முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நழுவும் மொழி - 4. ஜீவ பூமி



"ரதன் சந்தாவத் ஸலூம்ப்ராவின் சிரிப்பு, அந்தக்கிருஷ்ணபக்‌ஷத்து இரவின் பயங்கரமான அமைதியை சரேலென்று கிழித்து, இடையிலிருந்த எவ்வளவோ இடைஞ்சல்களை ஊடுருவிச்சென்று, உதயசாகரத்தின் அலைகளின் இரைச்சலோடு கலந்துகொண்டது.

அவன் அவ்வளவு பலமாகச்சிரித்திராவிட்டால் இந்தக்கதை நிகழ்ந்தே இராது."

என்ன ஒரு ஓப்பனிங் சீன்!

பாஷ்யம் என்று ஒரு எழுத்தாளர், சரித்திரக்கதை எழுதும் முயற்சியின் துவக்கம் இது.

ரதன், ராஜபுத்திரன், நிகரற்ற போர் வீரன். மொகலாய ஆட்சியில் இன ஒற்றுமையின்றி ராஜபுத்திரர்கள் எதிர்த்து தோற்பது வழக்கமாகிப்போன பிண்ணனியில், அவரகளின் கோழைத்தனம் தாங்காது வெதும்பி மொகலாய படையில் உப சேனாதிபதியாகி, குணம் கெட்டு அலைபவன். டில்லியில் வேசி ஒருத்தியை குலமகள் என்று எண்ணி மானம் காக்க மொகலாயன் ஒருவனை கொன்று, மன்னனின் கோபத்திலிருந்து தப்பி பல்லாண்டு தலைமறைவாகி மன்னிப்பு பெற்று மீண்டும் அவரிடம் கூலிக்கு போரிடும் வீரன். 

மொகலாயர் கை தாழ்ந்து ராஜபுத்திரர் கை ஓங்கத்தொடங்குகிறது.

அகிலா, ராஜபுத்திர வீரர் ஒருவரின் குலக்கொடி. அவளைக்கவர்ந்து வந்தால் யுத்தத்தின் போக்கு மாறலாம் என மொகலாய தளபதி ஒரு பேடியை அனுப்ப, அவன் அகிலாவிடம் அவமானப்பட்டு உயிர்ப்பிச்சை பெற்று மீண்டுவர, அவனை எள்ளி நகையாடி 'நான் முடிக்கிறேன் பார்' என மார்தட்டி களமிறங்குகிறான் ரதன்.

எதிர்பாராத ஊரில் எதிர்பாராத சூழலில் (உயிர் ஊசலாடும் காயத்தோடு, நினைவிழக்கும் தருணத்தில்) அகிலாவை சந்திக்க நேர்கிறது. அவளது மெய்க்கீர்த்தியோடு சேர்ந்த அழகு முகம் அவனை காதல் கொள்ள வைக்கிறது. அவன் யாரென்று தெரிந்தால் ராஜபுத்திர வாளுக்கு பலியாவது உறுதி என்ற நிலையில் வேறொரு பெயரில் பழக வேண்டியதாகிறது.

இந்தக்காதல் ராஜபுத்திர முகலாய அரசயல் சதுரங்கத்தில் சிக்கி என்ன ஆகிறது?, ரதன் மாறுகிறானா? அவன் ரதன் என்று அகிலா அறிய நேரும் சூழல், அவள் எடுக்கும் முடிவு, காதலி தூண்டும் சுதந்திரம் ரதனை இழுக்கிறதா? மொகலாயர்களின் சதிகளை தாண்டினானா? 

ஏராளமான கேள்விகள், சூழ்நிலைகள் எழுப்பி, இன்றும் பொருந்தும் கூர் விவாதங்களின் வழி கதையை நகர்த்தி நம்மை கதைக்குள் இழுத்துக்கொள்ளும் ஆற்றலை முதல் சரித்திர நாவலிலேயே காட்டியிருக்கிறார் பாஷ்யம்...

கதை வெளிவந்த ஆண்டு, 1953! படித்தவர் பித்தாகி, இந்திய எழுத்துலகில் ஒரு சரித்திரப்பயணம் தொடங்கியது.

'பாஷ்யம்? Who? ' என தலையை சொரியவேண்டாம்.

டைடானிக் கப்பலை ஜேம்ஸ் கேமரன் நமக்கு வெள்ளித்திரையில் ஓட்டிக்காண்பிப்பதற்கு அரை நூற்றாண்டு முன்னரே நம் பாஷ்யம் இதுபோன்ற பல முயற்சிகள் செய்து பெரு வெற்றியும் பெற்றிருந்தார். கடல்புறா, யவன ராணி என அவர் எழுத்தின் வழி வாசிப்பவர் மனத்திரையில் அவர் நிகழ்வித்த கடல் பயணங்கள், அழைத்துச்சென்ற புவிப்பரப்புகள், யுத்தங்கள், சாகசங்கள், நாயக நாயகியர்... சாண்டில்யன் என்பதும் அவர் பெயரே!


கல்கி, விக்கிரமன் போன்றோர் சோழர் வரலாற்று நாவல்களை எழுதிக்கொண்டிருந்த காலத்திலேயே வேறொரு கவர்ச்சிகரமான நடையில், இன்னும் விரிவான கற்பனை வெளியில் தனி எழுத்துப்பாதை அமைத்தவர்...

இந்தியாவின் Herold Robins எனும் அளவுக்கு ஊடல் கூடல் வர்ணனைகள், எல்லையற்ற சரித்தி்ரக்கற்பனைகள்...என மனிதர் பின்னாளில் எழுதியவை எல்லாம் தலையணை சைசில் நாவல்கள்!

அந்த நாவல்களில் எல்லாம் இல்லாத simple and enduring charm "ஜீவபூமி"யில் இருக்கிறது (232 பக்கங்கள் மட்டுமே). ரதனுக்கும் அகிலாவுக்கும் ஹலோ சொல்லி (இந்த ஆண்டு) வாசித்துதான் பாருங்களேன்!

பின் குறிப்பு: சற்றே தேடினால் எல்லா புத்தக கடைகளிலும் கிடைக்கும். புத்தக திருவிழாவில் உறுதியாய் கிட்டும்.

கருத்துகள்

  1. இந்த நாவல் பாெது நூலகத்தில் படிக்க கிடைக்குமா அல்லது புத்தகக் கடையி(ல் தான்)லாவது கிடைக்குமா? கடைசி வரியாக இதையும் கூறியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. கிடைக்கும், சற்றே முயன்று தேடினால் :-)

    கடைப்பணியாளருக்கு தெரியாது; அவர்களிடம் கேட்பது பயனற்றது :-)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...