முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று: "பட்டியல் சமூகங்களும் பாழாய்ப்போன அவர்களது தேசமும்" - பகுதி மூன்று


காவல் கோட்டம் வரலாறு சார்ந்த கதை. பட்டியல் சமூகங்களின் வலி மிகுந்த வாழ்வின் பதிவு.

நிஜத்தில் ரத்தமும் சதையுமாய் இந்த பூமியின் பட்டியல் சமூகத்திலிருந்து வெடித்துக்கிளம்பி ஆங்கில ஆதிக்கத்தை உலுக்கிய ஒரு தனிமனிதன் பற்றி நம்மில் எத்தனை பேர் படித்திருப்போம்?

பிர்சா முண்டா! பூமியின் தந்தை!

பூமியை நேசித்தவன், காந்திக்கு ஆறு வருடம் பின்னால் பிறந்தவன்...

அன்றைய அடக்குமுறை சூழலில் பழங்குடியினர் பலர் தம் அடையாளங்களை மறைத்து பொய்யான பெயர்களில், வெவ்வேறு சாதிப்பட்டியல்களுள் எப்படியாவது இடம் பிடித்தால்தான் அடிப்படை தேவைகள் நிறைவேறும், சமுதாயம் மதிக்கும் என்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்... இவனது சமூகமும் அவ்வாறே.

"நல்ல படிப்பு படிக்கணுமா? கிறிஸ்துவனாய் மாறு" என மத மாற்றம் செய்யப்பட்டு கான்வென்டில் கல்வி பயின்ற ஆதிவாசி சிறுவன்.

இன மரியாதையை விற்று கல்வி வேண்டுமா என்ற கேள்வி எழுந்தபோது பதின்வயதுகூட தாண்டவில்லை அவன்; வெளியேறினான், தன் பூர்வீகம் தேடி, கானகம் நோக்கி.

பிரிட்டிஷ் அரசு, உள்ளூர் நில முதலாளிகள் மற்றும் கந்துவட்டிக்காரர்கள் மூலம் கானகங்களை வளைத்து விளை நிலங்களாக மாற்றத்தொடங்கியிருந்த காலம்...

'ஆதிவாசிகள் கானகத்தில் வாடகைக்கு வசிப்பவர்கள். கானகமோ ஆங்கில அரசின் சொத்து. எனவே வாடகை செலுத்தவேண்டும் (!) ஏதேனும் விளைவித்தால் அதற்கும் வரி கட்டவேண்டும்' என வந்த அரசாசணை அவனுக்கு சுத்தமாய் புரியவில்லை. பூமி தோன்றிய நாள் முதலாய் அக்கானகத்தில் வசிக்கும் குடி அவனது. இன்று ஏன் வாடகை, வரி? என கேள்வியெழுப்பி, தன் இன மக்களை ஒன்று திரட்டி அற வழியில் போராடி நீதி கிட்டாது, ஆயுதம் தரித்து தாக்குதல் தொடங்கினான். 

தாக்குதலுக்கு வில், விஷ அம்புகளை ஆயுதமாக்கியவன், அங்கு வாழ்ந்த பல்வேறு தொல்குடி சமூகங்களை ஒன்று சேர்க்க மத உணர்வையே ஆயுதமாக்கினான். தன்னை கடவுள் என்று அறிவித்து அவன் சில அற்புதங்களை செய்யவும் கூட்டம் சேரத்தொடங்கியது (தீராத வியாதி காணாமல் போச்சு அவன் கை பட்டதும்! கானக வாழ்வின் மூலிகை நுட்பம் அவனுக்கு உதவியிருக்கலாம்...). 

பிர்சாயத் எனும் புதிய மதம் வழியே ஆதிவாசிகளை ஒன்று சேர்த்து, நில உடைமையாளர்கள், மதமாற்றம் செய்யும் குழுவினர், கந்துவட்டிக்காரர்கள், பிரிட்டிஷ் அரசு என பல முனைத்தாக்குதல்களில் இருந்து ஆதிவாசிகளைக்காத்து அவர்களின் பழமையான வழிபாட்டு, வாழ்வியல் முறைகளுக்கு மீண்டும் மாற ஊக்குவித்ததால் இன்றும் கூட தென்னக ஆதிவாசிகளும்கூட வணங்கும் உயரத்துக்கு வளர்ந்தான். (ஒரு கடவுள், பல கடவுள்களுக்கு வழிகாட்டியது மனித வரலாற்றில் இதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்ததில்லை!).

பிர்சாயத்துகள் போர்ப்பயிற்சியும் பெற்றனர். தாக்குதல்கள் தொடங்கின, தொடர்ந்தன. காட்டுத்தீயாய் 550 சதுர கி.மீ பரப்புக்கு பரவின.

