முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

KGF ஒண்ணுடா, KGF ரெண்டுடா!

 

பட்டி தொட்டி எல்லாம் கேஜிஎஃப் காய்ச்சல் கொரோனாவுக்கே டஃபு குடுத்தப்பகூட நான் சிக்கிக்கல. தெளிவா ஒதுங்கியே இருந்தேன்.

இப்ப பார்ட் 2 வந்தாலும் வந்தது, காய்ச்சல் அதிகமாக, 'தியேட்டர்லதான் பாக்கணும்! நீ கூட்டிகிட்டு போ!'' என அழுத்தமும் சேர்ந்து கொள்ள, 'பார்ட் 1 முதலில் ஓடிடி இல் பார்க்கிறேன். அப்புறமா முடிவு பண்ணலாம்' என்று...


மூன்று முறை முயற்சி செய்து விட்டேன் முடிலபா!


முதல் முறை 10 நிமிடம் மட்டுமே பார்க்க முடிந்தது.

இரண்டாம் முறை 17 நிமிடம்.

மூன்றாம் முறை முப்பத்து மூன்று நிமிடம், sheer torture! கதையிலும் அதுவே, காண்பவருக்கும் அதுவே!


தங்க சுரங்கங்களில் கொத்தடிமைகள், மனிதர்கள் dispensable resources. Bleak bleak bleak life. இதில் முளைத்து வரும் விடிவெள்ளி, இல்லை இல்லை, சுடர் விளக்கு...இல்லை இல்லை, தீப்பந்தம்...இல்லை இல்லை, வெடிகுண்டு...இல்லை இல்லை சூறாவளி...இல்லை இல்லை, கடவுள்போல ரட்சகன், எதற்கும் அஞ்சான் இவனை வெல்லல் யார்க்குமரிது!

அதிலும் படத்தில் நாவலாசிரியர் ஒருவர் வரலாற்றில் மறைக்கப்பட்ட கதை சொல்கிறேன் என ரன்னிங் கமெண்டரி தொடங்கி படம் முழுதும் நிறுத்தாமல் முழங்க, தப்பித்தவறி அவர் gap விட்டாலும் யாராவது ஒருத்தர் மாற்றி ஒருவர் "ஆஹாங்கிறேன், ஓஹோங்கிறேன்!' என பில்டப் மேல் பில்டப் எகிறவைக்க, யாஷ் 'ஸ்லோ மோ'வில் உணர்ச்சிகள் எதுவும் காண்பிக்காமல் சுத்தியல், மெட்டல் பைப்பு, பெரிய சுத்தியல், அதை விட பெரிய சுத்தியல் என கையில் கிடைக்கும் வெப்பன்ஸ் எல்லாம் பயன்படுத்தி அடித்து துவைக்க, மலை போல விக்டிம்சின் பாடிகள் குவிய, ஐயகோ, மறுபடி மறுபடி அந்த நாவலாசிரியர் குறுக்கே குறுக்கே வத்து கதை சொல்ல, அதை காணொளிப்பதிவாக மாற்றும் crew முதல் அங்கு வேலை செய்யும் பியூன் வரை அனைவரும் களத்தில் குதித்து கதை பற்றி விவாதிக்க...ஐயகோ ஐயகோ ஐயகோ!!!


மூன்றாவது முறை படம் பார்க்கும் அட்டெம்ப்ட் ரெண்டு நாளு முந்தி. ங்கொய்யால இன்னமும் காதுக்குள்ள நெறைய பேரு குந்திகினு 'நெருப்புடா நெருங்குடா பருப்புடா' என்று கதை சொல்லிக்கொண்டே இருப்பது போல ஓரே feelingu!

பார்ட் 2 ஆவது பார்ட் 3 ஆவது?! ஆள வுடுங்கடா சாமி!!!


Mad Max படங்களை ஒரு தங்கசுரங்கத்தில் நடத்தினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது filmography, sets, goriness etc...

1000 கோடியாம்? எத்தனை கோடில முடிஞ்சாலும் என்னோட 200 ரூவா மிச்சம்டோய்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்