ஒரு கதை சொல்லட்டுமா? ஜேம்ஸ் பாண்டும் V. V. S. லக்ஷ்மணும் விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில். பாண்ட் கரம் நீட்டி தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார், 'My name is Bond, James Bond'. நம்ம ஆளு லக்ஷ்மண், கரம் குலுக்கிக்கொண்டே சொல்கிறார், 'My name is Laxman, Sai Laxman, Venkata Sai Laxman, Veer Venkata Sai Laxman'. கரத்தை உதறி விடுபட்டு நம் ஜேம்ஸ், air hostess ஐ நோக்கி ஓடுகிறார், 'Sweetie, give me a seat anywhere else but NOT here!' அப்படி என்னதான் இருக்கிறது பெயரில்? பெயர் என்னவாக இருந்தால் போதும்? கவிக்கோ அப்துல் ரகுமான் 'பெயரில் நான் முடங்கிப்படுக்கக்கூட இடமில்லை' என்று ஒரு கவிதையில் எழுதியதாய் நினைவு... முன்னொரு காலத்தில் நம் வாழ்வின் எல்லைகள் சிறியதாய் இருந்த காலத்தில், நமை இன்னாரென 'இனம்'காண (ஊர், குலம், வம்சம், வீரம், பால்பேதம், இத்யாதி) பெயர் அவசியமாயிருந்தது, ஒரு திறவுகோல் போல. கதவுகள் பல மாறி, எல்லைகள் விரிந்து, நாவிதனும் சிற்றப்பனானதெல்லாம் நடந்துமுடிந்தபின்னரும் பெயர் எதற்கு? பெயரில்லாவிட்டாலும் நாம் ந
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!