முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் விழித்திரையில் - 4. ஏழு ஸ்வரம், நவரஸம், ரெண்டு மிஸ்டேக்!

இந்திய சினிமாவின் திறமையின் உச்சம், ஏழு ஸ்வரங்கள், ஒன்பது ரஸங்கள், ரெண்டு மிஸ்டேக்குகளால் செதுக்கப்பட்டு... அது ஆச்சி 30 வருசம். ஆனால் இன்றும் காண்பவர் உணர்வோடு ஒன்றி, (பலமுறை) பார்த்தவர் கண்ணிலும் நீர்த்திரையிடும் அற்புதம் எப்படி சாத்தியமாச்சு? நடனத்தை மட்டுமே சுவாசித்து வாழும் வாய்ப்பற்ற ஏழைக்கலைஞன். இந்தக்குசேலனை தேடிவந்த கண்ணனாய் கலையார்வம் ஊறிய மேல்தட்டு பத்திரிகையாளர், கலைஞி, இளைஞி, கணவரிடமிருந்து பிரிந்து தந்தை வீட்டில். சான்ஸ் மீட்டிங்கில் தொடங்கும் இவர்களின் இணைந்த பயணத்தில் நட்பு காதலாய் மாறி மௌனமான நேரங்களாய் நகர்கிறது.  நாடறிய அம்பாரியேறும் வாய்ப்பு அவளால் அவனுக்கு கிட்ட, ஆர்ப்பரிக்கும் கற்பனை கைதட்டல்களில் நனைந்து கரங்கள் இணைய நினைக்கும்பொழுது அவனது அம்மா இறந்துபோக... பின் அவளது கணவன் வந்து நிற்க; வந்தவன் இவர்களது உணர்வுகளை மதித்து இணைத்து வைக்க விரும்பினாலும் ஏழைக்கலைஞனுக்கு ஒப்புதலில்லை. தம்பதிகள் வெளிநாட்டுக்கு கிளம்பியபின் இவன் நடனத்தை சரக்கு வழியே மறக்க, நண்பனின் அரவணைப்பில் நோயாளியாய் நாட்கள் கழிய, வயதானபின் மீண்டும் ஒரு முறை சான்ஸ் மீட்டிங், காதலியின

நிழலின் அருமை

தேங்காய் எண்ணெய் தடவி படிய தலைவாரி புது சொக்காயுடன் பள்ளி சென்ற முதல் நாள். பாலர் பள்ளி ஆசிரியையை தேவதையாய் உணர்ந்து திருமணம் வரை ஆசைப்பட்ட குழந்தை இதயத்தின் படபடப்பு. நெற்றியில் திருநீறுடன் மண்டியிட்டு சிலுவையிட்டு ஆமென் என கண்விழித்து சுடராடும் மெழுகுவர்த்தியை கண்சிமிட்டாது கண்ட நொடிகள். பக்கத்து வீட்டு வசுமதியுடன் விளையாடுகையில் இயல்பாய் இடித்து நகர்ந்து 'நமக்கேன் இப்படி இல்லை' என குழம்பி நகர்ந்த தருணம். கால்கள் தரையெட்டா வாடகை சைக்கிளில் குரங்கு பெடல் திக் திக் மணித்துளிகள், தலைதெறிக்கும் அன்போடு சகோதரன்  பின்னால் ஓடி வரும் நம்பிக்கையில். தந்தையின் விரல்பிடித்து கோவில் பிரகாரம் வலம் வந்த நாட்கள் (விரல் தந்த சாமியின் முகம் தவிர வேறெந்த சாமி முகமும் நினைவிலில்லை). கத்தியும் கரண்டியுமாய் சண்டைபிடித்த சகோதரி, அன்போடு என்றும் அரவணைத்த அம்மாவின் கை(அடுக்களை) த்தழும்புகள். எதிர்பார்ப்பற்ற பதின் பருவ விளையாட்டு தோழமைகள், எடைபோடாத நட்பும் சுற்றமும் சூழ்ந்திருந்த காலங்கள். பதின்பருவத்தில் முதல் எதிர்பால் நட்பு... கண்டிப்பாய் காதலென்று ஊர்த்தெரு ம

மௌனம் எனக்கொரு போதிமரம்

ஆழத்தின் அடி ஆழம் அறியா நினைவு அடுக்களில் சிக்கி மீண்டு ஊற்றெடுத்து பொங்கிப்பெருகி ஓசையற்று வழிந்தோடும் அடர்மௌனம் என் கண்களின் வழியே. இடையறாது வழியும் என் மௌனத்தின் ஓசை கேட்டு திறக்கும் சில விழிகளேனும்.  ஓசைகளற்ற ஓசை வழியே விழி நிறைந்து உள்ளிறங்கி அவ்வுள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் மௌனத்தை தட்டியெழுப்பி கதைகள் பல பேசும் மௌனம், மௌனமாகவே. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த மௌனம்... முழுதாய் உள் நிறுத்த காது பொத்தி கண்கள் மூடி இதழ்களும் மூடி மூச்சு முட்ட மகிழ்வாய் தவிக்கும் பேரன்பு.  அன்பின் தரிசனம் சுடராடும் விழிகள் வழி உலகெங்கும் தீட்சை பெறும், மோட்சம் பெறும்; மௌனம் எனக்கொரு போதிமரம்.

சின்ன சின்ன ஆசை!

