முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

என் காதல் கதை என்னவாக இருக்கும்?

என் காதல் கதை என்னவாக இருக்கும்? எந்த வயதில் தொடங்கியது என்று நினைவில்லை... பார்க்கும்போதெல்லாம் பரவசக்கிளர்ச்சி. 'என்ன வண்ணம், என்ன நேர்த்தி, என்ன செழுமை?! ஏயப்பா!!!!' ரசிப்பு வியப்பாக மாறி வியப்பு காதலாய் மாறி... வனப்பென்னவோ கூடிக்கொண்டே... அற்புதங்களின் பிறப்பிடமாய் கண் முன்னே நடமாடுகையில் நெகிழாமல் இருக்க முடியுமா?! சில சமயங்களில் ஒப்பற்ற வனப்புடன், சில சமயங்களில் சோர்வாக, இன்னும் மற்ற சமயங்களில் வெறுமையாய்... பருவ மாற்றங்கள் புரியத்தொடங்கியபின் எப்படி இருந்தாலும் என் கண்ணுக்கு அழகோ அழகு! வெறுமையிலிருந்து வனப்புமீண்ட பருவத்தில் மேனியிலிருந்து நீளும் ஆடைகளின் மேலே விழுந்து குதிரைபோல புரளவேண்டுமென பெருவிருப்பம் தோன்றும். சில முறை மகிழ்வாய் புரண்டுமிருக்கிறேன், குதிரையாக மாறியதான உணர்வில். இப்படியாக காதல் கொழுந்து விட்டெறிய, உரையாடத்தொடங்கினோம், மௌனமாய், சில நேரங்களில் பல மொழிகளிலும்கூட.  நீளும் உரையாடல், விழித்திருக்கும் நேரமெல்லாம்... சுட்டெரிக்கும் வெயிலில், குளிர்நிலவு இரவில், நிலவற்ற இரவுகளில் மின்மினிப்பூச்சின் துணையோடு, தூக்கத்த

நாம்!

எரிபொருள் விலை வானேறினால் என்ன? பயணம் குறைப்போம். விளைபொருள் விலை வானேறினால் என்ன? உணவை குறைப்போம். நன்னீரின் விலை வானேறினால் என்ன? அருந்துவதை குறைப்போம். விளைநிலங்களில் விமானமிறங்கினால் என்ன? விதைப்பதை குறைப்போம். ஈர நாட்களையும் வெப்பம் சுட்டால் என்ன? நடமாடுவதை குறைப்போம். பூமியை ஞெகிழி* மேய்ந்தால் என்ன? நம் பங்கை செவ்வனே சேர்ப்போம். அமிலமழை பொழிந்தாலென்ன? வேதியியல் கற்போம். பேச்சுரிமை எழுத்துரிமை புதைக்கப்பட்டால் என்ன? (கண்ணீரில்) மௌனாஞ்சலி செய்வோம். ஒரு கூட்டிற்குள் புலனடக்கி உறங்கும் நமக்கு விழித்திருக்கையிலும் இது சாத்தியப்படாதா என்ன? மொத்தமாய் நம் அடர்மௌனம் நம்மை கவ்வுகையில்கூட அண்டமுழுதும் ஒலிக்கும் (நம்மனைவரின்) பேரிதயத்துடிப்பை என்ன செய்வோம்? நிறுத்திக்கொள்வோம்! ஏனெனில் நாம் சுதந்திரப்பறவைகள். முடிவெடுக்கும் உரிமை நம் பிறப்புரிமை. அதை யாரும் பறிக்க விடோம்! (*ஞெகிழி - ப்ளாஸ்டிக்)

யாரைக்கடிக்கலாம் என...

