முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுயம்பு -500!


எந்த பின்புலமும் எந்தத்துறையிலும் இல்லாமல், ஒரு மனிதன், ஒரு தமிழன், தன் வாழ்நாளில் தொடக்கூடிய உச்சத்துக்கு இவரை கண்டிப்பாய் எடுத்துக்காட்டாக கூற முடியாது. ஏனெனில் இவர் உச்சத்தை தாண்டியவர். தனிப்பிறவி. பல துறைகளில் இவர் தொட்ட உயரங்களே வரும் தலைமுறைக்கு புதிய உச்சங்கள்!

அவர் பயணம் செய்த குதிரை ஒவ்வொன்றும் ராட்சத உழைப்பை தீனியாக கேட்கும், அசந்தால் ஆளை விழுங்கி ஏப்பம் விடும்; ஆனால் இவர் அவை அனைத்தையும் தன் சுண்டி இழுக்கும் திறமையால் அடக்கி ஆண்டவர்.

திரை (கதை, திரைக்கதை, வசனம், நாயகர்கள்), பத்திரிகை, அரசியல், இலக்கியம் என இவர் தன் வாழ்வை செதுக்கியபோது உதிர்ந்த துகள்களும் புகழ் பெற்றன.

கலைஞர் எனும் இயந்திரத்தின் சக்தியில் புகழ் வெளிச்சத்தின் இரு கண்களாய் சிவாஜியும், எம் ஜி ஆரும். தமிழகத்தின் தங்க தருணம், அரை நூற்றாண்டு,1950-2000 இந்த மும்மூர்த்திகளால் நகர்த்தப்பட்டது.

இவர் தோளோடு தோளுரசிய புகழ் மனிதர்கள் ஏராளம், உலக அரங்கிலும்தான்.

இவரோடு மடிந்தது திராவிட ஜோதியின் பெருவிளக்கு. இதனின்று சிதறிய கங்குகள் சில காலம் கனன்று மறையலாம்; அதில் ஒன்று கூட ஒரு நூற்றாண்டு ஜோதி தராது...

ஒரு நூறாண்டு வாழ்வில் ஒரு துறையில் உச்சம் தொட்ட கணக்கை தொடர்ந்தால், நான்கு துறைகளில், ஒவ்வொன்றிலும் உச்சம் தொட்ட நூறாண்டு என வளர்ந்து, குடும்பங்கள் வளர்த்த கணக்கில் இன்னொரு நூறு சேர, இந்த ஒற்றை மனிதனின் ஆயுள் ஐநூறு ஆண்டுகள்!!

இவரது அரசியல், குடும்பம் என குறைகள் ஏராளம் இருந்தாலும் இவரை நாம் விரும்பவோ வெறுக்கவோ முடியுமே தவிர ஒருபோதும் புறம் தள்ள முடியாது.

எனக்கு, ஏன் நம்மில் அநேகம் பேருக்கு அரசியல் தெரியாது. ஊடகங்கள் தரும் தகவல்களை வைத்தே நம் அரசியல் நிலைப்பாடு இருக்கும், மாறும்.

ஆனால் ஊடகங்களுக்கு அப்பால் ஒரு மாபெரும் தமிழறிஞராய் இவரது எழுத்து... இவர் செய்த மற்றவை அனைத்தும் செய்யக்கூடிய மனிதன் இனி ஒருவன் தோன்றினாலும், இவரளவு உயரத்துக்கு தமிழை அவனால் தூக்கிச்செல்ல முடியவே முடியாது.

கலைஞரின் தமிழுக்கு அஞ்சலி, இதயபூர்வமாய்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்