இன்று பாடல்களை புதிதாய் ரசித்துக்கொண்டிருக்கும் தலைமுறைக்கு ஏ. ஆர். ரஹ்மான் - வைரமுத்து - மணிரத்னம் கூட்டணி மட்டுமே தெரியும். 1992, சின்ன சின்ன ஆசை என்ற ஒரு பாடலின் இசை ரஹ்மானின் வருகையை உலகிற்கு அறிமுகம் செய்தது. அந்தப்பாடலின் வரிகள் வைரமுத்துவுக்கு உலக அரங்கின் கதவுகளை 'மீண்டும்' திறந்துவிட்டது. எத்தனை டிஜிடல் யுவ யுவதிகளுக்கு இது தெரியும்? ஏன் 'மீண்டும்'? ரஹ்மான் வருகைக்கு முன்னரே வைரத்துக்கு பறக்கும் மாயக்கம்பளம் தந்து உலகெங்கும் தமிழர்கள் கூடும் இடங்களில், அவர்களின் தனிமையில், ஊர் நினைவில், உறவுகளின் நினைவில், வாழ்வின் பெரிய தருணங்களில் (மகிழ்வோ, வலியோ எதுவாயினும்) மானுடத்தின் ஊற்றுக்கண்களை துடைத்து மகிழ்வுகளை பெருக்கி, வலிகளைக்குறைத்து / துடைத்து என இந்தக்கம்பளத்தின் பயணம் எல்லையற்றே இருந்தது (இருக்கிறது!).  1980 இல் 'வானம் எனக்கொரு போதிமரம்' என்ற வைரமுத்துவின் வரிகளை வானத்திற்கு தூக்கிச்சென்றது இளையராஜாவின் இசை. பூங்கதவை தாழ்திறந்து இந்த இருவர் துவங்கிய இசைப்பயணம், இந்த நூற்றாண்டின் தமிழ் இசை ரசிகர்களுக்கு தலைவாழை விருந்து, அனுதினமு

Crime and REWARD!

2005. A lazy Sunday afternoon in Switzerland. Though my motto in Weekend life was 'it is a CRIME' to stay indoors when Sun shines bright and hot' (which is actually a measly three/four months in a year!), that particular day I committed that very crime, for no obvious reasons that I could remember, but WHAT A REWARD I got!!!! Post lunch, flipped on the telly and jay walked thru the channels only to be stopped by somebody dancing. Though never a dance lover, I sat up because the one who was dancing was just floating around, elegant, graceful, no strains at all and... not a female...and... He was doing all this while holding a tennis racket in His slender right arm!!!  Till that point in my life, cricket was the apple of my sporting eye with idols like Richards, Windies  space quartet of the 80s ('fire in banylon' summed them fabulously years later), Gavaskar, Vengsarkar, Kapil, Sachin, Dravid et al. They all disappeared from my personal pedestal lik

நழுவும் மொழி - 4. ஜீவ பூமி

"ரதன் சந்தாவத் ஸலூம்ப்ராவின் சிரிப்பு, அந்தக்கிருஷ்ணபக்‌ஷத்து இரவின் பயங்கரமான அமைதியை சரேலென்று கிழித்து, இடையிலிருந்த எவ்வளவோ இடைஞ்சல்களை ஊடுருவிச்சென்று, உதயசாகரத்தின் அலைகளின் இரைச்சலோடு கலந்துகொண்டது. அவன் அவ்வளவு பலமாகச்சிரித்திராவிட்டால் இந்தக்கதை நிகழ்ந்தே இராது." என்ன ஒரு ஓப்பனிங் சீன்! பாஷ்யம் என்று ஒரு எழுத்தாளர், சரித்திரக்கதை எழுதும் முயற்சியின் துவக்கம் இது. ரதன், ராஜபுத்திரன், நிகரற்ற போர் வீரன். மொகலாய ஆட்சியில் இன ஒற்றுமையின்றி ராஜபுத்திரர்கள் எதிர்த்து தோற்பது வழக்கமாகிப்போன பிண்ணனியில், அவரகளின் கோழைத்தனம் தாங்காது வெதும்பி மொகலாய படையில் உப சேனாதிபதியாகி, குணம் கெட்டு அலைபவன். டில்லியில் வேசி ஒருத்தியை குலமகள் என்று எண்ணி மானம் காக்க மொகலாயன் ஒருவனை கொன்று, மன்னனின் கோபத்திலிருந்து தப்பி பல்லாண்டு தலைமறைவாகி மன்னிப்பு பெற்று மீண்டும் அவரிடம் கூலிக்கு போரிடும் வீரன்.  மொகலாயர் கை தாழ்ந்து ராஜபுத்திரர் கை ஓங்கத்தொடங்குகிறது. அகிலா, ராஜபுத்திர வீரர் ஒருவரின் குலக்கொடி. அவளைக்கவர்ந்து வந்தால் யுத்தத்தின் போக்கு மாறலாம் என மொகலாய தள

அவதார வி(ந்)தை!

சாதாரண விதை நிலம் நீங்கி பயணித்து உணவாகி பல்லிடுக்கில் சிக்கியோ சிக்காமலோ மோட்சமடையும். அவதார விதையோ கல்லிடுக்கில் விழுந்தாலும் புரட்டிப்போட்டு நிலம் மீட்கும், உயிர் வளர்க்கும், வானுக்கும் மண்ணுக்கும் பாலமாய், பூமிக்கு பலமாய், மரம் செய்யும்! காடு வளர்க்கும்!! ஒற்றை விதைக்குள் ஓராயிரம், ஈராயிரம், பல்லாயிரம் பூ காய் கனி விதை... எண்ணுவதற்கு காலத்தினால்கூட இயலாதுபோகும்.  காலமற்ற வெளியிலும் விதையொன்று எங்கேனும் உறங்கக்கூடும், விழிக்கக்கூடும். விதையின் இருப்பு வரை வாழ்வும் இருக்கும். ஆடி ஆறடிக்குள் முடங்குவோர் ஆடாமல் கற்கவேண்டியது விதையிடம் ஏராளம். கற்போமே விதையளவேனும்... விதையிடமேனும்...