'தமிழ்னா எனக்கு உசுரு. நல்ல books எல்லாம் தேடித்தேடி படிப்பேன். ஆன்லைன்ல கூட கிடைக்குது...But you know, நல்ல தரமான நாவல்லாம் rare. புதுசா எழுதறவங்க சுமாராதான் எழுதுறாங்க...அதுவும் fiction தான் நல்லாருக்கும். Non fiction லாம் chance ஏ இல்ல...' வணக்கம், உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இந்தப்பதிவு உங்களுக்கே! கடல் என்பது நம்மில் அநேகருக்கு வியப்பு ஏற்படுத்தும் ஒரு பெரிய பாத்திரம், அவ்வளவே. அலைகளில் பயத்துடன் கால் நனைத்தும், ஈர மணலில் நடை பயின்றும் கிளிஞ்சல்கள் பொறுக்கியும் மகிழ்வோம். கரை திரும்பி கால் மணலைத்தட்டுகையில் 'என்னா பிசுபிசுப்பு. தட்டுனாலும் போமாட்டேங்குது' என்று அலுப்போம். சமஸ் என்கிற இளைஞர் நம்மில் ஒருவர்தானென்றாலும் அவர் நம்மைப்போல் அல்ல! 'நீராலானது உலகு, உலகில் 70 சதம் கடல்' என்ற விபரங்களை நம்மைப்போல் படித்ததும் மறப்பவரல்ல. 30 சத நிலப்பரப்பில் வாழும் நமக்கு எஞ்சிய 70 சத வாழ்வை , அவை சூழும் நிலப்பரப்பை, மனிதர்களை, அவர்களின் வலிகளை, துயரங்களை, மகிழ்ச்சியை (இளையராஜா!) அவர்களுள் ஒருவராய் வாழ்ந்த நாட்களை, சேமித்த முத்துக்களை அ
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!