முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் வேளாண் தற்சார்பு எங்கே தொலைந்து போனது? -பாஸ்கர் சாவே - 2

 


பாஸ்கர் சாவே எனும் பழுத்த இயற்கை விவசாயி, இந்திய பசுமைப்புரட்சிக்கு காரணமான திரு. M. S. சாமிநாதனுக்கு இந்திய வேளாண் மரபின் மேன்மை பற்றி (கடிதம் வழியே) 'நடத்திய' பாடம் இது - சென்ற பகுதியிலிருந்து தொடர்கிறது.

(Continuation of a part of an open letter Shri. Bhaskar Save wrote to M.S. Swaminathan).

மழை வருமா? நன்கு பெய்யுமா? நீர்நிலைகள் நிரம்புமா? என கவலையோடு வானத்தை நோக்கும் ஒவ்வொரு விவசாயியும் அவசியமாய் வாசித்து, சிந்தித்து உணர வேண்டிய பாடம் இது.


தமிழாக்கி பகிர்வதில் மகிழ்கிறேன்.



தற்சார்பின்மையின் மூல காரணம்
தற்சார்பு என்பது நீங்கள் பசுமை புரட்சியை பரப்பிக்கொண்டு இருக்கும்போது அதிகம் பேசப்படாத ஒரு புதிய கவலையாகவே இருந்தது. கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் குன்றிக்கொண்டே இருக்கும் மண் வளம் கிட்டத்தட்ட நாற்பது நூற்றாண்டுகளில் நம் முன்னோர்கள் செய்த இயற்கை வேளாண்மையினால் குன்றாமல் இருந்தது என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா?

ஒரு தலைமுறைக்குள்ளாகவே வேதிப்பொருட்கள் அதிகம் கொண்ட உரங்கள் மற்றும் அதிக நீர் கொண்ட ஒற்றைப்பயிர் (பணப்பயிர்) விவசாயம்தான் நம் நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் பரவி வரும் உயிர்ச்சூழல் பேரழிவுக்கு முதல் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா!

பன்மயப் பயிர்களின் பன்மயத் தன்மையை திட்டமிட்டு குறைத்தல், அரிதான இயற்கை சத்துக்கள் மற்றும் மண்வளம் தரம் குறைத்தல்:

நமது நாடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளக்கூடிய ஏராளமான பன்மயப் பயிர்களை தன்னகத்தே கொண்டு பொலிவுடன் இருந்தது.
நம்முடைய ஏராளமான உயரமான உள்ளூர் வகை தானியங்கள் மண்ணுக்கு கரிம சத்துக்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல் நிலத்துக்கு நிழல் தந்தும் அதிகமான பருவ மழையினால் ஏற்படும் மண் அரிப்பையும் தடுக்க உதவின.

ஆனால் உற்பத்தியை பெருக்குவதாக கூறிக்கொண்டு அரிதான குள்ள இனங்கள் உங்கள் முயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்டு பரப்பவும் செய்யப்பட்டன. இதனால் களைகள்தான் மிக அதிகமாக வளர்ந்து இப்பொழுது சூரிய ஒளிக்காக, வளர்ச்சி பாதிக்கப்பட்ட பயிர்களுடன் வெற்றிகரமாக போராடுகின்றன. இதனால் களை நீக்கவும், களைக்கொல்லி அடிக்கவும் விவசாயி அதிகமாக செலவு செய்ய நேரிட்டிருக்கிறது.
குள்ள தானியங்களின் வைக்கோல் வளர்ச்சி கடுமையாக குறைந்து உள்ளூர் தானிய வகைகளின் வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எட்டுகிறது. பஞ்சாப் மற்றும் அரியானாவில் இந்த வைக்கோல்கள் கூட கிருமிகளை தம்முள் அடக்கியுள்ளதாக கருதப்பட்டு முற்றிலுமாக எரிக்கப்படுகிறது (கால்நடைகள் உண்ணத்தகாத அளவுக்கு நஞ்சு உள்ளதால்; டிராக்டர் எந்திரங்கள் இப்போது கால்நடைகளுக்கு பதிலாக வேலை செய்கின்றன).

இதன் விளைவாக மண்ணை வளமாக்கும் இயற்கை இடுபொருட்கள் உள்ளூரில் கிடைக்கும் அளவு குறைந்து வெளியில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி இட வேண்டியிருக்கிறது. வேறு வழியின்றி விவசாயிகள் வேதி உப்புக்களை இட்டு மண் வளத்தன்மையை மேலும் குறைக்கின்றனர். இதனால் வளமான மண்ணும் அரிக்கப்படுகின்றது.

திட்டமிட்டு உருவாக்கிய கொள்ளை நோய்
வேதி உரங்கள் இட்டு வளர்க்கப்பட்ட இந்த அரிதான பயிர் வகைகள் பூச்சிகளுக்கும் நோய்களுக்கும் எளிதான இலக்காக மாறிப்போகின்றன.  இந்த பாதிப்பை குறைக்க மேலும் கொடிய விஷங்களை (பூச்சிக்கொல்லிகள்) நிலத்தில் இட வைக்கின்றன.

ஆனால் இந்த பூச்சிக் கொல்லிகளால் தாக்கப்பட்ட பூச்சியினங்கள் தம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொண்டு மிக அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த பூச்சியினங்களை உண்டு வாழும் சிலந்திகள், தவளைகள் போன்றவை (ஒரு வகையில் இந்த பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கையாக கட்டுப்படுத்துபவை) உணவின்றி அழிந்து போகின்றன. 

மண்ணுக்கு நன்மை செய்யும் பூச்சிகளான மண் புழுக்கள் மற்றும் தேனீக்களும் அழிந்து போகின்றன. இத்தகைய பூச்சிகளை கொல்ல வணிக விவசாயம் மற்றும் தொழில் முனைவோர்கள் மேலும் மேலும் சக்தி வாய்ந்த புதிய, கொடிய, அதிக விலை மிக்க வேதி உரங்களை பரிந்துரை செய்தனர். ஆனாலும் பூச்சிகள் மற்றும் நோய்களின் தொல்லைகள் முற்றிக்கொண்டே இருந்தன. இதனால் சுற்றுச்சூழல், நிதி மற்றும் மனிதச் செலவுகள், அதல பாதாளத்தை நோக்கிய ஒரு சுழலில் சிக்கிக்கொண்டன.

(மேலும் தொடரும்).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...