முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீரழியுதே சிவனில் பாதி!


பாலியல் வன்கொடுமைகள் பழகும் தேசமிது. கொடுமைகளுக்கு குறைவில்லாதவண்ணம் மாதம் மாறி மாறி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

சில அடிப்படை கேள்விகள், பதிலின்றியே இருக்கின்றன இன்றளவும்.

1. வன்புணர்வுக்கு ஏன் மரண தண்டனை வழங்கக்கூடாது? Capital Punishment must be given only for the rarest of rare cases என்று வழக்கமான ஜல்லியடியை நிறுத்தி, கொஞ்சம் சிந்திப்போமே. மரணமே தண்டனை என்று விதிகள் கடுமையானால் மட்டுமே வன்புணர்வு குறையும். தானாகவே rarest of rare ஆகிவிடும். சட்டமும் முற்றிலும் பொருத்தமானதாகிவிடும். நம் அரசியல் கட்டமைப்பு ஏன் இவ்விதமாய் சிந்திக்க மறுக்கிறது?

2. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, Yes You Can! பாதிப்பை உதறி வெற்றிக்கொடி கட்டலாம், வாழ்வில் ஜெயிக்கலாம்! என பேட்ரனைசிங் தொனியிலேயே Social media வில் கருத்து அலைகள். ஏன் ஒருவருக்கு கூட அரசு இயந்திரத்தை உத்வேகப்படுத்தியோ, காவல், நீதி துறைகளுக்கு வேண்டுகோள் விடுத்தோ கண்டனம் தெரிவித்தோ பப்ளிக் இன்ட்டரஸ்ட் செய்திகள் அனுப்பத்தோன்றவில்லை?

உச்ச நீதி மன்றத்தின் நீதியரசர்கள் ஏன் இவற்றை Suo Motu Cognisance என்கிற வகையில் அவர்களாகவே அரசை நீதி மன்ற படியேற்றும் வழக்குகளாக எடுத்துக்கொள்வதில்லை? 

சென்ற ஆகஸ்டு 15 அன்று, நாடே சுதந்திர உணர்வில் திளைக்கையில் ஹரியானாவில் ஒரு எட்டு வயது சிறுமி வன்புணர்வுக்கு ஆளானது எதனால்? குற்றவாளிகள் என்ன ஆயினர்?

பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளுக்கு ஆண்களே சட்டங்கள் இயற்றி, ஆண்களே தண்டனையை முடிவு செய்வது எப்போது மாறுமோ அப்போதாவது நம் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்குமா? 

நம் உலகம் நாகரீகமடைவதற்கு முன் பெண்கள் பூரண சுதந்திரத்துடனே வாழ்ந்தது நாம் அறிவோமா? தொல்குடியினர் வாழ்விலும் வன்புணர்வுகள் நிகழ்ந்தன. ஆனால் தண்டனைகளின் கடுமைத்தன்மை தலைமுறைகளுக்கும் அச்சம் உண்டுபண்ணக்கூடியவையாக இருந்தன.

தண்டனைகளால் குற்றங்களை தடுக்க / குறைக்கமுடியவில்லை என்றால் அவற்றால் என்ன பயன்?

நிர்பயாவை சிதைத்தவர்களை தூக்கு உடனடியாக தின்றிருந்தால், இன்று இந்த நிலை வந்திருக்காது...

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று வசன சகதி தெளிக்காமல் பார்ப்பவர்க்கு மட்டுமே வடக்கும் தேய்வது தெரியும். உத்திரப்பிரதேச புலந்த்சாகரில் சில ஆண்டுகள் முன்பு தேசிய நெடுஞ்சாலை வழிப்பறிக்கொள்ளையரால் ஒரு நாற்பது வயது தாயும் பதினைந்து வயது மகளும் உறவினர் முன்பு சிதைக்கப்பட்டனர்.இரு தினங்கள் முன்பு அதே நெடுஞ்சாலையில் தன் தமையனோடு ஒரு திருமண வரவேற்புக்கு சென்று திரும்பிய ஒரு பதினைந்து வயது சிறுமி சிதைக்கப்பட்டாள்.

இப்படி இன்றளவும் இந்திய இறையாண்மையை வன்புணர்வு செய்ய இவர்களுக்கு தைரியம் தருவது... நம்முடைய சட்டங்கள்தானே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்