எந்த பின்புலமும் எந்தத்துறையிலும் இல்லாமல், ஒரு மனிதன், ஒரு தமிழன், தன் வாழ்நாளில் தொடக்கூடிய உச்சத்துக்கு இவரை கண்டிப்பாய் எடுத்துக்காட்டாக கூற முடியாது. ஏனெனில் இவர் உச்சத்தை தாண்டியவர். தனிப்பிறவி. பல துறைகளில் இவர் தொட்ட உயரங்களே வரும் தலைமுறைக்கு புதிய உச்சங்கள்! அவர் பயணம் செய்த குதிரை ஒவ்வொன்றும் ராட்சத உழைப்பை தீனியாக கேட்கும், அசந்தால் ஆளை விழுங்கி ஏப்பம் விடும்; ஆனால் இவர் அவை அனைத்தையும் தன் சுண்டி இழுக்கும் திறமையால் அடக்கி ஆண்டவர். திரை (கதை, திரைக்கதை, வசனம், நாயகர்கள்), பத்திரிகை, அரசியல், இலக்கியம் என இவர் தன் வாழ்வை செதுக்கியபோது உதிர்ந்த துகள்களும் புகழ் பெற்றன. கலைஞர் எனும் இயந்திரத்தின் சக்தியில் புகழ் வெளிச்சத்தின் இரு கண்களாய் சிவாஜியும், எம் ஜி ஆரும். தமிழகத்தின் தங்க தருணம், அரை நூற்றாண்டு,1950-2000 இந்த மும்மூர்த்திகளால் நகர்த்தப்பட்டது. இவர் தோளோடு தோளுரசிய புகழ் மனிதர்கள் ஏராளம், உலக அரங்கிலும்தான். இவரோடு மடிந்தது திராவிட ஜோதியின் பெருவிளக்கு. இதனின்று சிதறிய கங்குகள் சில காலம் கனன்று மறையலாம்; அதில் ஒன்று கூட ஒரு நூற்றாண்டு ஜோதி தராது... ஒரு
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!