முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலே என் காதலே...

ஒரு பாடலை ஒரு பாடகன் பாடுகிறான். பாடும்போதே உடைந்து அழுகிறான். பாடலை கேட்பவர்களின் கண்களிலும் நீர்த்துளி கோர்த்துக்கொள்கிறது.

முதல் முறை பாடும்போது மட்டுமல்ல, ஐநூறாவது முறை பாடும்போதும்!

முதல்முறை கேட்கும்போது மட்டுமல்ல, ஐநூறாவது முறை கேட்கையிலும்!

பாடல் என்னவோ வழக்கமான காதல் பாடல்கள் போலதான். 

தனது கலையை விரும்பிய பெண்ணை இவன் விரும்ப, கலைக்கு சொந்தக்காரன் இவனது சகோதரன் என்று தவறாய் கற்பிதம் செய்துகொண்ட அந்தப்பெண் இவனை உதாசீனம் செய்து இவனது சகோதரனை விரும்ப, ஒரு இயலாமை நேரத்தில் உடைந்துபோய் இந்தக்கலைஞன் பாடும் பாடல் இது.

S.P.B என்கிற மகத்தான பாடகன் இந்தப்பாடலில் தன் உயிரை உருக்கி ஊற்றி...

என்ன குழைவு, என்ன இயலாமை, என்ன தளும்பல், என்ன குமுறல்...

"
காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிகொண்டாய் நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனிமூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா
"

அடுத்தமுறை இந்த வரிகளை இந்தக்கலைஞன் பாடுவதை நீங்கள் கேளுங்கள், கண்களை மூடி, உறக்கம் வரும் புதிய இரவின் முந்தைய நொடிகளில்...

அதனோடு பின்னிசையாய் சாக்சஃபோனிலிருந்து கசியும் இசையையும் உள்வாங்கிக்கொண்டே...

உங்கள் உள்ளம் உருகி உள்ளே ஏதோ உடைந்து ஓடும், உங்கள் நுரையீரலில் மட்டுமல்ல ஆன்மாவிலும் காதல் அடைபட்டு திக்குமுக்காடும், உங்களையும் திக்குமுக்காட்டும். மூடிய கண்ணோரங்களில் ஈரநதி ஒன்று மெல்ல கீழிறங்கும்.

அதன்பின்னான நொடிகளில் அற்புத உறக்கம் ஒன்று உங்களை தழுவிக்கொள்வதும் கொள்ளாததும் உங்கள் வாழ்வின் அனுபவங்களை பொறுத்தது...

-----++----

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா உனை அமுதவிஷமென்பதா

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிகொண்டாய் நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனிமூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா  

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு....................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...