முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அந்தாதுன் - Andhadhun

  கடவுளாக இருந்தாலும்கூட நம் சொல்பேச்சு கேட்கும் கடவுளை மட்டுமே நாம் விரும்புவோம். "நம்ம டிசைன் அப்படி :-) "என்று சொல்லி நகராமல் மேலே படிக்கலாம் வாங்க! வரம் தருகிறேன் என எந்த கடவுளும் வாக்குறுதி தந்ததில்லை. அவர்களை படைத்த நாம்தான் 'இன்னார் கடவுள் இந்த பலன்களை எல்லாம் தருவார், இந்த பாபங்களை எல்லாம் போக்குவார். அவருக்கு இதெல்லாம் ப்ரீதி, இதெல்லாம் ஆகாது' என பல கட்டமைப்புகளை வழித்தடுப்பான்கள் மற்றும் வழிகாட்டிகளாய் நிறுத்தி அவற்றின் ஊடே நம் வேண்டுதல்களை சுமந்து தரிசனம் செய்கிறோம். மன பாரம் குறைந்து, மன அமைதி கூடி, ஆனந்தம் கூடி என ஏதோ ஒரு வகையில் முன்னைக்கு இப்போது மேம்பட்ட உணர்வுகளோடு வெளியேறுகிறோம். சக மனிதர்களிடமும் மனிதரல்லாத உயிரினங்களிடமும் பகிறலாமே என்றால் என்ன சொல்கிறோம் தெரியுமா? 'எல்லோரும் என்னை எடைபோட்டுக்கொண்டே இருக்கிறார்கள்! நிபந்தனையற்ற அன்போ கரிசனமோ ஆறுதலோ இவர்களிடத்தில் கிடைக்காது!' "அது சரி, மனிதர்கள் மட்டும்தானே அப்படி? மற்ற உயிரினங்களிடம்?" என விடாமல் கொக்கி போட்டு கேட்டால், அதற்கும் என்ன சொல்கிறோம் தெரியுமா? 'இந்த அவசரமான உலகில்

மனுஷன்டா!

  மதுக்கோப்பைகளால் கட்டப்பட்ட மாளிகை பார்த்திருக்கிறீர்களா? உச்சியில் ஒற்றைக்கோப்பை. அதன் கீழ் சில. அதன் கீழ் பல. அதன் கீழ் பலப்பல கோப்பைகளை அடுக்கி, உச்ச கோப்பையில் பளபளவென மின்னும் மதுவை ஊற்ற, அது நிரம்பி வழிந்தபின்னும் தொடர்ந்து ஊற்ற, அடுத்தடுத்த வரிசைகளின் கோப்பைகளும் நிரம்பி வழியும். இந்த வரிசையை ஒரு சம தளத்தின் மீது ஆயத்தம் செய்து துளி கூட சிந்தாமல் சிதறாமல் ஆடம்பர தளத்திற்குள் தள்ளிச்சென்று, லாபத்தில் கொழுத்த பெரு வணிக கரங்கள் ஒவ்வொரு கோப்பையாக இலாவகமாக எடுத்து துளிகூட சிந்தாமல் பருகி களிக்கும் நிகழ்வுகள் நித்தம் நடக்கிறது நம் உலகில். இவை பெரும்பாலும் வணிக வெற்றியின், பெரு லாபத்தின் கொண்டாட்டமாகவே இருக்கும். இந்த மதுக்கோப்பை மாளிகை, சம தளத்தின் மீது இல்லாமல் இரு வேறு திசைகளில் ஒன்றின் மீது ஒன்று உரசிக்கொண்டே நகர்ந்துகொண்டிருக்கும் இரு தட்டுகளின் மீது இருந்தால்? இமயம் நிற்பது இரு பெருந்தகடுகளின் மேலே. இந்த பூமித்தகடுகளின் உரசலில் பிறந்த இமயம்தான் நம் உலகின் மிக இளமையான மலைத்தொடராம். மலைப்பனி உருகி உருகி உயிர் நனைக்கும் நீராகி ஆறாகி பள்ளத்தாக்குகள் சமவெளிகள் இறங்கி ஓடி கடல் மடி தே

அன்பென்ற சோதியில் அகிலங்கள் நனையுமா?

