முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஸ்கர் சாவே - 1 : என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?



பாஸ்கர் சாவே எனும் பழுத்த இயற்கை விவசாயி, இந்திய பசுமைப்புரட்சிக்கு காரணமான திரு. M. S. சாமிநாதனுக்கு இந்திய வேளாண் மரபின் மேன்மை பற்றி (கடிதம் வழியே) 'நடத்திய' பாடம் இது.

(Actually part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan).

மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது.


தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன்.

-----

நம் நாடு அற்புதமான கரிம வளம், செல்வச் செழிப்பு,  பொன்னான மண், ஏராளமான நீர்வளம், ஏராளமான சூரிய வெளிச்சம், அடர் காடுகள், ஏராளமான பலவகையான உயிரினங்கள் இவைகள் கொண்ட, நல்ல நெறிகளுடன் மக்கள் வாழும் நாடு, அமைதி விரும்பும் விவசாய விற்பன்னர்கள் வாழ்ந்த நாடு.
விவசாயம் நம் ரத்தத்தில் ஊறியது. அனால் இந்த தலைமுறை (தலை நரைத்த) இந்திய விவசாயிகள் 
உங்களைப்போன்ற விவசாய அனுபவமே சுத்தமாக இல்லாதவர்களின் அறிவுரையினால் தம்மை தாமே ஏமாற்றிக்கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட, தொலை நோக்கு இல்லாத, மண்ணை மிக மோசமாக வீணடிக்க கூடிய விவசாய முறையை கடைபிடிப்பது எனக்கு வேதனை அளிக்கிறது, 

இந்த மண், வேதியல் உரங்கள், பூச்சிகொல்லிகள், தனித்துவமான குள்ள பயிர் வகைகள், நீங்கள் இப்பொழுது ஊக்கப்படுத்தி வரும் செயற்கை தொழில் நுட்ப உரங்கள், இவை எதுவுமே இல்லாத காலங்களிலும் உலகத்திலேயே அதிகமான மக்கள் தொகையை தற்சார்போடு கணக்கற்ற தலைமுறைகளாக தாங்கியுள்ளது. நூற்றுகணக்கான ஆண்டுகளாக, நம் நாட்டின் மீது பலர் படை எடுத்து நம் வளங்களை சுரண்டிசென்ற பின்னரும் நம் மண்ணின் வளம் பாதிப்பின்றி இருக்கிறது.

உபநிஷத் ஒன்றை இங்கே குறிப்பிடுகிறேன் :
ஓம் பூர்ணமுதஹ
பூர்ணமிதம் பூர்ணாம் பூர்ணம் உதஸ்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவாவசிஸ்யதே

பொருள்:
இந்த படைப்பு முழுமையானது, முற்றானது.

இந்த முழுமையிலிருந்து படைப்புகள் உண்டாகின்றன, ஒவ்வொன்றும் முழுமையாக, முற்றாக.

முழுமையிலிருந்து முழுமையை எடுத்தாலும் முழுமை எஞ்சி நிற்கிறது,
சற்றும் குறையாமல், முழுமையாக!.


நம் காடுகளில் நாவல், மா, காட்டு அத்தி மற்றும் புளி போன்ற மரங்கள் தகுந்த பருவ நிலையின்போது கிளைகள் வளைந்து தொங்கும் அளவுக்கு விளைந்து நிற்கின்றன. ஒரு வருடத்து விளைச்சல் 1000 கிலோவுக்கு குறையாமல் இருக்கும் ஒவ்வொரு மரத்திலும். ஆனால் அம்மரங்களை சூழ்ந்து உள்ள பூமி, தரையில் எந்த பெரிய ஓட்டைகளும் இன்றி முழுமையாக எந்தக் குறைபாடும் இல்லாமல் இருக்கிறது. இந்த மரங்களுக்கு (கடும் பாறை கொண்ட மலைகளில் உள்ள மரங்களும்தான்) எங்கிருந்து தண்ணீர் மற்றும் சத்துக்கள் (NPK) கிடைக்கின்றன?

இயற்கை தன்னிலையில் இருந்து நகராமலே இந்த மரங்களுக்கு தேவையானதை தேவையான இடத்திலேயே கொடுக்கிறது. ஆனால் உங்களைப்போன்ற குறுகிய பார்வை கொண்ட குழப்பம் செய்யும் அரிப்பு உள்ள அறிவியலாளர்களும், பொறியியலாளர்களும் இந்த உண்மையை காண இயலாத பார்வையற்றவர்களாக இருக்கிறீர்கள். எந்த அடிப்படையில் நீங்கள் ஒரு மரத்துக்கு / செடிக்கு எது வேண்டும், எப்போது வேண்டும், எங்கு வேண்டும் என்று அறிவுறுத்துகிறீர்கள்?

அறிவு இல்லாத இடத்தில், அறியாமையானது அறிவியல் என்ற போர்வையில் உலா வரும் என்று சொல்வார்கள். இப்படியான அறிவியலைத்தான் நீங்கள் வளர்த்து நம் விவசாயிகளை அழிவின் பாதையில் இட்டுச் செல்கிறீர்கள். அறியாமை என்பது வெட்கப்படக் கூடிய ஒன்று அல்ல. அது அறிவை அடைய தேவையான முதல் படி. ஆனால் அறியாமையை கண் கொண்டு பார்க்க மறுப்பது தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளும் இறுமாப்பு.


வேளாண்மைக்கான தவறான கல்வி
நம் நாட்டில் 150 வேளாண் பல்கலைக் கழகங்கள் உள்ளன. பெரும்பான்மையானவை ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கொண்டவை. அவைகளுக்கு கட்டமைப்பு, சாதனங்கள், வேலை ஆட்கள், பணம் என்று எதுவுமே தட்டுப்பாடின்றி உள்ளன. ஆனாலும் இவற்றில் ஒன்று கூட, அரசிடம் இருந்து ஏராளமான மானியங்கள் கிடைத்தும் கூட, லாபம் ஈட்டக்கூடிய அளவிலோ அல்லது தன் மாணவர்களின் உணவுத் தேவையை கூட பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒவ்வொரு கல்வி கூடமும் நூற்றுக்கணக்கான 'கல்வி கற்ற' ஆனால் வேலை செய்ய இயலாதவர்களை விவசாயிகளுக்கு இயற்கையைச் சீர்குலைக்கும் தவறான தவகல்கள் தருவதற்கு அனுப்பி வைக்கின்றது.

ஒரு மாணவன் முதுகலை வேளாண்மை படிப்பில் செலவிடும் ஆறு முழு வருடங்களும் 'உற்பத்தி பெருக்கம்' என்ற ஒரே குறுகிய தொலை நோக்கற்ற இலக்கை நோக்கியே உள்ளது. இதற்காக விவசாயி நூறு அலுவல்களை/பொருட்களை செய்யவும் வாங்கவும் அவசரப்படுத்தப்படுகின்றான். ஆனால் அவன் தன் நிலத்தை எதிர்கால சந்ததியினர் மற்றும் பல்லுயிர்கள் நலம் கருதி 'என்னென்ன செய்யக்கூடாது' என்பது குறித்து யாரும் சிந்தனை செய்வதில்லை.

பகுதி 2 - வணிக வேளாண்மை vs இயற்கை வேளாண்மை - விரைவில்.
(படம்: இந்திய கானக வளம்!)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...