முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அலாவுதீனும் அடிமை இந்தியர்களும்

 


2002 இல் ஒரு ஐரோப்பிய நிறுவனத்தில் மென்பொருள் எழுதும் வேலை (software programming). 

புதிதாய் ஒரு ஐரோப்பிய பங்குச்சந்தை தொடக்குவதற்கு தேவையான வணிக இணைப்பு மென்பொருள் எழுத பன்னாட்டு பொறியியல் குழு ஒன்று, எங்கள் குழு, ராப்பகலாய் உழைத்துக்கொண்டிருந்தது. 

உலகம் முழுதும் பரவப்போகும் அந்த புதிய வணிக தளத்தின் மென்பொருள் கட்டமைப்பின் தலைவர், Michael Schumacher, ஒரு ஸ்விஸ் ஜெர்மன் மனிதர்.

ஒரு கட்டமைப்பை முன்னடத்திச்செல்ல அவசியமான தலைமைப்பண்புகள் இவரிடம் ஏராளம். அடுத்தவர் நேரத்தை வீண்டிக்கமாட்டார், தனது குழு உறுப்பினர்களை துல்லியமாக கணிப்பதுல் வல்லவர் ஆனாலும் அவர்களில் யாராவது பணியில் பிழை செய்தால் அப்பழியை அவர் ஏற்றுக்கொண்டு சரி செய்வார்.

மிகப்பெரிய வளமான குடும்பத்தில் பிறந்திருப்பாரோ? உலகப்புகழ் கல்லூரிகளில் படித்திருப்பாரோ என்றால் அது மாதிரியான பின்புலமெல்லாம் அவருக்கு இல்லை.

ஒரு நாள் மாலை பணி முடித்து அவரோடு தேநீர் அருந்துகையில் அவரது பெயரில் உள்ள Schumacher என்பதன் பொருள் கேட்டேன். அவரது விடை சட்டென அலாவுதீன் கில்ஜியை என் நினைவில் கொண்டு வந்தது. அதனோடு கூடவே என்னுள் ஒரு ஏக்கப்பெருமூச்சையும் எழுப்பியது.

அவருக்கும் அலாவுதீனுக்கும் என்ன தொடர்பு? அலாவுதீனுக்கும் இந்திய அடிமைகளுக்கும் என்ன தொடர்பு?

இந்த கேள்விக்கு விடை அறிய நாம் சில பல நூறாண்டுகளுக்கு பின்னோக்கி பயணிக்கவேண்டும்!

பதின்மூன்றாம் நூற்றாண்டு.

மேற்காசியாவிலிருந்து படையெடுத்து வந்த இஸ்லாமியர்கள் தில்லி நகரில் கோலோச்சிய காலம்.

இன்றைய இந்தியாவில் பெரும்பான்மை மக்களை அரசியல் கட்சிகள் ஒன்றிணைக்க பயன்படுத்தும் வரலாற்றுக்களம் + காலம்.

ஒருபுறம் உலகெங்குமிருந்து விதவிதமான  புதிய புதிய கைவினைநுட்ப வேலைகளில் விற்பன்னர்கள் தில்லியில் குவிய (பட்டு நெசவு, கம்பள நெசவு இரு உதாரணங்கள்), அவர்களுடன் பருத்தியை நூலாக்கும் ராட்டினங்களும் தறி போன்ற கருவிகளும் முதல் முதலாய் இந்தியாவிற்கு வந்திறங்க... இவற்றை பயன்படுத்தி விற்பனைப்பொருட்களை விரைவாய் தயாரிக்க ஆட்கள் தட்டுப்பாடு உண்டானது.

(இத்தாலியில் தொடங்கிய Renaissance என்கிற மறுமலர்ச்சி அலை, மத்திய ஆசியாவை நனைத்து கிழக்காசியா நோக்கி நகர்ந்ததன் விளைவு இது)

"Staff wanted" என இன்று போல விளம்பரங்கள் செய்யவேண்டிய நிலையில் அன்றைய அரசும் வணிகமும் இல்லை. 

"நீ என்ன பண்ற, உன் படையோட வடக்கால போயி கண்ணுல படுகிறவன எல்லாம் புடிச்சிட்டு வர்ற"

"வடக்கால அவன் போய்ட்டான்...நீ என்ன பண்ற, உன் படையோட தெக்கால போயி கண்ணுல படுகிறவன எல்லாம் புடிச்சிட்டு வர்ற"

என அலாவுதின் கில்ஜி ஆணையிட, பல்லாயிரக்கணக்கானவர்கள் பிடித்துவரப்பட்டனர் அடிமைகளாக.

