முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டார்வினும் ஒதிய மரமும்!



சார்லஸ் டார்வின் தந்த பரிணாமவியல் - Evolutionary Biology. இதன் தவறான சாரம் - Survival of the fittest. இந்த தவறான புரிதல்தான் தமிழிலும் 'வலியவன் வாழ்வான் / வலிமையான உயிர்கள் வாழும்' என வலம் வருகிறது.


வலிமை என்பதற்கு மனிதர்களது புரிதலில் "பேராற்றல்" - Might. உதாரணத்துக்கு இன்றைய அமெரிக்கா.

டார்வின் சொன்னது, Survival of the most adaptable. 


அமெரிக்கா வலிமையான நாடு. ஆனால் டார்வினின் பரிணாம கோட்பாட்டில் அது fittest Nation அல்ல.

வலிமைக்கும் most adaptable க்கும் என்ன வேறுபாடு?


Most Adaptable - உதாரணம்: ஓணான் / உடக்கான்! 

தான் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்ளுதல் / மாற்றிக்கொள்ளுதல். 200 மில்லியன் ஆண்டுகளாக adapt ஆகி ஆகி தன் இனத்தை நீட்டித்துக்கொண்டிருக்கும் இந்த உயிர் ஒரு சில 'வெகு வேகமாக சூழல் மாறிப்போன நிலங்களில் பதுனைந்தாண்டுகளிலேயே தன் மரபணுவை (DNA) மேம்படுத்தி பிழைத்திருக்கிறதாம்!


நம் கண்ணதாசன் இதையே எளிமையாக 

'ஆற்றங்கரை மேட்டினிலே

ஆடி நிற்கும் நாணலது

ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது

காற்றடித்தால் சாய்வதில்லை'

என எழுதியிருக்கிறார்.


அறிவியலின் பார்வையில் ஓணானும் நாணலும் இணையும் இந்த 

புள்ளியில்தான் இப்போது ஒதியனும் இணையத்தொடங்கியிருக்கிறது.


Ash Tree என மேலை நாட்டினர் இந்த மரத்தை இன்றைய அறிவியல் மகிழ்வோடும் முணைப்போடும் நுண்ணோக்கி வழியே கண்காணித்துக்கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் கூட்டம் கூட்டமாய் வாழும் இந்த மரங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு பூஞ்சாண நோய் (fungus) தாக்குதலால் திடீரென கொத்து கொத்தாய் அழிந்துகொண்டிருக்கின்றன. இந்த நோய்க்கு அவர்கள் இன்னும் தீர்வு காண இயலாத நிலையில், 'உங்களை நம்பி பலனில்லைப்பா, நாங்களே பாத்துக்கிறோம்' என இந்த ஒதிய மரங்களே தம் மரபணுவை மெல்ல மெல்ல கடந்த பதினைந்தாண்டுகளில் மாற்றிக்கொண்டே இருக்கின்றன!


எப்படி?

வழக்கத்திற்கு மிக அதிகமான அளவில் காய்களை உருவாக்கி, பூஞ்சாண தாக்குதலின் வேகத்தை விட வேகமாக  வளரக்கூடிய விதைகளை ஒதிய மரம் இளம் பருவத்திலேய உற்பத்தி செய்து (காய்கள் வழியே) தாக்குதலில் இருந்து தன் இனம் தப்பி பிழைக்கும் வகையில் தன் மரபணுவை தான் இருக்கும் இடத்திலிருந்தபடியே கடந்த இருபதாண்டுகளில் மெல்ல மாற்றிக்கொண்டிருக்கிறதாம்!


நூற்றாண்டுகள் வாழும் மரத்தைக்கூட தன் மரபணுவை சடுதியில் மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியத்தை இன்றைய உலகம் இருவாக்கி இருப்பதை அறிவியல் அவஸ்தையுடன் ஆய்வு செய்துகொண்டிருக்கிறது.


Just imagine, மனிதர்களும் இயற்கையின் படைப்புதானே. நாளையே நம் தலையில் ஏலியன் போல  ஆன்டனாக்கள் முளைக்கத்தொடங்கலாம். அவ்வாறு நிகழ்ந்தால் உலகமே மகிழ்ந்து கொண்டாடி அந்த ஆன்டனாக்கள் வழியே தகவல் பரிமாற்றம் செய்து இன்னும் வெகுவேகமாக பணம் செய்யலாம்!


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...