  அர்த்த சாஸ்திரம் நாலு வேதம் உபநிடதம் கடோபநிடதம் மகா வாக்யம் இதிகாச புராணம் தொல்லியல் காப்பியங்கள் எல்லாம் கற்ற மனுஷ்ய சரித்ரம், இவையனைத்தும் போதித்த அன்பென்ற அளவீட்டில் பரம தரித்ரம்! சாத்திரங்கள் சாத்தியங்கள் பயின்ற அளவிற்கு அன்பு செய்வதை பயில மறந்து, சாத்திரம் தந்தோரின் பழைய சுவடு எதிரில் நீள்வதை கண்டும் புறம்தள்ளி, வழியற்ற திசையில் பாராயணம் செய்துகொண்டே வெகுவேக பயணம்... Liquor drinking is injurious to health ஆனால் விற்போம் Food IS Medicine ஆனால் நஞ்சிடுவோம் சுழன்றும் ஏர்ப்பின்னது நீதி கேட்டால் நெடுஞ்சாலையில் முள்பதிப்போம் அவர்கேட்கும் நீதிக்கு வண்ணமடிப்போம் நோகடிப்போம் ஒருவர் மிதிக்க ஒருவர் இறக்க போராடி நகர்வோம் பலர் மிதிக்க ஒருத்தி இறக்க போராடாமலே நகர்வோம்... சாத்திரங்கள் சாத்தியங்கள் பயின்ற அளவிற்கு அன்பு செய்வதை பயில மறந்து, சாத்திரம் தந்தோரின் பழைய சுவடு எதிரில் நீள்வதை கண்டும் புறம்தள்ளி, வழியற்ற திசையில் பாராயணம் செய்துகொண்டே வெகுவேக பயணம்... அக்கப்பக்கம் பாரடா சின்ன ராசா... அக்கம்பக்கம் பாரடி சின்ன ராணி!

புள்ளிகளுக்குள் சிக்கிக்கொண்ட கோலங்கள்

  கடற்கரையோர டவுன் ஒன்றில் பத்தாம்ப்பு படிக்கையிலே ட்யூஷன் ஆசை தொற்றிக்கொள்ள, 'ஒனக்கெதுக்குடா!!!... சரி, இப்படியாவது நேரம் ஒதுக்கி படிக்கிற பழக்கம் வரட்டும்...' என அப்பா பெரிய மனதுடன் அனுமதிக்க, தொடங்கியது எனது மாலை நேர ஒதுக்கல்கள். 'கற்பூரம்... நீயெல்லாம் எதுக்குடா வர்ற?!' என இரண்டாம் நாளிலேயே கிருஷ்ணா மாஸ்டர் கண்டுபிடிக்க, சென்டரில் வெயிட் கூடிப்போச்சி. ஏராளமாய் கேள்வித்தாள்கள், குறிப்பாய் கணக்கு! அவ்வளவு குஷியாயிருக்கும் மார்க் வருகையில். இந்தப்பதிவு கற்பூரம் பற்றியதல்ல, கிருஷ்ணா மாஸ்டர் பற்றியது! நல்ல சிவப்பு, வெட வெட உடல், உயரம், வசீகர சிரிப்பு, சுருட்டை முடி, அழியாத கோலங்கள் ப்ரதாப் போத்தன் போல ஸ்டைலாய் சிகரெட்டு, முழங்கை வரை சுருட்டிய முழுக்கை சட்டை சகிதமாய் எப்பொழுதும் மந்தகாசம். "ஆசீர்வதிக்கப்பட்ட மனுசன்டா! எப்பப்பாரு அப்படி ஒரு சிரிப்பு!' என ஏரியா இளவட்டங்கள் பொறாமையில் வேகும். கருணாகரன் என்று ஒரு வகுப்புத்தோழன், படிப்பில் என்னோடு போட்டி, ஆனால் பாடத்தொடங்கினால் நானும் சொக்கி கேட்பேன், அப்படி குரல் வளம். கிருஷ்ணா மாஸ்டர் க்ளாசில் தொய்வு ஏற்பட்டதாக நினை

என்ன செய்யப்போகிறோம்?!

