முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நழுவும் மொழி - 2 : கடல்


'தமிழ்னா எனக்கு உசுரு. நல்ல books எல்லாம் தேடித்தேடி படிப்பேன். ஆன்லைன்ல கூட கிடைக்குது...But you know, நல்ல தரமான நாவல்லாம் rare. புதுசா எழுதறவங்க சுமாராதான் எழுதுறாங்க...அதுவும் fiction தான் நல்லாருக்கும். Non fiction லாம் chance ஏ இல்ல...'

வணக்கம், உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இந்தப்பதிவு உங்களுக்கே!

கடல் என்பது நம்மில் அநேகருக்கு வியப்பு ஏற்படுத்தும் ஒரு பெரிய பாத்திரம், அவ்வளவே. அலைகளில் பயத்துடன் கால் நனைத்தும், ஈர மணலில் நடை பயின்றும் கிளிஞ்சல்கள் பொறுக்கியும் மகிழ்வோம். கரை திரும்பி கால் மணலைத்தட்டுகையில் 'என்னா பிசுபிசுப்பு. தட்டுனாலும் போமாட்டேங்குது' என்று அலுப்போம்.

சமஸ் என்கிற இளைஞர் நம்மில் ஒருவர்தானென்றாலும் அவர் நம்மைப்போல் அல்ல! 

'நீராலானது உலகு, உலகில் 70 சதம் கடல்' என்ற விபரங்களை நம்மைப்போல் படித்ததும் மறப்பவரல்ல.

30 சத நிலப்பரப்பில் வாழும் நமக்கு எஞ்சிய 70 சத வாழ்வை , அவை சூழும் நிலப்பரப்பை, மனிதர்களை, அவர்களின் வலிகளை, துயரங்களை, மகிழ்ச்சியை (இளையராஜா!) அவர்களுள் ஒருவராய் வாழ்ந்த நாட்களை, சேமித்த முத்துக்களை அற்புத நீள் கட்டுரையாக தொகுக்கப்பட்ட புத்தகத்தின் பெயரும் 'கடல்'! (தி இந்து தமிழ் நாளிதழில் தொடராய் வந்து பின்பு புத்தகமானது, நாளை சரித்திரமாகும்!).

உங்கள் கண்முன்னே கடல் விரியவேண்டுமா? உங்கள் கால்களை நுரைநீர் தழுவிச்செல்லவேண்டுமா? படியுங்கள் இந்தத்தொகுப்பை...முடிக்குமுன் உப்புக்கரிக்கும், உங்கள் உதடுகளில் மட்டுமல்ல, கன்னங்களிலும்.
படித்து முடித்தபின்னும் தொடரும் கடலலைகள் உங்கள் நினைவுகளில். இந்தக்கடலின் பிசுபிசுப்பு உங்களைவிட்டு என்றும் போகாது. 

தமிழக கடல் எல்லையில் ஒரு நெடும்பயணம், தெற்கு எல்லையிலிருந்து வடக்கே. இந்த எல்லைக்குள் எல்லை கட்டி நடக்கும் கொள்ளைகள் பற்றியும், ஆலைக்கழிவுகள் முதல் கதிரியக்க கழிவுகள் வரை கடல்நீரை 'மேம்படுத்துவதையும்',  புறக்கணிப்பட்ட மக்களின் வாழ்வாதார இன்னல்களையும், கடல் எல்லை என்று முட்டாள் அரசியல் வகுத்த எல்லைக்கோடுகளை கடல் விழுங்க, நீரில் ஏது எனதெல்லை உனதெல்லை என்று தடுமாறும் மீனவர்கள் கடற்படையினரால் சுடப்படும் அவலத்தையும், ஆழ்மீன்பிடி இழுவை மடி (trawlers) கடலுக்கு இழைக்கும் இன்னல்களையும் ஆவணப்படுத்தியதால் அரசியலில் தற்காலிக அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த கட்டுரைத்தொடரின் அடி நாதம், மனிதம், மனிதம் மட்டுமே!

