முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரிதினும் பெரிது கேள்!

 


சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்; 

சவுரி யங்கள் பலபல செய்வராம்; 

மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்; 

மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்; 

காத்து மானிடர் செய்கை யனைத்தையும் 

கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்; 

ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்; 


அதாவது.மானம். பிழைத்திருந்தால்.


பாரதி கண்ட புதுமைப்பெண் - அவர் கனவு கண்ட பாரதத்தில் மட்டுமே...


பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என தரிசு நிலங்களையும் கோயில் போன்று போற்றப்படும் இடங்களாக மாற்றவேண்டும் என அவன் எழுதிச்சென்றதை, 'பள்ளிகளை கோயிலாக்குவோம்' என தவறான புரிதலோடு வாழும் நம் நாட்டில் பெண் தெய்வங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து வன்முறையின் இலக்குகளாக மாறிப்போயினர்?


கல்விக்கூடங்களில், தரிசு நிலங்களில், இறை கூடங்களில், சொந்த வீட்டில், நம்பி நுழையும் வீட்டிலும்... இந்த கண்ணம்மாக்களின் ஆன்மாக்கள் சிதைந்து அலைய சபித்தது எந்நக்கடவுளாக இருந்தாலும் அவர் நற்கடவுள் அல்ல, நம் கடவுளும் ஆகார்.


இந்தக்கொடுங்குற்றம் செய்தவர்க்கு மதச்சாயங்கள் பூசி வன்மம் வளர்ப்பதை உடனடியாக நிறுத்தி, Ministry of Crimes Against Women and Children என்கிற ஒரு அமைச்சகத்தை நிறுவி, காத்து, தண்டித்து... ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை என, 'சாதி மத விருப்பு வெறுப்பு இன்றி அகில உலக பெண்களும் தன்மானத்தோடு வாழும் ஒரே நாடு நம் பாரதம்' என்கிற மாற்றத்தை வேண்டுவதும் "பெரிதினும் பெரிதுகேள்" வகை கனவுதான். 


இக்கனவு மெய்ப்பட நாம் அனைவரும் கண் திறந்தால்தான் வாய்ப்புகளும் கண்திறக்கும்...


(Image from kuvikam.com, may be under copyright)

கருத்துகள்

  1. இப்போதுள்ள சூழலில் கட்சியின் ' பெரிய வாய் ' க்காரன் சொல்வதை மற்றவர்கள் அனைவரும் தொடர்ந்து சொல்வதே அரசியல் தொழிலாயிற்று. இதில் ஒரு அமைச்சகத்தையும் புதிதாக சேர்த்தால் ஒத்து உதவுவதற்கு அவ்வமைச்சகத்தில் இருக்கும் செயலர்கள் கூடுதல் ஆட்களாக கிடைப்பதை மட்டுமே இது உறுதி செய்யும். சீரழிந்த சமுதாயத்திலிருந்து இக்கேட்டை சீரழிக்க ஒரு தழல் வெடித்து விழும் நிச்சயமாய்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...