முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குப்ப மேட்டரப்போயி யாராவது படிப்பாங்களா?!

குப்ப மேட்டரு! நேற்று நீங்கள் வீட்டினுள் அலறி 'அடித்து' வெளியே எறிந்த உயிரற்ற எலி என்ன ஆயிற்று என்று தெரியுமா? (அடிச்சது யாரு? சிங்கம்ல!!!) குப்பை என்ற சொல், நாகரீக வாழ்வு இந்த உலகுக்கு தந்த புத்தம்புதிய சொல். மீந்ததை (எஞ்சியதை) உண்டு வாழ பல்லுயிர் இருக்கும்வரை அதுவும் உணவாகிக்கொண்டுதானே இருக்கவேண்டும்? எப்படி குப்பையாச்சி? நம் உடலும் உணவே, யாருக்கோ! என்றவகையில்தான் இந்த உலகில் அனைத்து உணவுகளும் படைக்கப்பட்டன, உண்ணப்பட்டன, பன்னெடுங்காலம். வீட்டுக்குப்பின்னால் எருக்குழி (note: குப்பைக்குழி அல்ல!) எடுத்து, வீட்டில் மீந்ததை அதில் சேர்க்க, 'மீந்தது' அனைத்தும் பலகோடி உயிர்களுக்கு உணவாகி, அதன் பின் மீந்தது மீண்டும் பயிருக்கு எருவாகி, இலையாய் காயாய் கனியாய் நமக்கு உணவாகி என இடைவிடாத மறுசுழற்சியில் (recycling). சைக்கிளை உலகம் கண்டுபிடிக்கும் முன்னரே ரீசைக்கிளை வாழ்வியலாக கொண்டவர் நாம். இன்று குப்பையாகிப்போனது நம் வாழ்வு. 'எரும மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு சொன்னா கேப்பாருக்கு எங்க போச்சி புத்தி?' என்பதும் நம் சொலவடைதான். நாமோ அதையும் தாண

இசைதெய்வம் நானடா!

சில நாட்களுக்கு முன் ஒரு ஒளிப்பதிவு பார்த்தேன். ரேடியோ மிர்ச்சி ஏற்பாடு செய்திருந்த நேர்காணல், இளையராஜாவும் மிர்ச்சி தேர்ந்தெடுத்த அவரது ரசிகர்களும். பல மொழி ரசிகர்கள், சந்நிதானத்தில் இருப்பது போல் பரவசத்தில் இருந்தாலும் தெளிவாய் கேள்வி கேட்டனர். 'கடவுளை நேரில் பார்க்கிறேன்',  'உங்கள் பாடல் கேட்டபடியேதான் உறக்கம், ஒவ்வொரு இரவும், இருபது வருடமாய், உலகின் எந்த மூலையில் வேலை செய்தாலும்' 'என் அம்மா பதினைந்து வயசில இறந்துட்டாங்க. இன்றைய வரைக்கும் உங்க சின்னத்தாயவள் இசைவழியா அவங்க என் கூடவே இருப்பதாய் உணர்ர்கிறேன்' 'ஐயா, நானு ஐதராபாது. இரடு கண்ணும் தெளியேது. ஆனா உங்க இசை வழியா தினமும் உங்கள "பாத்துகிட்டே இருக்கேன்" ' "எங்கட நாட்டிலயும் நிங்களுக்கு வல்லிய fans உண்டு சாரே! ஞான் நொம்பர் ஒண்ணாக்கும்" என உணர்வுக்குவியலை சிதறவிட, மனிதர் அவர்கள் அனைவர்க்கும் தனித்தனி பதிலாய் சொன்னது ஒரே விசயம்தான்,  "இசை என்பது எனக்குள் எழும்பும் உணர்வு. அதை நான் வெளிக்கொணர்கிறேன். அந்த உணர்வுகள் உங்களுக்குள் என்ன மாதிரிய

என்ன வண்ணமோ மனதிலே! / Exploding colours!

