முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆதி அமைதி - இத்தாலியன் ஸ்டைல்!

 

"அமைதியில் பல ரகம். அதில் ஆக டீப்பான அமைதின்னா அது மசான அமைதிதான்.சாதாரண அமைதிக்கும் இருக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.

இதையும் தாண்டிய அமைதி ஒன்று உண்டு. அது கொஞ்சம் ஸ்பெஷல். 

அதை நமக்கு உணரவைப்பதற்கு ரெண்டே ரெண்டு இத்தாலியர்கள் போதும்!"

இது நானும் என் நண்பர் அனந்துவும் பேசிக்கொண்டதில் ஒரு பகுதி.

இடம்: சுவிஸ் தேசத்தில் அதிமெல்ல நகரும் ட்ராம் ஒன்றில் அலுவலகம் செல்லும் ஒரு சாதாரண நாளில்.

(அதிமெல்ல is the opposite of அதிவிரைவு. அதாவது மணிக்கு 15 கி.மீ ஸ்பீஈஈடு!)


பெரும்பாலான ஐரோப்பிய தேசங்களில் சாதாரணமாகவே புன்சிரிக்க மறந்து சதா சீரியசான முகங்களாகவே பயணங்களில் தென்படும். உறைபனி கூடிய, சாம்பல் மேகங்கள் மூடிய குளிர்காலங்களில் எதிர்ப்படும் முகங்களில் கடுமையும் கூடியிருக்கும்.

இவர்கள் மத்தியில் 15-20 நிமிட பயணம் கூட ஒரு மணி நேர பயணம் போல தோன்றும் (இதனால inspire ஆகிதான் Swiss Patent Office ல கிளார்க்கா பெஞ்ச்ச தேய்ச்சிகிட்டிருந்த ஒருத்தர், Theory of Relativity எழுதினாரு போல 1906 இல, Annus Mirabilis என்கிற 'அறிவியலின் அற்புத ஆண்டில்'. ஆக்சுவலி, அவரு அந்த வருசம் எழுதின மூன்று கோட்பாடுகளின் அதிமுக்கிய தன்மை காரணமாகத்தான் 1906 Annus Mirabilis ஆனது!!).

இந்த பயணத்தில் நம்மை சூழும் அமைதி - is a close second to masaana amaithi but nowhere close to the one I wrote about in the beginning.

அப்டின்னா என்னதான் அந்த 'முதல்ல சொன்ன ஸ்பெஷல் அமைதி'ப்பா? 


ஒரு ட்ராம் நிறுத்தத்தில் கூட்டம் நிறைந்த உங்கள் ட்ராம் பெட்டியின் இரண்டு முனைகளிலும் உள்ள தானியங்கி கதவுகள் வழியே தலா ஒரு இத்தாலியர் உள்ளே நுழைந்தால்....

நுழைந்தால்?

அடுத்த பல நிமிடங்களுக்கு, அவர்களுக்கு இடையில் நிலவும் கனத்த அமைதியை தானியங்கி துப்பாக்கிகள் கொண்டு துளைப்பது போல இவர்களது உரையாடல் துளைத்துச்செல்லும்.

"சாலி!!!!" என ஒருவர் தொடங்க,

'சல்யூட்டி!!!!' என இரண்டாமவர் முழங்க, அடுத்த பல நிமிடங்கள் ஓலைப்பாயில் ஒண்ணுக்கிருந்ததைப்போல சத்தத்தில் கலகலத்துப்போகும்! (ஓலைப்பாய் சொலவடை - கரிசல் காட்டு எழுத்தாளர் கி். ரா உபயம்).


இத்தாலியர்கள் வாயினால் மட்டும் பேசுபவர்கள் அல்ல! 

அவர்களது உரையாடலில் உடலின் அனைத்து பகுதிகளும் பங்குபெறும், குறிப்பாய் கைகள்! 

Gesticulation என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் உடல்மொழியே இவர்களது முதன்மை மொழி. குரல் ஓரு ஒத்தூது, அவ்வளவே!

இவர்களைப்போல அனிமேட்டட் கான்வர்சேஷனிஸ்டுகள் உலகில் வேறு எங்குமே கிடையாது!

அடுத்த நிறுத்தத்தில் இவர்களில் ஒருவரோ அல்லலது இருவருமோ இறங்கியபின் அந்த ட்ராம் பெட்டியில் நிலவும் அமைதி இருக்கிறதே...அதுதான் நம் உலகங்களின் சிருஷ்டிக்கு முந்தின ஆதி அமைதி போல!!! நான் தொடக்கத்தில் சொன்ன அந்த ஸ்பெஷல் அமைதி :-)


கொசுறு: இப்படி உடல்மொழி சுமந்து உலகையே கலகலப்பாக்கும் ஒரு இத்தாலியர், உங்களுக்கு எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும், அவர்கள் தங்கள் இரு கைகளிலும் பொருட்கள் நிறைந்த பைகளை சுமந்துகொண்டு நடக்கையில் நீங்கள் எதிரில் வந்தால், உங்களுடன் பேசாமலே கடந்து செல்வார்கள்! ஏனெனில் அவர்களால் கரங்களை பயன்படுத்தாமல் பேசவே இயலாது :-)




(All images are from various internet sites and maybe copyright protected. Used here purely for illustration)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்