டி துறையில் நல்ல வேலையிலுள்ள இருவர் கடந்த மாதம் 'செயின் அறுப்பு' முயற்சியில் கைதாகி உள்ளனர். இன்று விடியல் காலையில் புது தில்லியில் நடை பயிற்சி செய்துகொண்டிருந்தவர்களை சிலர் வழிமறி்த்து பணம் மற்றும் பொருட்களை பிடுங்கிச்சென்றுள்ளனர். நாடு முழுவதும் இதுபோல பல கொள்ளை, வழிப்பறி சம்பவங்களும் முயற்சிகளும், (சிக்குவது பெண்களென்றால் பாலியல் தாக்க

விதிய மாத்துங்க சாமீ!

  நுனிக்கரும்பு இனிக்க காத்திருந்தவனும் இனிப்பு கிட்டி போயாச்சு சிவலோகத்துக்கு நெஞ்சிலே கோயில் கட்டிய பூசலானும் அடைந்தாயிற்று சிவ பாத ப்ராப்தம். 'நீ உருவாக்கிய ஞெகிழி மட்கி மண்ணானால்தான் உனக்கென் பாதத்தில் இடம்!' என தோடுடைய செவியன் விடமுண்ட கண்டன் சபிக்க, காத்திருக்குது மனித குலம் ஆண்டு எண்ணூறு எப்போது வருமெண்டு! "எண்ணூறு வருவதெப்போ ஞெகிழி மக்குவதெப்போ! மாத்துங்கப்பா "விதியை"!' என கூக்குரலிடும் மனிதரை சிவனே என்று இருக்கச்செய்வது சிவனார்க்கும் இயலாது போல! தாவரங்களிலிருந்து ஞெகிழி செய்வோம் விதியை வெல்வோம் என இப்போதும் ஞெகிழி பிடித்து தொங்குது ஒரு பெருங்கூட்டம். மௌனமாய் புன்னகையோடு வேடிக்கை பார்த்திருக்குது தாவரக்கூட்டம். (PC: salon dot com website)