முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பசித்திரு, தனித்திரு, விழித்திரு, பிழைத்திரு!

இயற்கை வேளாண்மையும் இயற்கை மருத்துவமும். முன்னது ஆகும்.பின்னது ஆகாது! உலகம் முழுவதும் ஒரே உணவுப்பழக்கம் என்ற மேற்கின் கனவு நம் கண்முன்னே தகர்ந்து போய் கிடக்கிறது இன்று. உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் பல பயிர் பல்லுயிர் என நோயற்று வாழ்ந்த மக்களை வணிகப்பயிர்களுக்கு, ஒற்றைப்பயிர்களுக்கு மாற்றவைத்தது மேற்கின் பொருளாதார பலம். வருடத்தில் ஆறுமாதம் இயற்கை சூழல் ஒத்துழைக்காததால் முடங்கியிருந்த மேற்கு, வணிகக்காற்று உந்தித்தள்ள கடற்பயணம் தொடங்கியபோது எஞ்சிய உலகைப்பிடித்தது சனி! " பட்டும், மிளகும் கம்பளமும் ஆசியாவில் கிடைக்கிறதே! மேன்மையான குதிரைகள் அரேபியாவில் கிடைக்கிறதே! பொன்னும் வெள்ளியும் தென்னமெரிக்காவில் குவிந்து கிடக்கிறதே! விலையற்ற தொழிலாளர்கள் (அடிமைகள்!) செவ்விந்திய, மேற்கிந்திய, இந்திய, ஆப்பிரிக்க நிலப்பரப்பில் ஏராளமாய் இருக்கின்றனரே! கோகோ மெக்சிகோவில் செழித்து வளர்கிறதே! " என கப்பல்கள் நூற்றாண்டுகளாய் கரை தொட்டு நங்கூரமிட, இறங்கிய வணிகக்கூட்டம் சுரண்ட முடிந்தவரை அள்ளிச்சென்றபின், அந்த நிலங்களையும் தன் வணிக நீட்சிக்காய் அந்த நிலங்களிலிருந்த பல்லுயிர் சுழற்சியை உடைத்தழித்து

காலக்குமிழ்

இன்றின் கரைகளில்  நேற்றின் அலைகள் ஒருபோதும் மோதுவதில்லை காலங்களினூடாய் பயணம் செய்பவன் நினைவின் கரைகளில் தங்கிப்போவதுமில்லை குமிழ், இன்றின் குமிழ் நுரை, இன்றின் நுரை அலை, இன்றின் அலை கடல், இன்றின் கடல் கரை, இன்றின் கரை நேற்றை கடந்த பயணி மட்டும் நேற்றின் பயணி என்பது எங்கணம்? அலையாடி அலைமோதி அலைதாவி அலைபாய்ந்து தொடரும் குமிழின் பயணம் பயணியின் பயணம் போலவே. பயணி வேறு குமிழ் வேறா? அதுவாய் இதுவாய் ஏதோவொன்றாய் நொடியில் நிறம் மாறும் ஏதோவொன்றின் சிறு மிடறு நம் பயணம். வண்ண பேதங்களில் மயங்கி களித்து தெளிந்து வெளுத்து காலத்தின் அடர்த்தியில் கரையும் குமிழில் அன்பை அடைத்தது எது? குமிழ்கள் என்றும் வெளியிலிருந்து உடைபடுவதில்லை... (அன்பு) தளும்பும்வரை  வண்ணம் காட்டி  வண்ணம் கூட்டி உள்ளன்பு வற்றி  வெற்றிடமாகையில் உள்ளுடைந்து  இருப்பழிந்து முடியுது  குமிழின் பயணம். அன்பினால் உந்தப்பட்டு அன்போடு மோதிக்கொள்ளும் குமிழ்கள் உடைந்ததாய் வரலாற்றிலில்லை,  அறிவியலிலில்லை,  வாழ்வியலிலுமில்லை.

