முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அற்புதங்கள்!


Miracles / அற்புதங்கள், நம்மைச்சுற்றி கூடை கூடையாய் கொட்டிக்கிடக்குது காணும் இடமெல்லாம்...

ஊசித்தும்பியின் 'ஊசி' உடம்புக்குள் இதயம், வயிறு, மூளை எல்லாம் யார் வைத்தது? இதைவிட பெரிய அற்புதம் யார் செய்வார்?!

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கையில், ஒரு சிறு குருவியையாவது காற்று தள்ளி வீழ்த்துவதை பார்த்திருப்போமா?!

காற்றுக்கு மரங்கள் சாயலாம்; பறக்கும் இனம் போல அவற்றிற்கு இறகுகள் இல்லையே...

சற்றுமுன் என் கண்ணெதிரே ஒரு மஞ்சள் வண்ணப்பூச்சி... ஆளைத்தள்ளும் காற்றில் 'அலையேறுதல்' (wind surfing) போல சரசரவென காற்றில் ஏறி, எதிர்த்திசையில் பறந்தது கண்டேன். அத்தனை சிறிய உடலுக்குள் இந்த வலு!

எளிது போல தோன்றும் அதன் பறத்தலின் பின்னிருந்து இயக்குவது எது?

ஆன்ம பலம் சிற்றுயிரையும் பேருயிராக்கும் அற்புதம் நம்மைச்சுற்றி நொடிதோறும்... நமக்குதான் காண / உணர நேரமின்றி 'அற்புத வாழ்வு வேண்டி' வேறெதையெல்லாமோ தேடி ஓடிக்கொண்டேயிழுக்கிறோம்... (நாம் இழுத்துக்கொண்டோடும் மயிலிறகு எடை ஆசைகள் கூட பீலி பெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம்தானே!).

நகத்தளவு வண்டு, விரைந்து நகர இயலாத சிற்றுயிர், Selfie சூழ் உலகில் கேமராவை கண்டாலே "நான்கு நொடிக்குள்" மறைய ஓடும் முயற்சியில் இல்லாத கவிதையையா மனிதர்கள் நாம் எழுதப்போகிறோம்?!





கருத்துகள்

  1. விந்தைகள் ஆயிரம் உண்டிங்கு. நமக்குத்தான் அதனை உணர்ந்து குழந்தைகளுடன் ஒரு குழந்தையாகி வியந்து நிற்க நேரமில்லை. நாலாறு மாதமாய் குயவனை வேண்டி காெண்டுவந்த தாேண்டியில் உள்ள சூக்குமத்தை உணராது வீணே பாேட்டுடைக்கின்றாேம். உணவைக் காெரிப்பதால் பல் தேயும் எலிக்கு பல் வளர்ந்துகாெண்டே இருக்கும்பாேது அத்தகைய தேவையில்லாததால் நம் பல் ஒரு பருவத்திற்கு பின் வளர்வதில்லையே! உடல், அங்கங்கள்-விரல் மற்றும் நகம் உள்பட-'பருவம்' அடைந்தபின் வளர்வதில்லையே! கால் மற்றும் கை, கண் மற்றும் காது, டெலாேமர் மற்றும் டெலாேமரேஸ்,பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகள்
    ஏன் இவ்வாறு அமைந்தன? தலை மற்றும் உடம்பின் உள்ளே உள்ளவற்றை இப்பாேதுள்ளவாறு அமைத்து,அடைத்ததெப்படி? வியந்து, மயங்க இது பாேதுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதான்... வெளில ஆரம்பிச்சிருக்கேன். எண்ணம் உள்ளேயும் ஓடும் :-)

      நீக்கு
    2. சூப்பர் comment!!அருமையான பதிவு&pictures!!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்