யாரைக்கடிக்கலாம் என... ----------------------------------------- மரகதப்பச்சை கம்பளமாம் பளிங்கு நீர் ஓடைகளாம் ஏராளமாய் விலங்குகளாம் வண்ணமிகு பறவைகளாம் மனதிற்கினிய கானங்களாம் இனிமையான காற்றாம் குளிர்வெளிச்ச சூரியனாம் (அழகான) அழகு குமரியாம் (இணையான) இணை காளையாம் இரண்டுமே அப்பிராணிகளாம் ஒரே ஒரு ஆப்பிள்மரம் தவிர. தவிப்பான தவிப்போடு ஆப்பிள் மரம் ஆடுது குலுங்குது நடுங்குது மருளுது குமரியோ காளையோ  பக்கம் வருகையிலெல்லாம்.. (ஐயோ) இலை துளிர்க்குதே (ஐயோ) மொட்டு கட்டுதே (ஐயோ) மொட்டு மலருதே (ஐயோ) வண்டு தேனாடுதே (ஐயோ) பூ சூல்கொண்டதே (ஐயோ) பிஞ்சு உருவானதே (ஐயோ) காய் கனியுதே (ஐயோ) தோல் சிவக்குதே கடவுளே இந்த 'ஒன்றும்' அறியா ஜீவன் இரண்டும் அருகில் வருகையில் வேரும் கலங்குதே! ... இன்றா? நாளையா? ... ! ஏடன் தோட்டத்தில் அதன்பின் ஒருநாளும் அம்மரம் பூக்கவில்லையாம்!

என் பெயர் யுவானிட்டா. சந்திக்கலாமா?

'என் பெயர் ஜூவானிடா...' பதினான்கு வயது சிறுமி. மேன்மையான குடும்பத்தில் செல்ல மகள்.  நிலப்பரப்பெங்கும் மழையின்றி கடும் வறட்சி. பயிர் கருக, கால்நடைகள் கொத்து கொத்தாய் நீரின்றி இறக்க, தலைவர்கள் (ஊர், மத, நாட்டு) கூடிப்பேசி முடிவெடுக்கிறார்கள்; 'தெய்வங்களுக்கு ஏதோ குறை வைத்துவிட்டோம். நிவர்த்தி செய்தால்தான் மழை வரும், செழிப்பு வரும். இந்த ஊரில் தலைவரின் பெண் ஜூவானிடா, பக்கத்து ஊரில் தலைவரின் ஆண் குழந்தை. அதற்கு அடுத்த ஊரில்...' என 'விருப்பப்பட்டியல்' நீள்கிறது. ஒரு வருடம் தள்ளி ஒரு 'நல்ல நாள்' குறிச்சாச்சி.  ஜூவானிடா வழக்கம் போலவே விளையாடித்திரிகிறாள். பெருஞ்சோகத்தை முகத்தில் காட்டாது மறைத்தபடி அவளது பெற்றோர் அவளுக்கு செழுமையான உணவுகளை வழங்குகின்றனர். ஊரும் கூடி அவளை ஊட்டி வளர்க்கிறது. அவள் உண்டு உறங்கியபின்னும் உறக்கமின்றி தவிக்கும் அவளது பெற்றோர் இன்னும் ஒரு வருடம், ஏன்? வாழ்நாள் முழுதும், நிம்மதியாய் உறங்கப்போவதில்லை; 'நாட்டுக்காக என்றாலும்.... வலிக்கிறதே!' பொழுதுகள் கரைய, பருவங்கள் மாற, வருடமொன்று உதிர்கிறது. அவளுக

பால்யகால சகி

பால்யகால சகி ------------------------ அக்கட பூமியின் 'கதா' நாயகன்! மஜீதும் சுகறாவும் பால்ய காலம்தொட்டு நட்பு. பருவத்தில் காதலாகி, பொருளாதார மலை ஆழத்தால் சேரமுடியாது, மஜீது வீட்டை விட்டு வெளியேறி தேசாந்தரியாக, அவனது குடும்பத்தொழில் நசித்துப்போக, அதற்குள் சுகறாவை 'ஆக்கங்கெட்டவனொருவன்' நிக்காஹ் செய்து பெண்டாண்டு பல்லுடைக்க, அவள் வறுமையில் வாடும் பிறந்த வீட்டில் தான் தனியாய் சுமந்த பழைய சுமையே மேல் என திரும்ப, நாடோடி மஜீதும் வீடு திரும்ப, இப்படி ஏதேதோ ஆகிப்போனபின்பு, இவர்கள் நட்டு வளர்த்த தோட்டச்செடிகளோடு இவர்களது நேசம் 'விட்ட இடத்திலிருந்து' துளிர்க்க, வறுமையால் கன்னிமை மாறாத சகோதரிகளை மணம் செய்து கொடுக்கவேண்டி மஜீது திரும்ப பயணப்படுகிறான். பணம் சேர்த்து கடமைகளை கரை சேர்த்து பின் சுகறாவோடு இணைய திட்டம்.  பணியிடத்தில் வரும் வருவாயை ஊருக்கு அனுப்பி, பாதை தெரியுது பார் என்ற நம்பிக்கை வருகையில் ஒரு விபத்தில் ஒரு காலை...  ஊருக்கு தெரிவிக்காமல் வேறு ஏதேதோ வேலைகளை முயன்று பிடிமானம் கிடைப்பதற்குள் ஊரிலிருந்து கடிதம்... காத்திருந்து காத்திருந்து, நோய

மரம், இன்று விதையானது...