பூமி தொடா பிள்ளைப்பாதம்

புவியின் பேராற்றலும் பெருங்கருணையும் ஒருங்கே வெளிப்படும் தருணம், விதையொன்று தன்முயற்சியில் ஓடுடைத்து புவியோட்டையும் உடைத்து சூரிய தரிசனம் பெறும் அந்த ஒற்றை நொடி. உயர்ந்தோங்கி தழைத்து செழித்து உயிர்வளர்த்து உயிர்பெருக்கும் வாழ்நாளின் நொடியெலாம் தொப்புள்கொடி உறவு (மண்ணோடு) தொடர்வதால்தான் இது இங்கு இப்படி ஆயிற்று. மனிதர் நாம் மரங்களிடமிருந்து கற்றுக்கொள்ள, இருக்கிறது ஏராளம்! தாயின் தொப்புள்கொடி அறுத்த நொடியில், நம் பாதம் புவி பதிந்தால் தப்பிப்போம், விலங்குகள் பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் போல (நீரில் பிறக்கும் உயிரினங்கள் கூட பிறந்த நொடியிலிருந்தே நீரோடு உறவாடத்தொடங்கும்!) பூமி தொடா பிள்ளைப்பாதம், My foot!

உதிர்ந்த நட்சத்திரங்கள்

  தென்னமெரிக்க பசிபிக் பெருங்கடல் தீவொன்றில் மரமொன்றை வெட்ட முடிவு செய்தால், அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மரத்தை சுற்றி நின்று வசைபாடுவார்களாம். துயரம் தாளாது மரம் இறந்துபோகுமாம். அதன் பின் பயன்படுத்துவார்களாம். தாரே சமீன் பர் படத்தில் அமீர் கான் ஆசிரியர், டிஸ்லெக்சியா பாதித்த மாணவனின் பெற்றோருக்கு சொல்வார் இந்த கதையை. இன்று ஓரு சமுதாயமே தம் அடித்தட்டு மாணவர்களை மையத்தில் நிறுத்தி 'உன்னால முடியாது தம்பீ, முடியாது தங்கச்சீ! ஏன்னா நீங்க பள்ளத்தில நின்னு படிக்கறீங்க, அவங்க எல்லாரும் மேட்டுல நின்னு படிக்கறாங்க!' என 24*7 அவர்களை பல்வேறு ஊடகங்கள்வழி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறோம்.  கதையில் மரம் தற்கொலை செய்கிறது. நிசத்தில் நம் தம்பிகளும், தங்கைகளும்... பொங்கி வெடிக்கிறோம், ஆவேசக்குரல் எழுப்புகிறோம், சபதங்கள் செய்கிறோம், எதிர்க்கிறோம், ஆதரிக்கிறோம்...ஆனால் இந்த தம்பி தங்கைகளை கரையேற்ற யார் முயல்வது? மேடு பள்ளங்களை யார் சமன் செய்வது? அரசுதான் செய்யவேண்டும் என்பது இத்துப்போன வாதம், நாமும்தானே அரசு? மக்களால், மக்களுக்காக...! யாராவது ஏதாவது செய்வாங்க என்று எல்லோருமே மணலில் தலைபுதைந்த நெ

வயல்வெளியில் பாரதி!

