முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் விழித்திரையில் - 1 - கோகிலா


இந்து ஆங்கில நாளிதழில் stamp size க்கு ஒரு photo. கருப்பு வெள்ளை. கமல், ஷோபா முகங்கள் மட்டுமே. அந்த கருப்பு வெள்ளையிலும் ஏதோ ஒரு வசியமிருந்தது, ஈர்த்தது...

பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறைதான் நான் அவருடைய படங்களில் முதலில் பார்த்தது. 'கருப்பு வெள்ளைல படம் எடுத்திருக்காரா இந்தாளு?, அதுவும் கமலை வச்சி!', பாக்கணும், உடனே பாக்கணும் என சில ஆண்டுகள் தேடி அலுத்தபின்(பழைய, நல்ல படங்களை நம்ம ஊரில் எந்த கடையிலாவது வாங்கி காட்டுங்க பாக்கலாம்!) YouTube வழி காட்டியது!

டாக்டர் மகள், ஓயாது பயணம் செய்யும் அப்பா, மகளுக்கு துணையாய் அவள் வயதையொத்த வேலைப்பெண், Paying guest ஆக தங்கும் bank manager, அவர் நண்பர் என சொற்ப பாத்திரங்களை வைத்து உணர்வுக்கோட்டை கட்டியுள்ளார். பாலு என்றால் அடல்ட்ரி இல்லாமலா என்று அப்போதே தெரியும்போல. இந்தக்கதையின் knot உம் அதுவே. எப்படி அது அவிழ்கிறது என்பது ஏராளமான சுவாரஸ்யத்துடன், மிக மிக இயல்பான நடிப்புடன் (ஒருவர் மட்டுமல்ல, அனைவருமே!) அற்புதமான ஒளிப்பதிவில் (சத்தியமாய் உணர்வீர்கள், கருப்பு வெள்ளையிலும்) கண்முன்னே விரிகிறது.

ஐம்பது படங்களுக்குமேல், உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர், அந்த ஆண்டில் (1977) மட்டும் பதினாறு படம் செய்ததாக நினைவு, சப்பாணி உட்பட. எப்படி இந்த மாதிரி ஒரு experimental film பண்றதுக்கு ஆர்வமும் எனர்ஜியும் இருந்ததோ தெரியவில்லை...அசுர சாதகம்தான் இன்னும் அவரை இயக்கிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

ஷோபா...! 15 வயதில் இப்பட ஹீரோயின்! நம்பமுடியவில்லை! ரோஜா ரமணியும் மைக் மோகனும் இதர ஆச்சரியங்கள். மோகனின் அறிமுகப்படம், அவர் தாய்மொழியில். 

சலீல் சௌதிரியை எனக்கு தெரியாது, இந்தப்படத்தின் பாடல்களை கேட்கும் வரை! தஞ்சே சங்காலி மைசோகளு என்று ஜானகி பாடுவதை இவர் இசையில் கேட்கும் வாய்ப்பு பெற்றோர் பெரும் பாக்கியம் செய்தவர்கள், கன்னடம் தெரியாதபோதும் :-).

பாலு மகேந்திரா, முதல் கன்னடப்படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் திரைக்கதை விருதுகளை வென்றார் கோகிலாவுக்கு.

'இலங்கைத்தமிழர் பாலு மகேந்திரா இந்தப்படத்தை ஏன் கன்னடத்தில்  செய்தார்?' என்ற நெடுநாள் கேள்விக்கு விடை அளித்தவர்,  இதேபோல இன்னொரு  வித்தைக்கலைஞன். அவர் பற்றியும் அவரும் கன்னடத்தில் செய்த மாயம் பற்றியும் அடுத்த பதிவில்.

என் விழித்திரையில் - முன்னுரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்