முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குப்ப மேட்டரப்போயி யாராவது படிப்பாங்களா?!

குப்ப மேட்டரு!

நேற்று நீங்கள் வீட்டினுள் அலறி 'அடித்து' வெளியே எறிந்த உயிரற்ற எலி என்ன ஆயிற்று என்று தெரியுமா? (அடிச்சது யாரு? சிங்கம்ல!!!)

குப்பை என்ற சொல், நாகரீக வாழ்வு இந்த உலகுக்கு தந்த புத்தம்புதிய சொல்.

மீந்ததை (எஞ்சியதை) உண்டு வாழ பல்லுயிர் இருக்கும்வரை அதுவும் உணவாகிக்கொண்டுதானே இருக்கவேண்டும்? எப்படி குப்பையாச்சி?

நம் உடலும் உணவே, யாருக்கோ! என்றவகையில்தான் இந்த உலகில் அனைத்து உணவுகளும் படைக்கப்பட்டன, உண்ணப்பட்டன, பன்னெடுங்காலம்.

வீட்டுக்குப்பின்னால் எருக்குழி (note: குப்பைக்குழி அல்ல!) எடுத்து, வீட்டில் மீந்ததை அதில் சேர்க்க, 'மீந்தது' அனைத்தும் பலகோடி உயிர்களுக்கு உணவாகி, அதன் பின் மீந்தது மீண்டும் பயிருக்கு எருவாகி, இலையாய் காயாய் கனியாய் நமக்கு உணவாகி என இடைவிடாத மறுசுழற்சியில் (recycling).

சைக்கிளை உலகம் கண்டுபிடிக்கும் முன்னரே ரீசைக்கிளை வாழ்வியலாக கொண்டவர் நாம். இன்று குப்பையாகிப்போனது நம் வாழ்வு.

'எரும மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு சொன்னா கேப்பாருக்கு எங்க போச்சி புத்தி?' என்பதும் நம் சொலவடைதான்.

நாமோ அதையும் தாண்டிய வியத்தகு விந்தைகளை நம்பி ப்ளாஸ்டிக் எருமை முதுகில் பெருவாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

வாயில் நுழையும் ப்ளாஸ்டிக் ப்ரஷ்ஷிலிருந்து 'துடைக்கும்' காகிதம், 'உறிஞ்சும்' அட்டைகள் என நவ துவாரங்களோடும் ப்ளாஸ்டிக் உறவாட, குப்பையோடு குப்பையாய் நாமும் காற்றில் அலைகிறோம்...

'கல்' அறைகள் கட்டி மண்ணிலிருந்து நம்மை நாமே பிரித்துக்கொண்டது போல உணவையும் உண்பவரிடமிருந்து ப்ளாஸ்டிக் 'சுற்றி' பிரிக்க, நம்மைப்போல் ப்ளாஸ்டிக்கை கழற்றி எறிந்து உணவை உண்ண முடியாத விலங்குகளும் பறவைகளும் 'வாய்க்கெட்டியது வயிற்றுக்கெட்டவில்லையே' என்று பட்டினியால் மாள, நம் குப்பை உண்பாரில்லாமல் அலை அலையாய் பரவ, இந்த அலையில் சிக்கி நம் சுற்றமும் (காக்கை குருவி எங்கள்...) சூழலும் (நீள் கடலும் மலையும்...) வதைபடுவதை காணச்சகியாது, நம் கண்ணுக்கெட்டா தொலைவில் டம்ப்பிங் யார்ட் எனப்படும் புதைகுழிகளில் நம் குப்பையை அரசு எந்திரங்கள் சுமந்து நட, நட்டது முளைக்க, முளைப்பதும் குப்பையாகத்தானே இருக்கும்?!

அப்பனென்றும் அம்மையென்றும் கொட்டிவைத்த ஞானக்குடுவைகள் நாம், அறம் தொலைத்த வாழ்வில் மயிர் உதிர்ப்பது போல குப்பை உதிர்த்து நாட்களை கழிக்கிறோம்.

பிணந்தின்னிக்கழுகுகளை குப்பை அழிவில் இருந்து காக்க நண்பர் ஒருவர் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடமிருந்து நான் புரிந்துகொண்டது இது:

மனிதர்கள் உட்கொள்ளும் வேதி மருந்துகள், நம்மை நம்பும் கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் நாம் கொடுக்கும் வேதி மருந்துகள், இந்தக் கழுகுகளுக்கும் காகங்களுக்கும் பேதியை உண்டாக்கி கொல்கின்றனவாம். 

காக்க காக்க!
இயற்கையின் மறுசுழற்சியில் இறந்த பேருயிர்கள் அனைத்தையும் நாற்றம் நம் மூக்கை தொடுமுன் உண்டு அகற்றும் ஒரு உயிர்க்கூட்டம், நம் வாழ்வுச்சங்கிலியில் ஒரு இன்றியமையாத கண்ணி, நம் மருந்துகளால் அழிக்கப்பட்டால் என்ன ஆகும் தெரியுமா?

கழுகுகளும் காகங்களுமற்ற உலகு நேர்ந்தால் விளைவு என்ன ஆகும் தெரியுமா?

நேற்று நீங்கள் வீட்டினுள் அலறி 'அடித்து' வெளியே எறிந்த எலி என்ன ஆயிற்று என்று தெரியுமா?

கருத்துகள்

  1. Fact. Need to work on these things at large.

    Vishnuvarthanan

    பதிலளிநீக்கு
  2. Thank you.

    If we dump food waste without plastic packing, they will be completely eaten away, however rot they may be...

    What about கஞ்சித்தொட்டி, வீதிக்கொன்று, மனிதரல்லாத ஏனைய உயிர்கள் உண்டு வாழ!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்