இந்த நிலப்பரப்பின் ஒவ்வொரு விளிம்பிலும் நம்மைப்போலவே ஒரு பெரும் சமுதாயம் வாழ்கிறது, வாழப்போராடிக்கொண்டே இருக்கிறது என்பது கடல் உணவு உண்ணும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அவர்களை நிலப்பரப்பிலிருந்தே அழிக்க முனையும் திட்டங்களை யாரேனும் அறிவோமா? ஒரு மணி நேர மின்தடையே வாழ்வின் பெரிய சுமையாக நினைக்கும் நாம் ஒருசில மரத்துண்டுகளை மட்டுமே கயிற்றில் கட்டி அதன்மீதேறி கடல் புகுந்து ஒருவேளை உணவுக்கு அலையும் அந்தப்பெருங்கூட்டத்தை அறிந்துகொள்ள சமஸ் திறந்துவிட்டிருக்கும் மந்திரக்கதவு இப்புத்தகம், உலக இலக்கியத்தரம். ஆங்கில மொழிபெயர்ப்பு வந்தால் மட்டுமே உலக இலக்கிய மரியாதை சாத்தியம். ஆனால் கீழே உள்ள இந்த வரிகளை வேறு எந்த மொழியிலாவது ஜீவன் கெடாமல் பெயர்க்கமுடியுமா?!

'ஆறுன பாட்டன் என் பாட்டன், சீர்பாட்டன்'%
...
'கோலா என்றால், கரையில் உள்ளவர்களுக்கு மீன் கோலா உருண்டை ஞாபகத்துக்கு வரலாம். கொஞ்சம் வயதான கடலோடிகளைச்சந்தித்தால் "அது ஒரு வீர விளையாட்டு அல்லா?" என்று சிரிப்பார்கள். இப்போது போல அந்நாட்களில்  வலைகொண்டு கோலாவைப்பிடிக்க முடியாதாம். ஆழ்கடல் தங்கலுக்கு சென்று கோரிதான் பிடிப்பார்களாம். விரதம் இருந்து, வீட்டிலிருந்து வேப்பங்குழை எடுத்துச்சென்று, கயிற்றில் கட்டி கடலில் மிதக்கவிட்டு, "ஓ வேலா, வா வேலா, வடிவேலா..."  என்று கூப்பிட்டு காத்திருந்தால், ஒரு கோலா மீன் வருமாம். அதைப்பிடித்து, மஞ்சள் தடவி வணங்கி, " ஓ வேலா, வா வேலா, கூப்பிட்டு வா வேலா..." என்று நீரில் விட்டால் அது கூட்டத்தையே கூட்டிவருமாம். கோலா மீன்கள் புயல் வேகத்தில் பறக்கக்கூடியவை...'

கடல்புற மக்களின் கடல்சார்ந்த நம்பிக்கைகள், இடர்வரும்போதெல்லாம் அவர் மனதில் எழும் இறைப்பிளிறல், சடங்குகள் என உணர்ச்சிக்குவியலாய் கட்டுரைகளில் வடித்திட்ட இந்த இளைஞன் இப்போது எங்கே என்ற எனது தேடல் தொடர்கிறது...

உங்கள் ஆர்வத்தை தூண்ட மேலும் சில தகவல்கள்:

இழுவை மடி இரண்டாம் உலகப்போரில் கடலில் விழுந்த குண்டுகளை அரித்து எடுப்பதற்காக உண்டாக்கப்பட்டது இன்று கடலின் அடி மடியையே துடைத்து காலி செய்துகொண்டிருக்கிறது.

பசுமைப்புரட்சி செய்து நிலத்தை பாழடித்த உலக அரசியல் 'நீலப்புரட்சி' செய்து கடலைப்பாழடித்ததின் உப விளைவே கடல் எல்லை துயரச்சூடு சாவுகள். 

கடல், பசியாற்றிய அட்சய பாத்திரமாகத்தான் இருந்தது கடலோடிகளின் கவனிப்பில் இருந்தவரை. பேராசை பெருவணிகம் அதை வளைத்தபின் இன்றுவரை அங்கு நடப்பது எல்லையற்ற பல்லுயிர் வன்முறை மட்டுமே.  

ஒரு இயற்கை வளத்தினைப்பற்றிய நம் கண்ணோட்டம் (காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு எதுவுமே விலக்கல்ல) அறம் சார்ந்ததாக இருந்த வரையில் வாழ்ந்தோம். என்று அறம் நழுவி பெரு வணிக பேராசை சகதியில் விழுந்ததோ அன்றே தொலைந்தோம் நாம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்