  அரூபமாய் காற்றில் அலையும் கனவுகளின் வேர்கள் பெரும்பாலும் நம் எண்ணத்தில் உதித்தவைதான். டெஸ்லா என்றொரு விஞ்ஞானி, காற்றிலேயே மின்சாரத்தை கம்பிகளின்றி அனுப்ப கனவு கண்டார். அன்று உலகம் நகைத்தது. இன்று கேபிள் இல்லாமலே சாம்சங் மொபைல் சார்ஜ் ஆகிறது! கனவு என்பதற்கு இலக்கண இலக்கியம் கிடையாது. கொம்பு வைத்த குதிரையாகவும் இருக்கலாம், சக்கரங்களற்ற கப்பலாகவும் இருக்கலாம். லாஜிக் இருப்பது அவசியமில்லை. நம் குழந்தைகளுக்கு இன்றைய கல்விக்கூடங்களில் கனவு காண யாரும் கற்றுத்தருவதில்லை. பாடங்கள் பிடிக்காமல் மாணவர்கள் கண்ணயர்ந்தால் கனவிலும் யாராவது பாடம் நடத்துவதாகவோ அல்லது தேர்வில் ஃபெயிலாவது போலவோ தோன்றி திடுக்கிட்டு கண் விழிக்கும் மாணவர்கள்தான் அதிகம் இன்று. டேனியல் க்வின் என்கிற ஆசிரியர், நம் புதிய உலகின் கல்விக்கூடங்களை சிறைச்சாலைகள் என்கிறார். கனவு காண விடாமல், கனவிலும் நிகழாத அற்புதங்கள் நம் கண் முன்னே நம்மைச்சுற்றியுள்ள வெளியில் ஒவ்வொரு நொடியிலும் நிகழ்வதைக்கூட உணர விடாமல் அடைத்து வைத்து, காற்றில் புரளும் இலையில் ஒருங்கிணைந்து அரங்கேறும் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணித நிகழ்வுகளை செயற்கையாய் தனி

கோல வாசல்

  நேற்று இட்ட மாக்கோலம் நேற்றோடு போகாது இன்று காலைக்காய் காத்திருக்கும் காற்று மழை எறும்புதாண்டியும். இன்று காலை புலருமுன் சொம்பு நீரை சிதறவிட்டு வாருகோலினால் வருடித்தள்ளி இன்று எந்த கோலத்தை எத்தனை புள்ளியில் சிறைவைக்கலாம் என சிந்தனை செய்கையில் கண்முன்னே காத்துக்கிடந்தது  கலைந்த கோலம், நான் கலைத்த கோலம். நொடியில் துயருற்று வாருகோலை கையிலெடுத்து கவனமாய் தேடியும் கிடைக்கவில்லை கலைந்த கோலம். பொடிப்பொடியாய் ஈர்க்குச்சிக்கு ஆடையாகி சொம்பு நீரின் எஞ்சிய துளிகளை தன் கடைநுனியில் கோர்த்து... ஒவ்வொரு துளியிலும் நேற்றைய கோலம். கோலம் தொட்டுத்துடைத்த வாருகோலிலும் தொங்கிநிற்கும் கோலம், தரையில் இழையவிட்ட விரல்களிலும் இயக்கிய சிந்தையிலும் மகிழ்ந்த மனதிலும் வழிந்துகொண்டுதானே இருக்கும் இந்த சிந்தனை நொடியிலும்... இனியென்ன கோலமிட? இன்றைய கோலம் இதுவாகவே இருக்கட்டும். வரும் நாட்களிலும் இதுவே. எறும்பு தின்னுமோ மழை பேய்ந்தழிக்குமோ காற்று துடைக்குமோ நானறியேன். அப்படியொரு நிகழ்வின் பின் வெற்றிடமாகிப்போகும் வாசல்போல என் விரலிடுக்கும் கோலமாவின் பிசுபிசுப்பு காய்ந்து உலர்ந்து உதிர்ந்துபோனபின்பு சிந்திக்கலாம் அன்றை

பெரிதினும் பெரிது கேள்!

  சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;  சவுரி யங்கள் பலபல செய்வராம்;  மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;  மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;  காத்து மானிடர் செய்கை யனைத்தையும்  கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;  ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;  அதாவது.மானம். பிழைத்திருந்தால். பாரதி கண்ட புதுமைப்பெண் - அவர் கனவு கண்ட பாரதத்தில் மட்டுமே... பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என தரிசு நிலங்களையும் கோயில் போன்று போற்றப்படும் இடங்களாக மாற்றவேண்டும் என அவன் எழுதிச்சென்றதை, 'பள்ளிகளை கோயிலாக்குவோம்' என தவறான புரிதலோடு வாழும் நம் நாட்டில் பெண் தெய்வங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து வன்முறையின் இலக்குகளாக மாறிப்போயினர்? கல்விக்கூடங்களில், தரிசு நிலங்களில், இறை கூடங்களில், சொந்த வீட்டில், நம்பி நுழையும் வீட்டிலும்... இந்த கண்ணம்மாக்களின் ஆன்மாக்கள் சிதைந்து அலைய சபித்தது எந்நக்கடவுளாக இருந்தாலும் அவர் நற்கடவுள் அல்ல, நம் கடவுளும் ஆகார். இந்தக்கொடுங்குற்றம் செய்தவர்க்கு மதச்சாயங்கள் பூசி வன்மம் வளர்ப்பதை உடனடியாக நிறுத்தி, Ministry of Crimes Against Women and Children என்கிற ஒரு அமைச்சகத்தை நிற