கொண்டுவரப்பட்ட அடிமைகள் நம் இந்திய வர்ணாசிரம அடுக்குகளின் பெரும்பான்மை கீழ்வர்ண மக்களே.

இவர்கள் அனைவரும் புதிய நுட்பங்களில் பயிற்சி பெற்று புதிது புதிதாய் பொருட்களை சந்தைகளுக்கு அனுப்பும் assembly line workers for Gilji.

வர்ணாசிரம கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட தொழில்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அநேக தொழில்கள் புதிதாக உள்ளே நுழைந்ததால் ஏற்படும் disruption, வர்ணாசிரம அமைப்பிலும் அன்று நிகழ்ந்தது.

பானை செய்பவன் பானை மட்டுமே செய்யலாம், செருப்பு தைப்பவன் செருப்பு மட்டுமே தைக்கவேண்டும் என வர்ணாசிரம மேல்தட்டு விதித்திருந்த வரைமுறைக்குள் முடங்கியிருந்தவர்கள் திடீரென கில்ஜியின் அடிமைகளாகி... பல புதிய தொழில்களும் தொழில்நுட்பங்களும் மளமளவென கற்றுத்தேற...இவர்களுக்கான demand உயரத்தொடங்கியது.

Cross professional training எனப்படும் 'யார் வேண்டுமானாலும் எந்த வேலைகளை வேண்டுமானாலும் கற்கலாம், சாதிச்சங்கிலிகளின் தடை இல்லாமல்! எங்களுக்கு வேலை நடந்தால் போதும்!' எனும் வாய்ப்பினால் இவர்கள் முதல் முதலாய் சாதீய கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலையானது அடிமைகளானபின்புதான் என்பது துயர்முரண்...

புதிய தொழில்களில் பாண்டித்யம் பெற்ற அடிமைகள், வளரும் சந்தைத்தேவைகளை பயன்படுத்தி மெல்ல மெல்ல தங்கள் விடுதலையை விலைக்கு வாங்கும் நிலைக்கு உயர்ந்து (yes, they could "buy" their freedom!), அதில் பலர் சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாக மாறி, அதில் ஒருவர் தில்லி சுல்தானாகவும் ஆனது வரலாறு.

கில்ஜியின் படை அடிமைப்படுத்தியபோது இரத்த வெள்ளம் பாய்ந்து, ஏராளமானோர் மடிந்து, தில்லியின் மக்கள் தொகையில் மூன்றில்  ஒரு பங்கு 14-15 ம் நூற்றாண்டில் அழிந்தது என ஆராய்ச்சியாளர்கள் பதிவு ஒருபுறம், 15 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் தில்லியைச்சுற்றி ஏராளமான நகரங்கள், நிரம்பி வழியும் மக்கள்தொகை, அடிமைச்சந்தைகள் என எதுவும் இல்லை என வரலாற்றுப்பதிவுகள் மறுபுறம். இவை இரண்டுக்கும் இடையில் உண்மை ஒளிந்துகொண்டிருக்கலாம்...

அரசியல் கட்சிகள் அவர்களது ஆதாயங்களுக்காக selective data, selective conclusions செய்துகொண்டுதான் இருக்கப்போகிறார்கள். ஆனால் இந்த contested period of Indian History வெளிச்சமிட்டுக்காட்டிய உண்மை ஒன்றை, மெத்தப்படித்தவர்களாவது உணர்வார்களா?!

New technologies and newer opportunities-driven-demands actually broke through the ironclad walls of caste structures of mediaeval India and liberated lot of people through slavery route (ironically!). Technology has done it in modern India too after almost 700 years, post 1991 economic liberalization. New Tech and Business areas have levelled the playing fields for the lower caste people unlike any disruptions seen in a long time.

வர்ணாசிரமம் இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமா என்ன?

வர்ணாசிரம கட்டுப்பாடுகள் இன்றும் தொடர்வதும், ரோகித் வேமுலாக்களும் ஏனைய அடித்தட்டு மக்களும் சமுதாய ஏணிகளில் தடைகளை மீறி அறிவின் துணையோடு ஏற முயன்று தோற்றுக்கொண்டிருப்பதும், உயர்கல்வி பணம் படைத்தவர்க்கு மட்டுமே என ஆக்கி, 'உயர் கல்வி கற்கும் அனைவருக்கும் ஒரே நுழைவுத்தேர்வு' என்கிற இலக்கு நோக்கி அரசு இயந்திரங்கள் உறுதியாக நகர்ந்துகொண்டிருப்பதும்  சொல்லாமல் சொல்லும் விடைகளை நாம் உணர்வோமா?

