நேத்து, கவிதையில போச்சி, யாரும் துணையில்லை... நேற்று உலக கவிதைகள் தினமாம்! விழியில் பதிந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு நல்ல எழுத்துக்கு மட்டுமே வாய்க்கும்; கவிதையோ, கதையோ, சொலவடையோ! லொடலொடவென பேசுபவரை பற்றி ஒரு நாட்டுப்புறக்கதை 'ஓலப்பாயில ஒண்ணுக்கிருந்தவன் மாதிரி' எனும்போது, கரிசல் கிராமத்தை கி. ரா வர்ணிக்கையில், 'இரவைப்பொத்தலிட்டன மாடுகளின் சூடான பெருமூச்சு' எனும்போது... கிடைக்கும் வாசிப்பனுபவம், உணர்வனுபவம்... வேற லெவல். நல்ல கவிதைகள், கவிதைகளில் மட்டும் ஒளிந்திருக்கவில்லை :-) குடத்தில் தண்ணீர் தளும்பத்தளும்ப முன்னே நடைபோடும் பெண்ணின் குடத்தில் தளும்பியது மனசு என்ற ஆத்மாநாமின் கவிதை போன்ற இன்னொன்றை இன்றுவரை தேடிக்கொண்டே இருக்கிறேன் தமிழில் (கல்யாண்ஜியின் 'இருந்து என்ன ஆகப்போகிறது? இறந்துபார்க்கலாம். இறந்து என்ன ஆகப்போகிறது? இருந்து பார்க்கலாம்' is a close second). சிக்கனமான சொற்கட்டமைப்பில் வெடித்துச்சிதறும் உணர்வுகளை குவிப்பது ஒரு சிலருக்கு மட்டுமே வசப்படுகிறது... மானபங்கப்படுத்தப்பட்டு தரையில் அலங்கோலமாய் கிடக்கும்
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!