1900 தொடக்கத்திலிருந்தே ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் போவதும் தீர்ப்பு வாங்கி திரும்புவதும், "நாட்டாம! தீர்ப்ப மாத்துங்க நாட்டாம!" என எதிர்க்கட்சியினர் மனு கொடுக்கவும் புதிய தீர்ப்பு, அதையும் எதிர்த்து புதிய மனு என 2022 வரை நீண்டுகொண்டிருக்கிறது! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு பிரபந்தங்கள் பாராயணம் செய்வது யார்.?வடகலையா தென்கலையா? என ஒரு குறிப்பிட்ட சாதியினரின் உட்பிரிவுகளுக்குள் மோதல், பலப்பல வருடங்களாக. சென்ற முறை தீர்ப்பில் "கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் பிரபந்தங்கள் பாடும் உரிமை தென்கலைக்கு மட்டுமே" என தீர்ப்பாகி, மேல்முறையீடு செய்து, நேற்றைய தீர்ப்பு, "நாங்க சொல்கிறவரை வடகலை தென்கலை ரெண்டு பேருமே சேர்ந்து பாடுங்கோ, பெருமாள் மகிழ்வார்" வர்ணாசிரம வண்ணங்களில் என்னதான் உயர் வண்ணம் தாழ்வண்ணம் என மனிதர்கள் தம்மை அடையாளமிட்டுக்கொண்டாலும் ஒவ்வொரு வண்ணத்துக்கு உள்ளேயும் எத்தனை வர்ணங்கள், எல்லைக்"கோடுகள்"! Black and White are not absolute colours; they are shades of gray present or absent. 21 ஆம் நூற்றாண்டில் One Nation One Language One Food
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!