சரி. மைக்கேல் ஷீமேக்கர் வெகுநேரமாக காத்திருக்கிறாரே. Let us get back to 2002. 

எனது ப்ராஜக்டின் தலைவர், Michael Schumacher - செருப்பு தைக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவர். Schumacher என்பது அவரது மூதாதையரின் தொழில் அடையாளம்! இன்றுவரை அவர் பெருமையுடன் பயன்படுத்தும் அடையாளம்!

அது எப்படி? ஒரே பூமியில்ஒருவருக்கு அது பெருமை தரும் அடையாளமாகவும் இன்னொருவருக்கு இது துயரச்சுமையாகவும் மாறுகிறது?

Medieval ஐரோப்பாவில், அதாவது 13-18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில், ஐரோப்பாவிலும், தொழில் அடிப்படையிலான Guild எனப்படும் அமைப்புகள் பல இருந்தன. செருப்பு தைப்பவர், விவசாயி, மீனவர், பொற்கொல்லர், இரும்பு வேலை செய்பவர், தையல் கலைஞர்... என பிறப்பு வழி தொழில் பழகும் குழுக்கள்.

13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கிய மறுமலர்ச்சி, கடல் வணிகமாக உலகம் முழுதும் பரவி, ராச்சியப்பெருங்காலனிகளாய் மாறி, 18 ஆம் நூற்றாண்டின் கல்வி கட்டமைப்புகளும் அவற்றின் வழி வந்த இயந்திர புரட்சியும் உற்பத்தி தேவைகளை பன்மடங்கு பெருக்க, எல்லா Guildகளில் இருந்தும் மக்கள் புதிய கல்வி பயின்று புதிய தொழில் நுட்பங்களுக்கு மாறி, திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைக்கு உயர இவர்களுக்கு தேவைப்பட்டது இருநூறு ஆண்டுகள் மட்டுமே.

இன்றும் தம் பரம்பரை தொழில் பெயரை பெருமிதமாய் தாங்கி இவர்கள் வேறு பல தொழில்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

நம் நாட்டிலும் இது நிகழ்வது சாத்தியமா?!

ஆங்கில காலனி ஆதிக்கத்தில் ஒரு சிறு வாய்ப்பு இருந்தது. ஆனால் அது நழுவிப்போனது... 

முதன்முதலாய் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மகாராணியின் ராச்சியம் உத்தரவிட, அவர்கள் அதை செயல்முறைப்படுத்த முயன்று, தொடக்கத்திலேயே தலை சுற்றிப்போயினர். ஏனெனில் இந்திய வர்ணாசிரம அடுக்குகளும் அவற்றின் பேதங்களும் ஆங்கிலேயர்களுக்கு புரியாத புதிர். எனவே அப்போது அவர்களுக்கும் ஏனைய வர்ண மக்களுக்கும் பாலமாக செயல்பட்ட இந்திய உயர்வர்ண ஊழியர்களிடம் அந்த பொறுப்பை தந்தனர், ஒரே ஒரு வறைமுறையுடன்: 'Identify them as Christians / Muslims and those who don't belong to these, bracket them as Hindus. That would be enough for us; we don't care about your caste structures. You do whatever you want with it as we don't understand it anyway!'

இன்றைய சுதந்திர இந்தியாவில்?

பெருகி வரும் கல்வி நிறுவனங்களும் நவீன தொழில்நுட்ப நிறுவனங்களும் 'இது சாத்தியமே' என நம்பிக்கை தரத்தொடங்கிய கடந்த சில வருடங்களில் (இவற்றிற்கு parallel narrative ஆக) நம் பொது சமூக கட்டமைப்புகளை உயர்த்தி்ப்பிடித்த நீதித்திறை, சமூக நலம், குற்றவியல், கல்வி என அனைத்து தளங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எதிர்-மாற்றங்கள், நாளை மெல்ல மெல்ல தனியார் துறைகளில் நுழையும் நிலையும் வரலாம் என்கிற கவலையை தரத்தொடங்கியிருக்கிறது...

காலம் விடை அளிக்கும்!

பேரன்புடன்,
பாபுஜி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்