முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பால்யகால சகி


பால்யகால சகி
------------------------

அக்கட பூமியின் 'கதா' நாயகன்!

மஜீதும் சுகறாவும் பால்ய காலம்தொட்டு நட்பு. பருவத்தில் காதலாகி, பொருளாதார மலை ஆழத்தால் சேரமுடியாது, மஜீது வீட்டை விட்டு வெளியேறி தேசாந்தரியாக, அவனது குடும்பத்தொழில் நசித்துப்போக, அதற்குள் சுகறாவை 'ஆக்கங்கெட்டவனொருவன்' நிக்காஹ் செய்து பெண்டாண்டு பல்லுடைக்க, அவள் வறுமையில் வாடும் பிறந்த வீட்டில் தான் தனியாய் சுமந்த பழைய சுமையே மேல் என திரும்ப, நாடோடி மஜீதும் வீடு திரும்ப, இப்படி ஏதேதோ ஆகிப்போனபின்பு, இவர்கள் நட்டு வளர்த்த தோட்டச்செடிகளோடு இவர்களது நேசம் 'விட்ட இடத்திலிருந்து' துளிர்க்க, வறுமையால் கன்னிமை மாறாத சகோதரிகளை மணம் செய்து கொடுக்கவேண்டி மஜீது திரும்ப பயணப்படுகிறான். பணம் சேர்த்து கடமைகளை கரை சேர்த்து பின் சுகறாவோடு இணைய திட்டம். 

பணியிடத்தில் வரும் வருவாயை ஊருக்கு அனுப்பி, பாதை தெரியுது பார் என்ற நம்பிக்கை வருகையில் ஒரு விபத்தில் ஒரு காலை... 

ஊருக்கு தெரிவிக்காமல் வேறு ஏதேதோ வேலைகளை முயன்று பிடிமானம் கிடைப்பதற்குள் ஊரிலிருந்து கடிதம்... காத்திருந்து காத்திருந்து, நோய்ப்பட்டு முற்றியும் அவனை கவலை கொள்ளச்செய்யவேண்டாம் என மறைத்து, இறக்கும் வரையில் அவன் வருவானா என ஏங்கி எதிர்பார்த்து சுகறா மரித்துப்போன செய்தி சுமந்து...

காதல் கதையென்றாலே மகிழ்ச்சி அல்லது முறிவு என்பதை தாண்டி ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய இஸ்லாமிய கேரள சூழலில் ரத்தமும் சதையுமான உணர்வுகளால் இந்த கதையை எழுதியவர் வைக்கம் முகமது பஷீர். அவரது முதல் நாவல் இது; பால்யகால சகி!

அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு (அதற்குபின்னரும்) நல்ல இலக்கியத்தை நேசிப்பவரின் சகாவாக இவர் ஆகிப்போனதன் காரணம், உணர்வில் தோய்ந்த எழுத்து!

அவன் கடமைக்காக பணம் சேர்க்க தூரநிலம் கிளம்புகையில் சுகறா காதலால் கசிந்துருகிய மனதோடு ஏதோ சொல்கிறாள். சூழ்நிலை சப்தங்களால் மஜீதுக்கு கேட்கவில்லை. அவள் இறந்தபின் 'அன்று இவள் சொல்ல வந்தது என்னவாக இருக்கும்?' என சிந்தித்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு தெரியாதா என்ன?!

மஜீதே என யாராவது அழைத்தால், இவர்தானோ என திரும்பிப்பார்ப்போம், இந்தக்கதையை படித்தபின்!

காதலை இவர் அணுகும்விதம் அலாதி. ஆனாலும் எனக்கு மஜீதின் மீது கடும் கோபம். பல ஆண்டுகள் தொடர்பின்றி சுற்றித்திரிந்து வீடு மீள்கையில் சிறுவயதிலேயே பெண்களை மணமுடிக்கும் சமூகத்தில் இவனுக்காக்காத்திருப்பாள் என்ற ஏமாற்ற எதிர்பார்ப்பு கொண்டவன் என்பதாலும், 'ஏன் ஒரு கடிதம்கூட போடலே மஜீதே? என பெரிய விழிகளில் நீரோடு சுகறா கேட்கையில் 'தோணல' என ஒற்றை வார்த்தையில் கடந்ததாலும்!

"ஒண்ணும் ஒண்ணும் சேர்த்தா பெரிய ஒண்ணு!" அதற்கான நதிமூல விளக்கம்... ஈ சேட்டன் வேற லெவலானு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...