சேந்தன்குடிக்காட்டில் இன்று விதையாய் - மரம் தங்கசாமி... ஐந்து ஆண்டுகள் முன் என் பால்ய தோழன், உறவினன் வீட்டுக்கு (பெருமகளூர், பேராவூரணி அருகில், பேராவூரணி, பட்டுக்கோட்டை அருகில், பட்டுக்கோட்டை, தஞ்சை அருகில்) சென்றபோது, 'இன்று நேரமி்ருந்தால் சேந்தன்குடி போகலாமா?' என்றான். 'அங்க மரம் தங்கசாமின்னு ஒருத்தர், மரங்கள உயிராய், சாமியாய் கொண்டாடுபவர். போலாமா?'  மரங்கள் மீதான என் பேரன்பை உணர்ந்தவன், அழைக்கிறான். நானும் என் அண்ணனும் அவனுடன் கிளம்பினோம். ம.தங்கசாமியின் மகன் எங்களை ஒரு சாலைப்பிரிவில் சந்தித்து தோட்டத்துக்கு (வனத்துக்கு!) அழைத்துச்சென்றார். வயதான மனிதர் (அப்போது 76 வயதாம்), பார்வை துல்லியம், நடையில் தளர்வில்லை, எதிர்கொண்டு வரவேற்றார்.  'ஒங்க குலசாமிய கும்பிட்டுக்குங்க' என்று அங்கு ஒரு சுவரை காட்டினார். அதில் ஆள் உயர நிலைக்கண்ணாடி மட்டுமே! அதில் தெரிந்த எங்கள் பிரதியை வணங்கி உள்ளே சென்றால், எங்களை உள்வாங்கிக்கொண்டது வனம்!  நெடிதுயர்ந்த பலா, வேம்பு, மா, சந்தனம், வேங்கை, இன்னும் பல வகை மரங்கள், எலுமிச்சை, கொய்யா, பலப்பல பழ மரங்க

கனவு இல்லம் - 1

"ரியல்" எஸ்டேட்! புது வீடு வாசனையே தனி! புதுவீடு புகுந்த அன்று சுற்றமும் நட்பும் அன்பில் நனைந்த வாழ்த்துக்கள் தூவ வாழ்வு இனிதே ஆரம்பம்.  வீடு வந்து சில காலம் 'finishing touches' எல்லாம் கொடுத்து முடித்தபின் எப்போதாவது சில பழுதுபார்த்தல் வேலைகளும், குறிப்பிட்ட கால இடைவெளியில் scheduled maintenance எனப்படும் பழுதுபார்த்தல் / எதிர்கால சரிபார்ப்பு வேலைகளை முன்கூட்டியே தவிர்த்தல் வேலைகளையும் செவ்வனே செய்து, மனதுக்குப்பிடித்த வகையில் வீட்டை அலங்கரித்து, நிறம் மாற்றி, மெருகேற்றி என செவ்வனே வாழ்கையில் ஒரு நாள் முன்னறிவிப்பு ஏதுமின்றி வீட்டை காலி செய்யும்போதும் தெரியாது, நம் சொந்த வீடும் வாடகை வீடுதான் என்று! வீடென அதுவரை நாம் கட்டிக்காத்தது வீடே இல்லையாம், அது வெறும் ஆடையாம். புது நெசவுக்கு நூல் வேண்டி பழைய ஆடைகளை தானே எடுத்துக்கொள்ளுமாம் ஒரு பெரு விசை தறி இயந்திரம்! ஆன்மாவுக்கு ஏது 'சொந்த' வீடு என அடுத்த ஆடை ஒன்றை அந்தத்தறி தானே விரும்பி உடுத்தி விடுமாம்! பிலாசபி இல்லைங்க. இது வாழ்வின் நிதர்சனம். கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்ப