முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்ன சின்ன ஆசை!


இன்று பாடல்களை புதிதாய் ரசித்துக்கொண்டிருக்கும் தலைமுறைக்கு ஏ. ஆர். ரஹ்மான் - வைரமுத்து - மணிரத்னம் கூட்டணி மட்டுமே தெரியும்.

1992, சின்ன சின்ன ஆசை என்ற ஒரு பாடலின் இசை ரஹ்மானின் வருகையை உலகிற்கு அறிமுகம் செய்தது. அந்தப்பாடலின் வரிகள் வைரமுத்துவுக்கு உலக அரங்கின் கதவுகளை 'மீண்டும்' திறந்துவிட்டது. எத்தனை டிஜிடல் யுவ யுவதிகளுக்கு இது தெரியும்?

ஏன் 'மீண்டும்'?

ரஹ்மான் வருகைக்கு முன்னரே வைரத்துக்கு பறக்கும் மாயக்கம்பளம் தந்து உலகெங்கும் தமிழர்கள் கூடும் இடங்களில், அவர்களின் தனிமையில், ஊர் நினைவில், உறவுகளின் நினைவில், வாழ்வின் பெரிய தருணங்களில் (மகிழ்வோ, வலியோ எதுவாயினும்) மானுடத்தின் ஊற்றுக்கண்களை துடைத்து மகிழ்வுகளை பெருக்கி, வலிகளைக்குறைத்து / துடைத்து என இந்தக்கம்பளத்தின் பயணம் எல்லையற்றே இருந்தது (இருக்கிறது!). 
1980 இல் 'வானம் எனக்கொரு போதிமரம்' என்ற வைரமுத்துவின் வரிகளை வானத்திற்கு தூக்கிச்சென்றது இளையராஜாவின் இசை.

பூங்கதவை தாழ்திறந்து இந்த இருவர் துவங்கிய இசைப்பயணம், இந்த நூற்றாண்டின் தமிழ் இசை ரசிகர்களுக்கு தலைவாழை விருந்து, அனுதினமும் சுவைத்தாலும் திகட்டாத மருந்து.

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் மயக்கத்தில் ... அடுத்த பனிரெண்டு ஆண்டுகளுக்கு அது ஒலிக்காத நாடில்லை!

"
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்…
"
...
"
ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
"
என காற்றின் அலைவரிசையெங்கும் ஆக்கிரமித்து சிம்மாசனமிட்டு அமர்ந்தன இசையும் பாடல்களும்!

'மௌனமான நேரம்' என்ற சிறுகதை, விகடனில் 2011 ல் வெளிவந்தது. அந்தக்கதை ஒரு நீண்ட உரையாடல் வழியே எழுப்பிய கேள்விகளுள் முதன்மையானவை இவை:

'ஏன் சார் இவங்க பிரியணும்? ஒரு நல்ல கவிதைய எழுதும்போது அவருக்கு இவர் (இசை) நினைவு வராமலிருக்குமா? ஒரு நல்ல இசைக்கோவையை உருவாக்கும்போது இவருக்கு அவர் நினைவு வராமலிருக்குமா? 
இன்டஸ்ட்ரியே கூடி சேத்துவச்சிருக்கணும் சார்...ஏன் சார் யாரும் செய்யல?'.

இந்த இருவர் சேர்ந்து படைத்த பாடல்களின் தனித்துவத்தையும், கோடிக்கணக்கான இதயங்களில் இதையொட்டிய எண்ணங்கள் இன்றுவரையில் எழுவதற்கான காரணத்தையும் அழகாக பதிவும் செய்கிறது அந்தக்கதை; 'இந்த மண்ணின் இசை இவரிடம், இந்த மண்ணின் மொழி அவரிடம். விதையை ஓரிடத்தில் ஊன்றி நீரை இன்னொரு இடத்தில் ஊற்றினால் பயிர் வளருமா? இவர்கள் தனித்தனியே இன்றுவரை படைத்தாலும்...'

இந்த மண்ணின் மொழியை இந்த மண்ணின் இசையோடு சேர்ப்பித்த இன்னொரு பெருங்கலைஞன், இந்த மண்ணின் உணர்வுகளை வெள்ளித்திரையில் அற்புதமாய்  அரங்கேற்றியவன், இம்மூவரும் இன்னும் படைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர், தனித்தனியே.

தமிழ்த்திரையுலகம், தமிழ் ரசிகர்கள், இவர்களின் படைப்பாற்றலின் பயனாளிகள்...  தமிழுக்கு செய்யக்கூடிய கடமை, இவர்களை மீண்டும் இணைத்து 'காலத்தை நிறுத்தக்கூடிய' பாடல்கள் இன்னும் சிலவேனும் சமைத்துத்தருவது.

செய்யவைப்போமா?

OnemoreSong என்ற fb page க்கு like போடுவோம், share செய்வோம்... காலம் கனியும் என்ற நம்பிக்கையுடன்!

வேதம் அணுவிலும் ஒரு நாதம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்