பாஸ்கர் சாவே எனும் பழுத்த இயற்கை விவசாயி, இந்திய பசுமைப்புரட்சிக்கு காரணமான திரு. M. S. சாமிநாதனுக்கு இந்திய வேளாண் மரபின் மேன்மை பற்றி (கடிதம் வழியே) 'நடத்திய' பாடத்தின் தொடர் பகுதி இது.
(Actually part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan).
மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது.
தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன்.
உற்பத்தி, ஏழ்மை மற்றும் மக்கள் தொகை
இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் வெளியேறிய பின் இந்திய விவசாயம் நிதானமாக தன் சுயத்தன்மைக்கு வந்து கொண்டு இருந்தது. 75 சதவிகித இந்தியர்கள் வாழ்ந்த கிராமப் புறங்களில் எந்த வித வளர்ச்சி ஊக்கிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி இருந்தது. பசுமை புரட்சியை இந்தியாவில் திணித்ததின் உண்மையான காரணம் நம் அரசால் முன்னுரிமை அளிக்கப் பட்ட நகர தொழில்துறை சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிற்பதற்காக, (கெட்டுப்போகும் தன்மை குறைவான) சில தானியங்களை மட்டும் அதிகமான அளவில் விற்பனைச்சந்தைக்காக உற்பத்தி செய்யும் குறுகிய லட்சியமே ஆகும்.
உங்களால் ஆர்வமுடன் முன் மொழியப்பட்ட புதிய ஒட்டுண்ணித்தனமான வேளாண்மை, முதலாளிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் அரசில் சக்தி வாய்ந்தவர்களுக்கும் மட்டுமே பயன்பட்டது. விவசாயிகளின் செலவு அதிகமானது, ஆனால் கிடைக்கும் நிகர லாபம் குறைய ஆரம்பித்தது. இதனுடன் சேர்ந்து மண்ணின் இயற்கை வளமும் குறைய ஆரம்பித்ததால் இந்த விவசாயிகள் கடனாளியாகவோ அல்லது உயிரற்ற மண்ணால் தங்கள் கைகளில் ஒன்றுமில்லாமல் ஏழைகளாகவோ நிற்கும் சூழல் உருவானது.
நிறைய விவசாயிகள் வேளாண்மை செய்வதையே விட்டு விட்டனர். இன்னும் பலர், கூடிக்கொண்டே போகும் செலவினங்களால் வேளாண்மையை விட்டு விட முடிவு செய்துள்ளனர். சத்தான நஞ்சற்ற உணவினை உற்பத்தி செய்யக்கூடிய உயிர்ம வேளாண் மையை இயற்கை நமக்கு அளவில்லாமல் அள்ளித் தந்திருக்கும்போது நாம் இவ்வாறு செய்வது மிகவும் துயரமானது.
ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை மற்றும் மக்கள் தொகை பெருக்கம் என்னும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தொல்லைகளுக்கு ‘இந்திய வேளாண்மையின் இயற்கையான ஆரோக்கியத்தை மீளுருவாக்குவது ஒன்றே’ சரியான வழியாகும்.
வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள் மிகக்குறைவாக இருந்தால் மட்டுமே மிக அதிகமான மக்கள் வேளாண்மையை தேர்ந்தெடுத்து தன்னிறைவு அடைய முடியும். எனவே வேளாண்மை என்பது மிக குறைவான நிதி, மிகக் குறைவான இடுபொருட்கள், மிக குறைவான ஆயுதங்கள் (ஏர், மற்ற ஆயுதங்கள்), மிகக் குறைவான வேலை ஆட்கள் மற்றும் மிகக் குறைவான வெளித்தொழில் நுட்பங்கள் கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதிக செலவின்றி விளைச்சல் அதிகரிக்கும், வறுமை குறையும் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி தானாகவே மட்டுப்படும்.
முற்காலத்தில் நாம் சுய சார்புடைய, வெளி இடுபொருட்கள் தேவையில்லாத அல்லது குறைந்த அளவிலேயே தேவையான விவசாயம்தான் செய்து வந்தோம்.
யுத்தம் மற்றும் அந்நிய அடக்குமுறைக் காலங்களை தவிர நம் விவசாயிகள், உற்பத்தி பரப்பு குறைவானதாக இருந் தாலும் தேவைக்கதிகமான பல்பயிர்களை தற்சார்புடன் விளைவித்து வந்தனர்.
இவற்றில் குறிப்பாக குறுகிய கால ஆயுள் கொண்ட பயிர்கள், நகரத்திலுள்ள நுகர்வோர்களுக்கு தர முடியாதவை.
அதனால் நம் நாட்டின் விவசாயிகள், பாரம்பரிய முறையில் விளைவித்து வந்த பல்பயிர்களுக்கு (விலை கொடுத்து இடுபொருட்கள் வாங்கத் தேவை இல்லாத பல்பயிர்களுக்கு) மாற்றாக நகர நுகர்வோர்களின் தேவைகளை நோக்கி ஒற்றைப் பயிர்களான கோதுமை, அரிசி, சர்க்கரை ஆகியவற்றை வேதியியல் முறையில் விளைவிக்க இட்டுச்செல்லப்பட்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக