முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எப்படி இருந்ந நாம், ஏன் இப்படி?

பாஸ்கர் சாவே எனும் பழுத்த இயற்கை விவசாயி, இந்திய பசுமைப்புரட்சிக்கு காரணமான திரு. M. S. சாமிநாதனுக்கு இந்திய வேளாண் மரபின் மேன்மை பற்றி (கடிதம் வழியே) 'நடத்திய' பாடத்தின் தொடர் பகுதி இது. (Actually part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan). மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது. தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன். ----- உற்பத்தி, ஏழ்மை மற்றும் மக்கள் தொகை இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் வெளியேறிய பின் இந்திய விவசாயம் நிதானமாக தன் சுயத்தன்மைக்கு வந்து கொண்டு இருந்தது. 75 சதவிகித இந்தியர்கள் வாழ்ந்த கிராமப் புறங்களில் எந்த வித வளர்ச்சி ஊக்கிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி இருந்தது. பசுமை புரட்சியை இந்தியாவில் திணித்ததின் உண்மையான காரணம் நம் அரசால் முன்னுரிமை அளிக்கப் பட்ட நகர தொழில்துறை சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிற்பதற்காக, (கெட்டுப்போகும் தன்மை குறைவான) சில தானியங்களை மட்டும் அதிகமான அளவில்  விற்பனைச்சந்தைக்காக  உ ற்பத்தி செய்யும் குறுகிய லட்சியமே...

நம் வேளாண் தற்சார்பு எங்கே தொலைந்து போனது? -பாஸ்கர் சாவே - 2

  பாஸ்கர் சாவே எனும் பழுத்த இயற்கை விவசாயி, இந்திய பசுமைப்புரட்சிக்கு காரணமான திரு. M. S. சாமிநாதனுக்கு இந்திய வேளாண் மரபின் மேன்மை பற்றி (கடிதம் வழியே) 'நடத்திய' பாடம் இது - சென்ற பகுதியிலிருந்து தொடர்கிறது. (Continuation of a part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan). மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது. தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன். தற்சார்பின்மையின் மூல காரணம் தற்சார்பு என்பது நீங்கள் பசுமை புரட்சியை பரப்பிக்கொண்டு இருக்கும்போது அதிகம் பேசப்படாத ஒரு புதிய கவலையாகவே இருந்தது. கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் குன்றிக்கொண்டே இருக்கும் மண் வளம் கிட்டத்தட்ட நாற்பது நூற்றாண்டுகளில் நம் முன்னோர்கள் செய்த இயற்கை வேளாண்மையினால் குன்றாமல் இருந்தது என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? ஒரு தலைமுறைக்குள்ளாகவே வேதிப்பொருட்கள் அதிகம் கொண்ட உரங்கள் மற்றும் அதிக நீர் கொண்ட ஒற்றைப்பயிர் (பணப்பயிர்) விவசாயம்தான் நம் நாட்டின் பெரும்பான்மையான இடங்கள...

பாஸ்கர் சாவே - 1 : என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?

பாஸ்கர் சாவே எனும் பழுத்த இயற்கை விவசாயி, இந்திய பசுமைப்புரட்சிக்கு காரணமான திரு. M. S. சாமிநாதனுக்கு இந்திய வேளாண் மரபின் மேன்மை பற்றி (கடிதம் வழியே) 'நடத்திய' பாடம் இது. (Actually part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan). மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது. தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன். ----- நம் நாடு அற்புதமான கரிம வளம், செல்வச் செழிப்பு,  பொன்னான மண், ஏராளமான நீர்வளம், ஏராளமான சூரிய வெளிச்சம், அடர் காடுகள், ஏராளமான பலவகையான உயிரினங்கள் இவைகள் கொண்ட, நல்ல நெறிகளுடன் மக்கள் வாழும் நாடு, அமைதி விரும்பும் விவசாய விற்பன்னர்கள் வாழ்ந்த நாடு. விவசாயம் நம் ரத்தத்தில் ஊறியது. அனால் இந்த தலைமுறை (தலை நரைத்த) இந்திய விவசாயிகள்  உங்களைப்போன்ற விவசாய அனுபவமே சுத்தமாக இல்லாதவர்களின் அறிவுரையினால்  தம்மை தாமே ஏமாற்றிக்கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட, தொலை நோக்கு இல்லாத, மண்ணை மிக மோசமாக வீணடிக்க கூடிய விவசாய முறையை கடைபிடிப்பது எனக்கு வேத...

ஒரே குழப்பமா இருக்கு ஔவையாரே!

அறம் செய்ய விரும்பு. திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி அருகிலிருந்தே காவிரியும் பயணிக்கிறது.  அகண்ட காவேரியாக பல கிலோமீட்டர் தூரம் அவள் பயணம் என்றாலும் நெடுஞ்சாலை மட்டும் பல இடங்களில் வாய்க்கால் அளவு குறுகி (மறுபுறம் இரயில் வண்டி தடம் + பாசன வாய்க்கால்) திருப்பராய்த்துறை அருகில் மட்டுமே விரிந்த சாலையாக மாறும். சீமான் தத்தாச்சாரியார் மாம்பழக்கடை தாண்டி, முக்கொம்பு கடந்து குளித்தலை தாண்டி பேட்டைவாய்த்தலை சாலை இந்த நெடுஞ்சாலையில் சேருமிடம் ஒரு நடமாடும் சந்தை. நெல், வாழை, பலா, மா, மல்லி, முல்லை என கலந்து கட்டி சாகுபடி செய்யும் எளிய மனிதர்கள் நடத்தும் unofficial சந்தை. சீசனுக்கு விளைந்த பழங்களை, மலர்களை நெகிழிப்பைகளில் சிறு சிறு கூறுகளாக அடைத்து, சாலை சந்திப்பு முனையில் ஓட்டப்பந்தய வீரர்கள் போல ஆயத்தமாக நிற்பார்கள். வெயில் 100-102 என ஏறும் நண்பகல், மதியப்பொழுது என பாகுபாடு இல்லாமல் தலையில் துண்டு அல்லது முந்தானை கொண்டு மூடிக்கொண்டு, சாலை கடப்பதற்காக வேகம் குறைக்கும் வாகனங்களை நோக்கி இரு கைகளிலும் பைகளை தூக்கிக்கொண்டு ஓடி வருவார்கள். சில நிமிடங்களில் வணிகம் முடித்து அடுத்த வண்...

காற்றில்...எந்தன் கீதம்...

காலை செய்தித்தாளை அவசரமாய் புரட்டிப்படித்த ஆனிக்காற்று, வாசித்த செய்திகளின் தாக்கத்தால் சித்தம் கலங்கி எங்கெங்கோ சுற்றி அலைந்துகொண்டிருக்கிறது இப்போது வரை. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அப்படித்தானாம். காற்று காணாதா போரா, வன்முறையா, கோரமா, சோகமா, கோபமா, அழுகையா, ஓலமா? ஆனாலும் அவற்றையெல்லாம் மறுபடி மறுபடி அச்சில் படிக்கும் சோகம் அதனை கனத்த போர்வையாய் கவ்வும். இன்னும் எத்தனை தலைமுறைகளுக்குதான் இந்த மனிதர்கள் இங்கே இப்படி என நொந்துபோய் சற்றே இளைப்பாற தவிக்கும் காற்றுக்கு இப்போதெல்லாம் மரங்கள் கூட இல்லை மனிதர்கள் உலகில். காற்று காணாத செய்திகளையா தாள்கள் மனிதரிடம் கொண்டுசேர்க்க முடியும்? செய்தித்தாள்களின் தலைப்புச்செய்திகளை மிஞ்சுமளவு காற்றின் குரல் ரகசியம் பேசும், கொஞ்சும், குழையும், ஓங்காரமிடும், ரீங்காரமிடும், கேட்க விரும்பும் செவிகளில் எல்லாம்.  கேட்பவர்கள்தான் அதிகமில்லை இங்கு. தப்பித்தவறி செவி வழி நுழைந்த காற்றின் குரலும் மனித இதயங்களில் புதைந்துபோகும், நாசிகள் கூட அடைபட்டுப்போன உலகில். மனிதர்கள் துளையாத மூங்கிலா என்ன காற்று வழிந்தோட! உறங்கும் மனிதர்கள் அனிச்சையாய் எழுப்பும் ஒலிகளி...

டார்வினும் ஒதிய மரமும்!

சார்லஸ் டார்வின் தந்த பரிணாமவியல் - Evolutionary Biology. இதன் தவறான சாரம் - Survival of the fittest. இந்த தவறான புரிதல்தான் தமிழிலும் 'வலியவன் வாழ்வான் / வலிமையான உயிர்கள் வாழும்' என வலம் வருகிறது. வலிமை என்பதற்கு மனிதர்களது புரிதலில் "பேராற்றல்" - Might. உதாரணத்துக்கு இன்றைய அமெரிக்கா. டார்வின் சொன்னது, Survival of the most adaptable.  அமெரிக்கா வலிமையான நாடு. ஆனால் டார்வினின் பரிணாம கோட்பாட்டில் அது fittest Nation அல்ல. வலிமைக்கும் most adaptable க்கும் என்ன வேறுபாடு? Most Adaptable - உதாரணம்: ஓணான் / உடக்கான்!  தான் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்ளுதல் / மாற்றிக்கொள்ளுதல். 200 மில்லியன் ஆண்டுகளாக adapt ஆகி ஆகி தன் இனத்தை நீட்டித்துக்கொண்டிருக்கும் இந்த உயிர் ஒரு சில 'வெகு வேகமாக சூழல் மாறிப்போன நிலங்களில் பதுனைந்தாண்டுகளிலேயே தன் மரபணுவை (DNA) மேம்படுத்தி பிழைத்திருக்கிறதாம்! நம் கண்ணதாசன் இதையே எளிமையாக  'ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை' என எழுதியிருக்கிறார்...