ஒரு பாடலை ஒரு பாடகன் பாடுகிறான். பாடும்போதே உடைந்து அழுகிறான். பாடலை கேட்பவர்களின் கண்களிலும் நீர்த்துளி கோர்த்துக்கொள்கிறது. முதல் முறை பாடும்போது மட்டுமல்ல, ஐநூறாவது முறை பாடும்போதும்! முதல்முறை கேட்கும்போது மட்டுமல்ல, ஐநூறாவது முறை கேட்கையிலும்! பாடல் என்னவோ வழக்கமான காதல் பாடல்கள் போலதான். தனது கலையை விரும்பிய பெண்ணை இவன் விரும்ப, கலைக்கு சொந்தக்காரன் இவனது சகோதரன் என்று தவறாய் கற்பிதம் செய்துகொண்ட அந்தப்பெண் இவனை உதாசீனம் செய்து இவனது சகோதரனை விரும்ப, ஒரு இயலாமை நேரத்தில் உடைந்துபோய் இந்தக்கலைஞன் பாடும் பாடல் இது. S.P.B என்கிற மகத்தான பாடகன் இந்தப்பாடலில் தன் உயிரை உருக்கி ஊற்றி... என்ன குழைவு, என்ன இயலாமை, என்ன தளும்பல், என்ன குமுறல்... " காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிகொண்டாய் நான் குலுங்கி குலுங்கி அழுதேன் இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனிமூட்டமா நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா " அடுத்தமுறை இந்த வரிகளை இந்தக்கலைஞன் பாடுவதை நீங்கள் கேளுங்கள், கண்களை மூடி, உறக்கம் வரும் புதிய இரவின் முந்தைய நொடிகளில்... அதனோடு பி
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!