,

பட்டினத்தார் வீட்டப்பம்

தன் சிறகசைப்பில் புவியை 'சுற்றும்' சிறு பறவை புலம் தேடி (காந்தப்)புலம் உணர்ந்து விரையும் காலம், மனிதர்க்கு தெரியும். புலன் மட்டுமே வெளிச்சமிட்டுக்காட்டும் வான் தடத்தில் அவை அறிவு கொண்டு பறப்பதில்லை, உணர்வு கொண்டே... வழித்தடத்தில் இளைப்பாற, உணவு உண்ண என தடம்நோக்கி நீளும் மரக்கிளைகள் போட்டி போட்டு... 'என்ன கதை புதிதாய்!' என இலைக்காது குவித்து அவை வினவ, பறவை சொல்வதெல்லாம் அழிவின் கதை. கதை கேட்டு கலங்குவதில்லை மரமெதுவும்! "அழிப்பவர் அழிக்கட்டும். யாம் பழம் செய்வோம், விதைகள் செய்வோம். நீ உண்ண முடிந்தவரை உண்டு வயிற்றில் சுமக்க முடிந்த அளவு சுமந்து செல்; காற்றும் விதை பரப்பும் முடிந்தவரை. மனிதரற்ற இடங்களில் எச்சம் வழியே எமை பரப்பு. அங்கும் அவர் கூட்டம் பெருகினால்... முடிந்தவரை யுத்தம் தவிர். தவிர்க்க இயலாவிட்டால் அவர்களது இருப்பிடமெங்கும் விதையெச்சம் தூவு. யாம் முளைப்போம், துளிர்ப்போம். நச்சிட்டு எமையழிக்க அவர் முயல்வர். (தன்னப்பம் தன்னைச்சுடும்) வீட்டப்பம் ஓட்டைச்சுடும் என உணவும் தீயாகி வீடு் பற்றியெறிந்த கதைகள் பல தெரிந்தவர்

நேசம் நடந்த தடம்

நேசம் நடந்த தடம்... என் வீடு சேரும் வழித்தடத்தில் மிதிபடாத பூக்கள் காட்டின  உன் சுவடுகளை. ஈர மண் வாசலில் இன்னும் காயாத  உன் கால் தடம். வீட்டுக்குள் நீ வந்து சென்ற இடம் காட்டும் உதிர்ந்த பவழமல்லி இதழ்கள், எனக்காக காற்றில் நீ விட்டுச்சென்ற உணர்வு இழைகள்... நீ வருவதற்கு முன்  தனிமை நிலவில் உன்னோடு உரையாடிக்கொண்டிருந்த லயிப்பில் நான்... நனவிலோ கனவிலோ... என் கால் தடம் ஒட்டி உன் சுவடுகள். அடுத்தமுறை நேரில் வந்தால்  கனவு கலைக்க என் மீது ஒரு பூவையேனும் எறி; இல்லையெனில்  மறுபடியும் இக்கவிதையை நான் முதலிலிருந்து எழுதவேண்டிவரும்!

வண்ணந்தாங்கி / CANVAS

96. ஹையோ! கவிதை!!

காலியான வகுப்பறை, பார்பர் ஷாப், பார்க்கிங் லாட், பாத்ரூம், ஆட்களற்ற மெட்ரோ ரயில் இருக்கைகள், மேம்பால நடுச்சாலை, திடீர் பவர் கட்டில் ஒலிக்கும் யமுனை ஆற்றிலே பாடல், பழைய பெட்டியில் மொக்கை கவிதை, கார் கியர், கொடியில் காயும் சுடிதார் செட்... இவையெல்லாம் நம்மை காதலில் நனைக்கமுடியுமா? திக்குமுக்காடவைக்கமுடியுமா? முடியும், நாம் ராம் & ஜானுவுடன் சில மணி நேரங்கள் கழித்தால். மழை நீரை நாக்கு நீட்டி உணர்ந்து ரசிக்கும், இயற்கையின் மடியில், அதன் அரவணைப்பில் உறங்கும், அன்பான கண்டிப்போடு போட்டோகிராபி கற்றுத்தரும் ஆசான் (குண்டுப்பையன் உடலை வளைத்து குனிந்து போட்டோ எடுக்க முயல, ஆசான் குச்சியால் கால்களில் தட்டி மண்டிபோட வைக்கிறார் :-). அவர்மீது மரியாதை கலந்த நேசத்துடன் ஒரு மாணவி. மாணவப்பருவத்தில் ஆசானின் முதல் காதல். காதலின் நினைவாய் கடற்கரை ஈர மணலில்              ராம்             ஜானு என்று எழுத, அலைகள் இவர்களது பெயரை எட்டி எட்டி படிக்க முயல, நாம் நனையத்தொடங்குகிறோம் காதல் மழையில். படித்த ஊர் வழியே பயணம் செய்ய நேரும்போது, தான் 'வாழ்ந்த' பள்ளியைக்கண்டு நிறுத்தி, வாட்ச