முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னது?! "அவரு" மறுபடி கட்சி மாறிட்டாரா?! ஐயையோ!!!!!


செய்திகளை செய்திகளாக மட்டுமே பார்த்த கடைசி தலைமுறை 2010 க்கு முன் செய்திகள் வாசிக்கத்தொடங்கிய தலைமுறைகள் மட்டுமே.

டேட்டா கேபிளை இடுப்புல அரணாகயிறு மாதிரி சுத்திகிட்டா 'ஒன் அவர்ல மார்சுக்கு போய்டலாம் ப்ரோ' என்கிற ரேஞ்சில் வெகு வேகமாய் வளரும் தொழில்நுட்பம், டிஜிடல் வணிகம், அவை சார்ந்த அரசியல் கட்சிகள், அவை சார்ந்த ஊடகங்கள் என... செய்திகள் அனுதினமும் 'வைத்து செய்யப்படுகின்றன'.

'அந்த ஊடகம் இந்த பிசினஸ்மேனோடது. இவரு அந்த கட்சிப்பா' என்று தொடங்கி, 

"அந்த ஆர்ட்டிகிள் பத்தியா சொல்ற? எழுதினது யாருன்னு பாரப்பா! அவரு 'அந்த கட்சி' ஆளப்பா" என வளர்ந்து

'அந்த செய்திய நம்பாதே. அந்தாளுக்கு வேல வெட்டியில்ல. வேணும்னே தப்பு தப்பா எளுதுவான் ஆன்ட்டி நேஷனல் ஃபெல்லோ!' என ரவுண்டு கட்டி...

ஒரு ஊடகத்துல 'நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுது' ன்னு தலைப்பு செய்தி. இன்னொரு ஊடகத்த பாத்தா, "நாட்டிலே ஓடிக்கொண்டிருந்த பாலாறை காணவில்லை!' என மிரட்டும்...

போதாததற்கு சமூக கொலைதளங்களில் (மெரளாதீங்க, சோஷியல் மீடியால ரத்தம் தெரிக்க தெரிக்க எத்தன சண்ட, வெட்டு குத்து, பஞ்சாயத்து தெரியுமா?!) கிளம்பும் புரளிப்புயலில் மூச்சு முட்டி திக்குமுக்காடி, கொஞ்ஞ்சம் இளைப்பாறலாமெண்டு பொழுதுபோக்கு செய்திகள் தரும் ஊடகங்களுக்குள் நுழைந்தால்... 'இந்த இளந்தாரி நடிகை, வாய்ப்பு கிடைக்க என்ன காரியம் செய்திருக்கிறார் பாருங்கோள்!!!' என கூவிக்கூவி பொரணி பேசும் ரேஞ்சில் பதிவுகள்!

பெருஞ்செய்தி முதல் கீச்சு செய்தி வரை (twitter) இதே!

கடந்த இரு வருடங்களில் பல கட்சிகள் சார்ந்த நண்பர்கள் யாராவது  ஒரு fake news ஐ உண்மை என்று நம்பி, அல்லது தன் கட்சியை உயர்த்திய பொய்ச்செய்தியை ஆர்வமாய் பரப்பி, எதிர் கட்சி செய்தி எதுவாயிருந்தாலும் அது பொய்யென மல்லுக்கட்டி, நாட்டின் அவலங்களுக்கெல்லாம் எதிர்க்கட்சிதான் காரணம் என மாறி மாறி வசைபாடும்போதெல்லாம்... நான் என் பங்கிற்கு, 'செய்தியில் உண்மை இருக்கிற மாதிரி தெரியலப்பா / ஏன் இப்படி பொய் சொல்றீங்கப்பா? எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' ன்னு " அவரு" சொல்லியிருக்காருப்பா' என்று முடிக்கும்முன், 'அந்தாளப்பத்தி பேசாதடா, அவரு எதிர்க்கட்சி ஆளு'!!!!!!

ஐயையோ! கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த குடிகள் பலவும் அப்பயே கட்சி பிரிச்சி கட்சி கட்டி வாழ்ந்த மாதிரி என்னை இவங்க feel பண்ணவைச்சத கூட பொறுத்துக்கலாம், அந்த தாடிக்காரருக்கும் கட்சிக்கொடிய மாத்தி மாத்தி குத்துறாங்களே, ஐயையோ!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்