முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்னும் நீங்க வாங்கலயா!


 

மூக்கு க்ளிப்பு!

ஒரு ஊருல பரம்பர பரம்பரயா அம்புட்டு சனங்களும் மூக்குல கிளிப்பு மாட்டிகிட்டு வாழ்ந்துதாம். பொறந்ததலந்து சாயறவரைக்கும்.

ஊரு நாத்தம் அப்புடி...

ஆரம்பத்துல கம்பிய வளச்சு கிளிப்பா பயன்படுத்த, அது மூக்கில குத்தி செப்டிக்காயி கொஞ்சம் மக்க மாண்டாக.


ஒடனே ஊர் பெருசுக கூடி 'ஆபத்தில்லாத கிளிப்பு வோணும்'னு தீர்ப்ப எழுதி, பெருசுங்களுக்கு வேண்டப்பட்ட வியாபாரிங்கள தரச்சொன்னாக. மரம், செம்புன்னு என்னென்னமோ ட்ரை பண்ணி ப்ளாஸ்டிக்கு பெஸ்ட்டுன்னு முடிவு பண்ண அது ஆச்சு அம்பது வருசம்.
நாத்தத்துலயே பொறந்தவங்களுக்கு ஒரு கட்டத்துல நாத்தம்னா என்னான்னே தெரியாம்ப்போயி ஆனாலும்  பளக்க தோசத்துல கிளிப்ப மாட்டிகிட்டு சுத்துனாய்ங்க.

இன்னொரு இருவது வருசம் செண்டு தொலவுலேந்து ஒரு பெரியவரு வந்தாரு. அவரு மூக்கில கிளிப்பு இல்ல. இந்த ஊரை சுத்திப்பாக்க வத்தவரு எல்லையில மூக்க பொத்தி நிக்க, வரவேத்த உள்ளூர் பெருசுங்க சால்வ போத்துற சாக்குல அவருக்கும் கிளிப்பு ஒண்ண மாட்டிவுட, அவரு சொஸ்தாயி, 'இன்னாபா இது?' ங்கவும், பெருசுங்கல்லாம் தல புராண மகிமய அள்ளி வுட்டுதுங்க. அல்லாத்தையும் கேட்டுப்புட்டு அவரு செத்த யோசன பண்ணாரு.

அப்பால ஊர்ப்பெருசுல பெத்த பெருச மட்டும் தனியா கூப்ட்டு 'செத்த நேரம் கிளிப்ப களட்டி சோப்புல வச்சிட்டு நடப்போம் வாரீகளா?' ன்னு தள்ளிகினு போயி, 'இம்மா நாத்தம்... எங்கேந்து?' ன்னவும், அந்த பெருசு மையமா தலய ஆட்டி நாலு தெசையவும் கை காட்டிச்சாம். 

'சரி வாரும், போவோம்'னு பெருசு வீட்டு தெசய பாக்க எட்டி நடை போட்டாக.

போகப்போக நாத்தம் பெருசாவ, பெருசு கோவமான கோவத்தோட 'ங்கொக்கா மக்கா! இங்கணதான் எங்கயோ ஆரம்பிக்குது!' ன்னு மோப்பம் புடிச்சு போய் நின்ன எடம், பெருசோட வீட்டுக்கொல்ல சாக்கட!!!!

இவுகள வேடிக்க பாக்க பின்னாடியே வந்த கூட்டம், ஊர நாத்தம் பண்ண குத்தத்துக்காவ அங்கனயே பஞ்சாயத்த கூட்டி பெருச 'தள்ளி வக்க' தீர்ப்பு எளுதி அதோட கிளிப்பயும் புடிங்கிகிட்டு (அடையாளத்த பறிக்கறதாம்!) உள்ளூரு பெருசு இன்னொண்ண பஞ்சாயத்துல சேத்துகிட்டாக.

வேத்தூருகாரரு என்னன்னமோ சொல்லிப்பாத்தாலும் கிளிப்பு அடச்ச காதுகள்ல எதுவும் ஏறல.

அவரு நொந்து தலைய உலுப்பிகிட்டே ஊரு போயி சேர, ஒதுங்கின பெருசு அவமானத்துலயும் நாத்தத்துலயும் நாண்டுகிட்டு சாக, ஊரு கூடி எரங்கல தெரிவிச்சிட்டு, அன்னாருக்கு அஞ்சலியா ரெண்டு நிமிசம் அம்புட்டு பேரும் கிளிப்ப களட்டி வச்சிட்டு நிப்போமுன்னு முடிவு செஞ்சி, நின்னா... நாத்தம் கொஞ்சமும் கொறயலயாம்.

தப்பான ஆள தண்டிச்சிட்டமேன்னு ரெண்டு சொட்டு கண்ணுத்தண்ணியோட கூட்டம் கலஞ்சுதாம்.

கதையெல்லாம் நல்லாதான் இருக்கு. நாத்தம்தான் சகிக்கலங்கிறீங்களா?
அடடா, இன்னும் கிளிப்பு வாங்கலயா நீங்க?!

(Nose clips and face are used for illustrative purpose; no intention to demean them in any way!)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்