பின் 70, முன் (19)80 களில் விவிதபாரதியும், இலங்கை தமிழ் வானொலி நிலையமும் எங்கள் காற்றில் கனவுகள் விதைத்த காலம். நாங்கள் வெயிலோடு விளையாடி மழையோடு மகிழ்ந்தாடி இருளின் பேய்களுக்கும் கொள்ளிவாய் பிசாசுகளுக்கும் பயந்து என எந்த உணர்வுகளோடு வீடு நுழைந்தாலும் எங்கள் கவனத்தை நொடியில் தன்பால் ஈர்த்துக்கொண்டதென்னவோ இ.த.வா.நிலையம்தான். இப்படி ஒரு மகத்தான சாதாரண நாளில் 'சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே?' 'சுராங்கனி, சுராங்கனி' 'கலைமகள் கைப்பொருளே உன்னை ரட்சிக்க ஆளில்லையா' 'பாட்டும் நானே பாவமும் நானே' 'மச்சான பாத்தீங்களா' 'இன்று பிறந்தநாள் காணும் மட்டகளப்பு தங்கராசுவுக்கு அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, சிற்றப்பா, பெரியப்பா, பெரியம்மா, அம்மம்மாவின் பிறந்தநாள் வாழ்த்துகள்' என கதம்பதான ஒலிக்குதிரைகள் எங்களை நோக்கி இல்லங்களின் ஜன்னல்களில் இருந்தெல்லாம் தாவிக்குதித்து பிடறி சிலிர்ப்பி ஓடி வருகையில் திடீரென என் பிடரி மயிரைப்பிடித்து இழுத்தது ஒரு பாட்டு! 'வயல் வெளியில் பாரதி' என்ற பொப்பிசை ஆல்பத்திலிருந்து ஒரு பாடல் இதோ உங்களுக்காக என ஏ.எஸ் ராஜா கரகர குரல

மதமாற்றத்துக்கு தயாராகுங்கள்!

  Breaking News! "புதியதொரு மதமாற்றத்திற்கு தயாராகிறது உலகு"!!!!!!! கரெக்டாதான் படிச்சீங்க டைட்டில, வாங்க போஸ்ட்டுக்குள்ள போகலாம் :-) புத்தம்புதிய மதம், உலகெங்கும்: 1. ஒன்றே இறை. அது தன் மூக்கு மேல் இட்டிருக்கும் உறை. 2. அதன் நெற்றியில், கழுத்தில், தலையில், கைகளில், கால்களில் அடையாளச்சின்னங்கள் எதுவும் இல்லை. 3. அதன் வாகனம், ஒன்றே ஒன்றுதான்; ஆம்புலன்ஸ். தன்னாலாகாவிட்டாலும் மருத்துவர் மெய்வருத்தக்கூலி தரும் என இந்த வாகனம். 4. இந்த மத ஆர்வலர்கள், உறுப்பினர்கள், பின்தொடர்வோர்... அனைவரும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் முக உறை அணிந்திருக்கவேண்டும். இதனால் இறைபணி எளிதாகிறது என்பதால். 5. முழுக்க முழுக்க தொழில்நுட்ப கட்டமைப்புகளால் ஆன இம்மதத்தில் சமூக இடைவெளி போன்ற அடிப்படை மத சேவைகள் தொழில்நுட்பம்கொண்டு செயல்படுத்தப்படும். 6. பொது வழிபாட்டிடங்கள் வேண்டாமென்று இந்த இறை விளித்தாலும் மக்கள் கேட்கப்போவதில்லை என்பதால் 'தொற்று ஒழிப்பு தீர்த்தம்' அவ்விடங்களுக்கு வரும் அனைவருக்கும் இறை வழிபாட்டின் முன்னும் பின்னும் இலவசமாக தரப்படும். பயன்படுத்துவோர் மட்டுமே மதத்தில் பற்றுடன்

அது

  மழை வேறு நதிவேறு கடல் வேறு பால் வேறு தயிர் வேறு வெண்'ணெய் வேறு ஒன்று பலதாகி பலது ஒன்றாகி ... ஒன்று பலதாகி நீயாகி நானாகி நான் வேறு நீ வேறாகி நீநான் ஒன்றாகி இன்னொன்றாகி நான் பற்றற்ற 'ஒன்றா' பற்றுள்ள பழுதா? கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் அல்ல அல்ல! கண்டதும் அதுவும் விண்டதும் அதுவே அண்டமும் அதுவே அணுவும் அதுவே அதுவும் அதுவே எதுவும் அதுவே!