கற்பனை செய்து பாருங்கள். ஒரு அருமையான நகரத்தில், உங்களை அறியாத, உங்களுக்குத்தெரியாத நகரத்தில், நீங்கள் தங்கும் ஹோட்டலுக்கு வாடகை கிடையாது, சாப்பாடு இலவசம், 'இருக்கும்வரை' தங்கலாம், காலி செய்யும் அவசியம் கிடையவே கிடையாது...சொர்க்கம் அல்லவா! காசியில் உயிர்விடும் ஆசையில் (straight ஆ முக்தி, no மறுபிறவி!) வயதானவர்கள் சிலர் பலர் சென்று, டிக்கட் கிடைக்கும்வரை இறைவழிபாட்டிலும் உடல் உபாதைகளிலும் காலத்தை தள்ள, கருணையோடிணைந்த ஈகை உள்ளம் கொண்ட சிலர் இவர்களுக்காக அங்கு இலவச விடுதிகள் நடத்துகிறார்கள். இவற்றுக்கு முக்தி பவன் என்று பெயர். வயதில் மூத்த முதியோருக்குமட்டுமே(!) அனுமதி. முடிந்தபின் கங்கையில் விட்டுவிடுவார்களாம்! காசியிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் நாங்களும் எங்கள் நகரத்தில் ஒரு முக்தி பவன் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை தற்செயலாய் கண்டுபிடித்தோம். இது நகரின் முதல் முக்தி பவனாகக்கூட இருக்கலாம்.,.. ஆனால் காசிக்கும் எங்களுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு்: 'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!