முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டைம் ட்ராவல்!

டைம் மெஷின்.

டைம் ட்ராவல் சாத்தியமா?

சத்தியமாய் சாத்தியமே!


டைம் ட்ராவல் செய்கையில் எனக்கு கடந்த காலத்தினூடே பயணிப்பது மட்டுமே பிடிக்கும். ஏனெனில் கடந்த நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் இன்றைய என் இருப்பு ஒரு தைரியம் தருகிறது...past must have been good or else I would not be here!

எதிர்காலத்தைப்பற்றி இப்படி உறுதியாய் சொல்ல இயலாதல்லவா, எனவே அந்தப்பக்கம் பயணிக்க மனம் விரும்புவதில்லை.


கமிங் டு த பாயிண்ட், டெக்னாலஜி அதிகம் வளராத காலத்திலேயே நான் மாதம் ஒரு முறை டைம் ட்ராவல் செய்வதுண்டு!


பல நேரங்களில் என் தாத்தாவின் காலம் வரை போகமுடியும். இப்போதெல்லாம் மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய காலம் வரை சென்று வர முடிகிறது.

என்னுடைய டைம் மெஷின் எப்படி இருக்கும் தெரியுமா?


ஒரு வட்டமடிக்கும் உயர் நாற்காலி, நன்கு குஷன் வைத்து தைத்து ரெக்சின் தோல் பூசிய இருக்கை. அதில் சில பல லீவர்கள் (levers) இருக்கும், உயர்த்த, தாழ்த்த, சாய்க்க, நிமிர்த்த.

நான் பயணம் செய்யப்போகும் கடந்தகாலம் என் கண்ணெதிரே பிரம்மாண்ட கண்ணாடி திரையில். ஆனால் அது நான் சீட்டில் அமர்ந்தவுடனே இயங்காது. பல நிமிடங்கள் ஆகும். அதற்குள் தலைமுடியில் ஒரு கருவி தண்ணீரை ஸ்ப்ரே செய்யும். அந்தக்கருவியை இயக்கும் இன்னொரு கருவி மூளைக்கு மேலான தலைத்தோலை மெல்ல மெல்ல மசாஜ் செய்துவிடும். என்னைச்சுற்றிய இரைச்சல்கள் எல்லாம் சில நிமிடங்களில் இரு இரும்புத்துண்டுகளின் உராய்வு சத்தத்தில் கரைந்துபோய், மனம் அமைதியாகும், புலன்கள் கூர்மையாகும். மோனம் போன்றதொரு நிலையில் திடீரென முகங்கள் தோன்றும் எதிர் கண்ணாடியில். முதலில் அப்பா முகம், அதன் பின் தாத்தாவின் முகம், அதன்பின் கொள்ளுத்தாத்தாவின் முகம்.


சமீப காலங்களில் லேட்டஸ்ட் டெக்னாலஜி உபயமோ என்னவோ தெரியவில்லை, இந்த முகங்கள் தாண்டிய சில முகங்களும் தோன்றுகின்றன...

எள்ளுத்தாத்தா அல்லது அவரது கொள்ளுத்தாத்தாவாகவோ கூட இருக்கலாம். கேட்டு உறுதி செய்யலாமென்றால் அவர்களும் ஏனோ மௌனமாகவே என்னை பார்த்துக்கொண்டிருப்பார்கள்; நான் சிரித்தால் அவர்களும் சிரிப்பார்கள், நான் நெற்றி சுருக்கி யோசித்தால் அவர்களும் அவ்வாறே!


சட்டென ஒரு கருவி தலைத்தோலை வருடி விட, இன்னொரு கருவி என் முகத்தை மெல்ல துடைக்க, துடைத்ததில் என் முகம் துடைந்துபோய்...'அப்ப நான் யாரு?!' என்று முகமிழந்த மனம் விக்கித்து மீண்டும் நிகழுலகத்திற்கு என்னை இழுத்துவரும் (நோலனின் இன்செப்ஷன் பட ம்யூசிக் ட்ரிக்கர் போல).

250 ரூவா சார் என சலூன்காரர் கவனம் கலைப்பார்...


முன்னெல்லாம் இந்தப்பயணத்திற்கான செலவு பத்து ரூபாய் மட்டுமே. இப்போ 250 ரூவாயாம். அதான் கொள்ளுத்தாத்தாவோட கொள்ளுத்தாத்தா வரை பயணிக்கமுடியுது போல!

மண்ணில் நான் உன் நகலல்லவா என எத்தனை நகல்கள் பாட்டுப்பாடியிருக்கும் தம் அசலை தேடிக்கொண்டு?!


ஆதி அசல் எப்படி இருந்திருக்கும்? அறிவியலுக்கு அப்பால்தான் இதன் விடை ஒளிந்திருக்கவேண்டும்!

கருத்துகள்

  1. முந்நகல்கள் தோன்றுவது கற்பனைத் திறனோடான கூர்மையான பார்வைக்கே சாத்தியம். கவனம் சிதறினால் மரணம்;ஒரு நகல் தடமழிந்து (மரணித்து) அடுத்த நகல் தோன்றி விடும். டைம் மெஷின் ஒரு நல்ல கற்பனை. இங்கும் பொருத்தமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. You have added one more layer of interoretation! 'கவனம் சிதறினால் மரணம்'... how true!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்