முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிம் ஜோங்கின் சுத்தியல்

நம் ஈரல்குலையை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த மகாமாரியும் 'கடந்து போகும்'.

"சூப்பர்! சீக்கிரமே நார்மல்சி திரும்பிடும்!" என்றுதான் நாம் அனைவரும் மகிழ்வோம்.

நான் அந்த மாதிரி ஒரு கொடுமையான வாழ்வியலுக்கு நாம் திரும்பவே வேண்டாம் என்று இறைஞ்சுகிறேன்!

நார்மல் வாழ்க்கை இதுவரை என்ன சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறதென்று பார்ப்போம்:

- இயற்கை வளங்களை கண்மூடித்தனமாய் கொள்ளையடித்தது

- வசதி இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் இடையில் ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியது

- பூமியின் துரையீரலில் (காடுகள்) கோடானுகோடி ஓட்டைகள் இட்டது, தலைக்கவசமாய் நமை காக்கும் ஓசோன் படலத்தை கிழித்தது, காற்று மாசு மூலம் நம் நுரையீரல்களையும் பதம் பார்த்தது

- மனிதர்களுக்கிடையில் தீரா வெறுப்பை விதைத்தது

- கானக வாழ் மக்களை ரேஷன் கடைகள் முன் வரிசையில் நிற்கவைத்து அரிசி, பருப்புக்காக கையேந்தவைத்தது

- இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த நார்மல், மறுபடி வேண்டவே வேண்டாம்.

புதியதொரு விதி செய்வோம்... என ஒரு புதிய நார்மல்சியை நாம் சிந்திக்கவேண்டியிருக்கிறது...உருவாக்கவேண்டியிருக்கிறது இப்போது, அவசரமாய், அவசியமாய்.

இத்தனை நாளாய் நம் காதுகளை குடைந்துவரும் மகாமாரியின் ஓலங்களை விடுத்து, நம்மை சுற்றி இயற்கை நடத்திவரும் அற்புத மாற்றங்களுக்கு நாம் ட்யூன் ஆக வேண்டிய நேரம் இது.

நமக்கும் இயற்கைக்குமான உறவை மறுபரிசீலனை செய்து, மேம்படுத்தி, புதுப்பிக்கவேண்டிய நேரம் இது.

இந்த மகாமாரியின் அலை ஓய்ந்துபோகும். அதன் பின் வரும் நாட்களில் நன்றியுடன் இருப்போம், பணிவுடன் இருப்போம், உயிர்ப்புடன் இருப்போம் (be alive in the truest sense).

இந்த உலகு இந்த நொடியில் எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறது தெரியுமா?! 

World around us is alive and kicking right at this very moment!
----------

"எல்லாமே இயற்கைதானா? அப்ப டெக்னாலஜினால நமக்கு பயனே இல்லையா என்ன?!

டெக்னாலஜி எப்டி நம்ப வேர்ல்ட பெட்டராக்கிருக்குதுன்னு நீங்க அவசியம் எழுதணும்"

னு ஒரு நண்பர் கேட்டதால் இதோ இந்த வால் பதிவு (tail piece:-)

-----
ரொம்ப சிம்ப்பிள்ங்க. 

லிவ் அன்ட் லெட் லிவ் பாலிசிபடி செயல்படுகிற தொழில்நுட்பங்கள் உலகை காக்கும். 

மனுசப்பயலுகள் நாம அதை ட்விஸ்ட்டு ட்விஸ்ட்டுன்னு ட்விஸ்ட்டு பண்றமே!

டெக்னாலஜி, உலக செய்திகளை உடனுக்குடன் நம் உள்ளங்கைகளில் சேர்க்க உதவியது.

அதேதான் 

"கிம் ஜோங்கு வெள்ள குருதைல கெளம்பிட்டாரு, எத்தன ராக்கெட்டு பறக்கப்போகுதோ!"

"ஐயோ, அங்க கொரோனா, இங்க கொரோனா"

'ஐயா! கிம் ஜோங்குக்கு கொரோனா, வோர்ல்டு ஹாப்பி அண்ணாச்சி'

இப்போ, 'கிம் ஜோங் ட்ரெயின் ஒரு ரெசார்ட்ல பார்க் ஆயிருக்குலே! அவரு அங்க ரஸ்க்கு சாப்ட்டுட்டுருக்கார்லே! பயபுள்ள சாகலல்லே!' என கொட்டுகிறது. 

அதைவிட கொடும பாஸ், அப்பப்போ 'சற்று முன் மூன்று ஏலியன் குட்டிகள் வாணியம்பாடியில்(!) கண்டுபிடிக்கப்பட்டன!' னு WHATSAPP ல... ராத்திரியெல்லாம் பயத்துல தூங்கவுடாம...

A tool is just that, it can enable / kill, சுத்தியல் மாதிரி, அருவா மாதிரி!

தொழில்நுட்பத்தில தப்பே இல்ல, அத புடிச்சிருக்கிற கைலதான் பாஸ் அம்புட்டும்!
----+++-----

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்