முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டு : "பட்டியல் சமூகங்களும் பாழாய்ப்போன அவர்களது தேசமும்" - பகுதி இரண்டு.


சுக வாழ்வில் திளைத்திருக்கும் நம்மை திடீரென அதிகாரம் நம் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றி கொட்டடிக்குள் அடைத்து இதை செய் / அதை செய்யாதே என கை முறுக்கினால் என்ன செய்வோம்?

பணிந்து போவோம், பெரும்பாலும்.

இப்படி வடக்கில் தொடங்கிய வன வெளியேற்றம், தேசத்தில் காடுகள் உள்ள இடங்களிலெல்லாம் நடைமுறையில் வந்து, Criminal Tribes Act தேசிய சட்டமானது 1870களில் (சிப்பாய் கலகம் 1857 இல். இதில் உயிரிழந்தோரில் அநேகர் பழங்குடி வழிவந்தவராக இருக்கலாம்...சமூகவாரியான புள்ளி விபரங்கள் இல்லை. ஏன், இறந்த இந்தியர்களின் எண்ணிக்கையில்கூட தகராறு; பத்து லட்சத்திலிருந்நு ஒரு கோடி வரையாம்!).

சிப்பாய் கலகத்தின் பாதிப்பு அடுத்த நாற்பது ஆண்டுகள் நீடித்ததாம். இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் என இருப்பவனும் கணக்கு பார்க்க மறந்துபோக, பணம் மற்றும் அதிகார சலுகைகள் உள்ளவர் வசிக்குமிடங்களிலெல்லாம் இந்த தொல்குடி சமூகங்கள் வந்தேறிகளாக (ஆனாலும் அடிமைகளக) ஆக்கப்பட்டனர்.

அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட வாழ்வு. உணவு, நீர், மருத்துவம், கல்வி எல்லாம் எட்டாக்கனியாகிப்போச்சி. இனப்பெருக்கம் மட்டும் எப்படியோ நடக்க, பட்டியலின் நீளம் கூடிக்கொண்டே போனது; பிறந்த குழந்தைகள் அனைவரும் பிறப்புரிமையால் குற்றவாளியாக்கப்பட்டதால்.

பல தொழில் முயன்றும் சுற்றியிருக்கும் கயவாளி சமுதாயம் புறக்கணிக்க, களவு செய்து பிழைப்பது மட்டுமே அவர்களுக்கு வாழ உதவி செய்தது. இந்த வாழ்வியலின் மிகப்பெரிய ஆச்சரியம், இவர்களது களவு தேவைக்காக மட்டுமே இருந்தது. இதை உணர்ந்த நாட்டார் கிராமங்கள் பல, இவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை அனுப்பி களவிலிருந்து தப்பிப்பதும் நடந்தது.

இவர்களை தம் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் பகை தீர்க்கவும்கூட இவர் களை சுற்றியிருந்த இதே சமுதாயம் பயன்படுத்தி உதறவும் தயங்கவில்லை.

அரவான் என்றொரு திரைப்படம், வசந்தபாலன் இயக்கியது. நவயுக நாயகன் வேள்பாரி எழுதிய சு. வெங்கடேசனின் சாகித்ய விருது பெற்ற காவல் கோட்டம் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்.

இது பேசியதும் இவர்களது வாழ்வியல்பற்றிதான்.

இது வரலாறு சார்ந்த கதை. நிஜத்தில் ரத்தமும் சதையுமாய் இந்த பட்டியல் சமூகத்திலிருந்து வெடித்துக்கிளம்பி ஆங்கில ஆதிக்கத்தை உலுக்கிய ஒரு தனிமனிதன் பற்றி நம்மில் எத்தனை பேர் படித்திருப்போம்?

தேசத்தந்தை பற்றி சகலமும் அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு 'பூமியின் தந்தை'யை தெரியும்?

அறிமுகம் செய்கிறேன் வாருங்கள்!

தொடரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்