முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மால்துஸ் பொறியில் சிக்கிய எலி நாம்!


ஒரு சமுதாயம். 

எல்லோருக்கும் வேண்டிய அளவு உணவு. 

உண்டு பெரு(க்)கும் சமுதாயம் ஒரு கட்டத்தில் பஞ்சத்தை சந்தித்தே தீரும். 

பஞ்சம் போக்க உற்பத்தி பெருக்கம். பசித்த வயிறு, பெருகிய உணவை உண்டு உற்சாகமாகி மறுபடி சந்ததி பெருக்கும். மறுபடி பஞ்சம் வந்தே தீரும்.

(பஞ்சம் வராவிட்டாலும் வியாதி வரும், யுத்தம் வரும். மக்கள் தொகையை குறைக்கும்).

இவையெல்லாம் தாமஸ் ராபர்ட் மால்துஸ் 200 ஆண்டுகளுக்கு முன் சொல்லிச்சென்றது, மால்துஸ் பொறி (Malthus trap) எனப்படுவது, என்றும் நிற்பது. 

அவர் அதோடு நிற்கவில்லை, இன்னும் சொன்னார்:

'உணவுப்பொருளை வெளிநாட்டில் யாருக்கோ விற்று அல்லது யாரிடமோ வாங்கி அதிக பொருளீட்டலாம்  என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு உள்நாட்டு உணவுத்தேவையை உள்நாட்டிலேயே  நிறைவேற்று.  தேவைக்கான உற்பத்தி உள்நாட்டிலேயே நடக்க இசைவாக, இறக்குமதி வரி விதி, எந்த உணவுப்பொருள் வெளியிலிருந்து வந்தாலும்.'

செமிகண்டக்டரில் மூர் விதியை கொண்டாடுவது போல் மால்துஸ் பொறியை கொண்டாட ஆளில்லை. 

நம் புறக்கணிப்பின் காரணம் என்ன தெரியுமா? 

Ignorance.

மூர் விதி, வேலும் மேலும் அடர்த்தியான தொழில் நுட்பங்களை வாரி வழங்கும், இன்னும் பத்தாண்டுகளுக்கு. Desk Top Computers, Notebooks ஆக மாறியதும், Notebooks Smart Phones ஆக மாறியதும் இன்று Smart phones, Smart Watches ஆக மாறியதும் இந்த விதியின்படியே. இந்த விதியின் பலன் நமக்கு மகிழ்வூட்டுகிறது. அதனால் கொண்டாடுகிறோம். பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே!

We, spoilt by the problem of plenty, conveniently forgot that Moore's law will peter out in the near future and that there are still millions starving even today as Malthus postulated 200 years ago. 

மால்துஸ் பொறியோ எக்காலத்திற்கும் நம்மை பயமுறுத்தும் உண்மை. விண்கலமேறி செவ்வாய் சென்றாலும் துரத்திப்பிடிக்கும். 

பயத்தை யாரேனும் கொண்டாடுவார்களா என்ன?!!

மால்துஸை மறந்து மூர் பின்னால் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் நாம், இந்த விதியின் எல்லை இன்னும் சில ஆண்டுகளில் எட்டப்பட்டபின்... புதியதொரு விதி செய்வோம். அதன் பின்னே ஓடுவோம்!

'தனியொருவனுக்கு உணவில்லையெனில் உலகத்தையே அழிப்போம்' என்று சினந்தான்  ஒருவன். நாம் அனைவரும் சேர்ந்து உலகத்தை அழித்துக்கொண்டிருப்பது அந்த பசித்த ஒற்றை வயிறுக்காகவா என்ன?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்