முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐந்து, நான்காகும்!

அல்லது 'விதை சுமக்கும் பெருவிதை'!



ஈரிலையில் கூடு செய்து, கூட்டுக்குள் முட்டையிட்டு பாதுகாத்து பொறித்து குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்கும் வரை உணவிட்டு...இத்தனையும் நடந்தது ஒரு ஒற்றை தேக்குமரக்கன்றிலே!

பெரிதினும் பெரிது (பூமி) கிடைத்தும் போதாமல் தவிக்கும் நம் கண் முன்னே இடையறாது இயற்கை நடத்தும் இந்த அற்புதப்பாடம் கண்டதுண்டா கண நேரமேனும்?

பேரண்ட வீட்டில், நட்சத்திரங்கள் கொண்டு தைத்த வான் கூரையின்கீழ், காற்று விசிறும் மரங்களிடையில், தொட்ட இடமெல்லாம் உயிர் முளைக்கவைக்கும் வெயில் மழை மந்திரக்கூட்டணியில், நம் வாழ்வு மட்டும் ஏனிப்படி கடினமாச்சி? 

கதவென்ன ஜன்னலென்ன வீடென்ன காடென்ன வரையறைகள்? எதிலிருந்து எதைக்காக்க இந்த புதிய ஏற்பாடு.

உலகின் முதல் பாலைவனம் நம் காலடித்தடமே தெரியுமா?

பேராசை, பெரும்பயம் என்ற காலணிகளுடன் நாம் நடந்த தடத்தில் புற்கள்கூட முளைப்பதில்லை என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவர்? உணர்வர்?

(மனிதனின் கால் தடம் படாத கானகத்தில் எண்ணற்ற மிருகங்கள் இருந்தும் ஒரு சுவடு மண்கூட மலடில்லை நட்பே!).

குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என நால்வகை நிலமும் நம் கால்பட்டு பாலையாகி  இன்று ஐவகை நிலமாய்...இவற்றில் பாலை மட்டும் தொடருது நம் கால்களேகும் திசையெல்லாம்...

நால்வகை நிலமும்  'ஒற்றைப்பாலையாய்' மாறுவதைத்தடுக்கும் ஒற்றை மந்திர விதையுண்டு தெரியுமா உங்களுக்கு? இவ்விதைக்கு மண் வேண்டாம், மழை வேண்டாம், வெயில் வேண்டாம், காற்றும் வேண்டாம், உங்கள் நினைவின் ஒரு சிறு துகள் கிடைத்தாலே போதும்!

 நம் பேராசையை "அக்கறை"ப்பெரும்பேராசையாய் மாற்றி, பெரும்பயம் தவிர்த்து, இந்த புவி மொத்தமும் என்னோடே, என்னோடு யாரிருப்பினும், அனைத்தையும் காக்கும் இப்பெரு வீடு "காக்கும் என்னையும், என் முயற்சி இல்லாமலே, யாதொன்றும் செய்யாமலே" என்ற ஒற்றை விதையை இன்றாவது விதைப்போமா நம் எண்ணத்தில்?

இந்த விதையின் விழுதுகள் நீளும் நம் வழியே, நம் குழந்தைகள. வழியே, நம் மரபின் நீட்சி வழியே. அவர் கால்தடம் பாவுமிடமெல்லாம் உயிர் முளைக்கும், தழைக்கும். 

Picture: Akku Ottapalam

ஐந்து நான்காகும், பாலையும் பண் பாடும். 

இதுவே நமது பண்பாடு.

வாருங்கள், காலணிகளில் இருந்து விடுபட்டு செல்வோம் விதை சுமந்து நெடும்பயணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்