முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புள்ளிகளை சிறைபிடித்த கோலம்!


கோலம் பார்த்திருக்கிறீர்களா? புள்ளி வைத்து கோடிழுத்து?

மாக்கோலம் கோலத்துள் எல்லாம் தலை, ஏனெனில் அது எறும்புக்கும் ஏனைய உயிர்க்கும் உணவளிக்கும் உன்னதக்கலை.

சமையலறையில் மட்டுமே அடைந்திருந்த பெண்கள் மனச்சிறைகளில் முடங்கிவிடாமல் கற்பனைத்திறன் வளர்த்து புள்ளிகளிலும் கோடுகளிலும் தம் எண்ணத்திறத்திற்கேற்ப செய்த மாயம், எறும்புக்கும் ஏனைய உயிர்க்குமான விருந்து உபசரிப்போடு இணைந்தபோது ஒரு பண்பாடு பண்பட்டது. 

காட்டில் கதிரடித்து நெல்மணிகள் உதிர்த்து, சேர்த்து, மூட்டை கட்டி வீடு சேரும். அதில் ஒரு கையளவு உரலில் ஏறி தோலுறிந்து அரசியாகி, அரிசியாகி சேரும். முழு அரிசி சோறுக்கும், உடைந்த  அரிசி 'நொய்'யென்று ஏனைய உணவுக்கும் சேமிக்கப்படும். மிஞ்சிய அரிசித்துகள்கள் அரைபட்டு 'கோலமிடும்' மாவாகும். எறும்புக்கு உணவாகும். கதிரோ கால்நடைகளுக்கும் இன்ன பிற உயிரினங்களுக்கும் உணவாகும்.

நம் ஆதி'வாசிகள்' நெல் வீணாவதைக்குறைக்க என்று எந்த திட்டமும் இட்டதில்லை கதிரடிக்கையில். ஏனெனில் இந்த உணவு அனைத்துயிருக்குமானது என்ற அவர்களின் தெளிவான புரிதல். வீண் என்ற வார்த்தையையே அறிந்திராத சமூகம் அது;பூமியின் எல்லை வரை பரவி வாழ்வு காத்தது அது.

கானகத்தில் வசிப்பவர் மட்டுமே ஆதிவாசிகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். தரை நிலங்களில் காடு திருத்தி கழனி அமைத்த கூட்டமும், கடலோடி கடலுணவு கொணர்ந்து நில உணவு கிட்டாதபோதும் உயிர்ப்பசி தீர்க்கும் கடலோடிகளும் ஆதிவாசிகள்தான். இவர்களே இவ்வுலகின் ஆதி வாசிகள்.

கத்தியின்றி ரத்தமின்றி வந்த இன்னொரு யுத்தத்தால் இவர்கள் அனைவரும் புலம் பெயர்க்கப்படுகிறார்கள். இந்த யுத்தம் முடிவற்ற யுத்தம்...

புலம் பெயர்தல் என்ற சொல்லையும் நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை, இன்றுவரை.  இந்த சொல்லை நிலையற்ற புவியெல்லைகளுக்குள் அடக்காமல் ஆதிவாசிகளின் இடத்திலிருந்து சிந்தித்தால் மட்டுமே இதன் வலி புரியும்.

Zero waste mantra for profit maximization ('வீணடிப்பதை ஒழித்து ஈட்டுதலைப் பெருக்கும்' மந்திரம்) என்ற முழக்கத்தோடு இம்மூன்று ஆதிவாசி இனங்களையும் அவர்களின் இடத்திலிருந்து பெயர்த்து பொருட்குவிப்பு மையங்களான பெரு நகரங்களை நோக்கி நகர்த்தும் இந்த மந்திர யுத்தம், இறுதியில் வீணென்று விட்டுச்செல்லப்போவதென்னவோ நம் பூமியை மட்டும்தான் என இறுமாந்து செவ்வாயில் உணவு படைக்கும். செவ்வாய் வெறுவாயாகுமுன்பே (when we repeat the same process, result must also be the same each time, right?) நீர்தேடி மீண்டும் தொடரும் நெடும்பயணம். 

எங்கு முடியும் யுகங்களின் ஊடான இந்த நாடோடி வாழ்வு?

எந்தவொரு வீணையும் நலம்கெடும், புழுதியில் விழும், இந்த விரல்கள் பட்டால்.

கோலத்திற்கு வழிகாட்டும் புள்ளிகள் அந்தக்கோலத்துக்குள்ளே சிக்கித்திணறுவதுபோல, நம் கால்படும் பகுதிகள் அனைத்தையும் நம் கோலத்திற்குள் சிறை வைப்போம்.

பெருநகர நுகர்வில் (consumption) மயங்கி, மயக்கத்தின் எல்லையையும், அதற்கான விலையையும் உணர்ந்த ஆதிவாசிகள் விழித்து,  ஒற்றை ஒற்றையாய் தம் தொல்பூமி நோக்கி மற்றொரு நெடும்பயணம் தொடங்கிய முதல் 'புள்ளி', கோலம் உடைத்து மீட்டெடுக்கும் புழுதி வீணையை. 

மீட்டத்தொடங்கும் ஒற்றை விரல் பல விரலாகும். மீட்ட மீட்ட பல்லுயிர் கசியும், வீணையிலிருந்து. இசை கேட்டு மயங்கி பெருங்கூட்டம் மீண்டு வரும், மீண்டும் வரும்!

இதுவும் கூட யுகங்களின் ஊடான பயணத்தின் அங்கமாகலாம் அல்லது இறுதியாகலாம். And we all live happily ever after! 

பயணம் சுகம். அதைவிட முக்கியம் எங்கிருந்து எங்கு என்பது. உணர்ந்து பயணிப்போம். பல்லுயிர் சூழலில் சந்திப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்