சில பல வெற்றிகள், முன்னேற்றங்கள் என ஆங்கிலேய அரசை நெருக்கியவன் ஒரு நாள் கானகத்தில தன் கொரில்லா தாக்குதல் படையுடன் தூங்குகையில் கைது செய்யப்பட்டான் (இவன் கைது செய்யப்பட்டது காட்டில், செகுவேரா கைது செய்யப்பட்டது ஒரு பள்ளியில். செகுவேராவை கொண்டாடும் நம் மக்கள் பலருக்கும் இவனைப்பற்றி தெரிந்திருக்காது!). அவனை அணுக, பிரிட்டிஷ் ராணுவம் 400 பிர்சாயத்துகளை கொன்று குவிக்க வேண்டியதாயிற்று...

(சித்ரவதை செய்து கொன்ற ஆங்கில அரசு, 'காலராவால் இறந்தான்' என கதை சொன்னது. ஆனால் அவன் பற்ற வைத்த பொரியை அணைக்க இயலாது "பழங்குடிகள் பாதுகாப்பு சட்ட"மும் இயற்றியது. இன்றளவும் நம் காடுகள் ஓரளவேனும் 'முன்னேற்ற' வெறியில் இருந்து தப்பித்திருக்க அவற்றுள் வாழும் ஆதிவாசிகளே காரணம் என்றால் அது மிகையல்ல.)

இத்தனையும் செய்ய, பூமிக்கே தந்தையாக அவனுக்கு தேவைப்பட்டது வெறும் 25 ஆண்டுகள்...

காந்தி,  நம் தேசத்தின் தந்தையாக 78 ஆண்டுகள் ஆனது.

பிர்சா டேவிட், பிர்சா தாவூத் என பல மதங்கள் சொந்தம் கொண்டாடிய ஒற்றை மனிதன்! 

130 கோடி மனிதர்களை அரையாடை உடுத்த கிழவன் விடுதலைக்கு இட்டுச்செல்ல அவனுக்கு படிப்பும், உலக அனுபவமும், நீண்ட வாழ்வும் அகிம்சையும் உதவின. நம் பூமியின் தந்தைக்கு இவை எதுவும் வாய்க்கவில்லை...

நன்கு கவனியுங்கள்; அவனது போராட்டம் ஒரு குறிப்பிட்ட ஆட்சிக்கோ அரசுக்கோ எதிரானதல்ல. அவன் தன் பூமியை காக்கவே போராடினான். அவனது பூமி அவன் வாழ்ந்த காடு!, வேறு எந்த புவியியல் அரசியல் சமூகவியல் பெயர்களும்  உள்நுழையமுடியாத பரப்பு அது. காடு என்பது உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இன்றளவும் காடென்றே அறியப்படும்!

ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மையான அரசு / பொது கட்டிடங்கள் மற்றும் அமைப்புகள் இன்னும் இந்த மண்ணின் மைந்தன் பெயரை சூடி அவன் வாழ்வை இன்றும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன.

ஒரு கோடிக்குமேல் நீண்டிருந்த பட்டியல் சமூகங்கள், கால மாற்றங்கள் மற்றும் விடுதலை காலம் அருகில் வர வர தளர்த்தப்பட்ட அரசின் பிடி ஆகியவை காரணமாக சுருங்கத்தொடங்கியது.

(

இந்த 1900-1940 கால கட்டத்தின் பட்டியல் சமூக வாழ்வியலை வேல. ராமமூர்த்தி 'குற்றப்பரம்பரை' என்ற நாவல் வழியே பதிந்துள்ளார். சற்றே மிகையான, சினிமா தாக்கமுள்ள நடை என்றாலும் இந்த நாவலின் களம், மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த தேனி வட்டாரம் என்பதால் பட்டியல் வடக்கிலிருந்து தெற்குவரை நீண்டதென்பதை சொல்லாமலே உணர்த்துகிறது.

இதே காலகட்டத்தில் காடுகளை சிதைத்து ஆங்கிலேயர் வளர்த்த தேயிலை தோட்டங்களில் சிதைந்து கொண்டிருந்த பட்டியல் சமூக மக்களின் வாழ்வியலை Red Tea என்ற நாவலாய் P. H. Daniel 1960களில் எழுதி வெளியிட, 

அது 'எரியும் பனிக்காடுகள்' என இரா. முருகவேளால் தமிழுக்கு வந்து, இயக்குநர் பாலா வழியே 'பரதேசி' யாக திரைக்கு வந்து, பார்த்து உறைய நமக்கு நேரமில்லாததால் காணாமல் போச்சு :-(

)

இந்தியா விடுதலை பெற்ற ஆண்டில் (1947) ஏறத்தாழ இரண்டரை லட்சம் பிறவிக்குற்றவாளிகள் இருந்ததாக ஆங்கில அரசு ஆவணங்கள் தந்து சென்றது.

இந்த ஆவணங்களை பெற்றுக்கொண்ட இவர்களது சுதந்திர தேசம் இவர்களுக்கு என்ன செய்தது? 




தொடரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்