முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவரவர் விருப்பம்


உதிர்வதெல்லாம் முளைக்கும், ரோமம் தவிர!


ஒரு உணவகம்.

அழகற்ற ஒரு பெண் பணியாளர் உணவு பறிமாறுகிறாள்.

உணவருந்த வந்த நபர் இருக்கையில் அமர டம்ளரில் நந்நீர் வைக்கிறாள்.

'நன்றி' என்கிறார் அவர்.

பெண் முகத்தில் குழப்பம்.

'என்ன சொன்னீங்க?'

'நன்றி சொன்னேம்மா'.
...
அடுத்த இருபது நிமிடங்கள் அவள் இறகு முளைத்த தேவதையாய் மாறி அவரை தனி விருந்தினர்போல பார்த்துப்பார்த்து கவனிக்க வைத்தது அந்த ஒற்றைச்சொல், 'நன்றி'...

'நாம் மரங்களல்ல, உதிர்ப்பது முளைக்க' என்றுதானே எண்ணி 'மௌனமாய்' திரிகிறோம்...

பெருந்தவறல்லவா அது!

நாம் உதிர்ப்பது அனைத்தும் முளைக்கும், நம் ரோமம்  தவிர.

வாழும் நொடியெலாம் ரோமமுதிர்க்கும் நாம், அவை உதிராதபோதும் நாமாக உதிர்க்கும் சொற்களும், நமக்குள்ளே உதிர்க்கும் எண்ணங்களும் முளைக்கும்! தழைக்கும்!!

ஏனெனில் நிலம் என்றும் நந்நிலம்தான்.

விதை எவ்விதமோ, சுரை அவ்விதமே!

மரங்களும் நாமும் எங்கு வேறுபடுகிறோம் தெரியுமா?

மரங்கள் உதிர்ப்பவை (விதைகள்) மட்டுமே முளைக்கும். ஆனால் தேவையான நேரத்தில், நாம் உதிர்க்க மறந்த சொற்களும், நினைக்க மறந்த எண்ணங்களும்கூட முளைக்கும்; விளைவு நம் கையில் இல்லாமல். 

இந்த விதைகள் மட்டுமே 'விதை எவ்விதமோ சுரை அவ்விதமே' என்ற அடிப்படை அமைப்பில் பொருந்தாத மரபுப்பிழை.

மரபணு மாற்றப்பட்ட உணவு, மரபணு மாற்றிக்கொண்ட மனிதர்கள்...

சொற்களும் எண்ணங்களும்?

வசூல் ராஜா / Munnabhai MBBS படத்தில் முப்பது வருடமாய் தரை துடைக்கும் பணியாளரின் பெயர் தெரியாத மேலாளருடன் அந்த பணியாளர் முன்னாவின் மேஜிக்குக்கு பின்னான தன் உணர்வுகளை பதியும் காட்சி நினைவிருக்கிறதா?

நாம் அனைவருமே ஏதாவது ஒரு நொடியில் 'நம்மிடம் யாராவது நம் செயலை உணர்ந்து கனிவாய் ஒரு சொல் சொல்ல மாட்டார்களா? ஒரு புன்னகையாவது தரமாட்டார்களா?' என ஏங்குபவர்கள்தான்.

முன்னாவாக இருப்பதும் அவ்வாறு இல்லாமலிருப்பதும்... அவரவர் விருப்பம்.

பின் குறிப்பு:

உதிர்ந்த இந்த மலரின் அழகு, நம் சொற்களிலும் எண்ணங்களிலும் இருந்தால், அதுவே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்