முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுழலி!


#onemoresong

ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள். பின்புலமும் ஓரளவு தெரியும்.

ஊர்ப்பெரிய மனிதர் மனதில், உருவத்தில்... மிகப்பெரியவர். வாழ்க்கைத்துணை துயராக மாற மனதில் வைத்துப் வெளியில் கண்ணியம் காப்பவர்.

பஞ்சம் பிழைக்க அந்த ஊரில் ஒதுங்கிய பரிசல்காரி, துடுப்பு போட்டு ஊர் திரும்புகையில் கரையருகில் பாடல் ஒன்று கேட்கிறது. சின்ன வயதுக்காரி.

பாறையை நீர் அறுப்பது போன்ற மென்சோகத்துடன் பெரியவர் தன் வாழ்வைப்பற்றி 'எசப்பாட்டு' பாடிக்கொண்டே நடக்க, பாடல் வரிகளின் சோகம், பாடுபவரின் மேன்மை அறிந்த பரிசல்காரி, ஆறுதலாய் பதில் பாட்டு பாடத்தொடங்குகிறாள்.

பாடுவது யார் என அறியும் ஆவலில் பாடலை நிறுத்தாது தேடிக்கொண்டே பெரியவர் நடக்க, பரிசலில் பதில் பாட்டு ஊர்க்கரை நோக்கி நகர, 'பூங்குயில் யாரது?' என முகமறியும் ஆவலில் பெரியவரும் பாடல் வரியோடு பரிசல் கரை நோக்கி நகர, 'கொஞ்சம் பாருங்க, பெண்குயில் நானுங்க' என பதில் அவர் காதில் விழ, அவர் கண்ணில், பாடும் அவள் பட...

இன்னதென்று சொல்ல இயலாத உணர்வுக்குவியலில் 'அடி நீதானா அந்தக்குயில்! தானாக வந்த குயில்! பறந்த்தே, உலகமே மறந்ததே' என அவர் நெக்குருகி நிற்க, மயிலிறகு இசையால் வைர வரிகள் ராஜ பவனி வர, கண்ணனின் கேமரா வழி பாரதி ராஜா செல்லுலாய்டில் கவிதை செதுக்க, பார்த்தவர் கேட்டவர் எல்லாம் மையலாகி மயங்க...
#onemoresong

பூங்காற்று திரும்புமா? 
என் பாட்ட விரும்புமா? 
பாராட்ட‌ மடியில் வெச்சுத் தாலாட்ட 
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா? 

(பூங்காற்று திரும்புமா...) 

ராசாவே வருத்தமா? 
ஆகாயம் சுருங்குமா? 
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே 
அடுக்குமா சூரியன் கருக்குமா? 

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல 
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல 

இந்த வேதன யாருக்குத்தான் இல்ல 
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல 

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி 
சொல்லாத சோகத்த சொன்னேனடி 

சொக ராக சோகந்தானே 

யாரது போறது? 

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா 

(பூங்காற்று திரும்புமா...) 

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் 
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் 

உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும் 
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும் 

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே 
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே 

எசப் பாட்டு படிச்சேன் நானே 

பூங்குயில் யாரது? 

கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க 

அடி நீதானா அந்தக் குயில்? 
யார் வீட்டு சொந்தக் குயில்? 
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி 
பறந்ததே ஒலகமே மறந்ததே 

நாந்தானே அந்தக் குயில் 
தானாக வந்தக் குயில் 
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி 
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா?

(குயில் மட்டும் வேறு யாராவதொரு அட்டுக்கிழவியாக இருந்திருந்தால், பெரியவரின் சோகம் மறுநாளில் கூடியிருக்கும் :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்